புதன், 30 செப்டம்பர், 2015

இஸ்லாமிய குற்றவியல் சட்டம் அசாத்தையும்; அவரின் கள்ளக்காதலியையும் தண்டிக்குமா?


இஸ்லாமிய குற்றவியல் சட்டம் 
அசாத்தையும்; அவரின் கள்ளக்காதலியையும் தண்டிக்குமா?

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபகாதஹு

அண்மைக்காலமாக நமது நாட்டில் பிரபல அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றியத் தவறானச் செய்திகள் சமூக வலைத் தளங்களில் உலாவந்து கொண்டிருந்தனை நாம் அனைவரும் நன்கு அறிவோம் என்றாலும் அதன் உண்மைத் தன்மை மற்றும் அதன் ஆளஅகலம் எத்தகையது என்பது பற்றித் தெரியாமல் நாம் அது பற்றி எதுவும் பேச விரும்பவில்லை.

என்றாலும் சிறீ லங்கா முஸ்லிம் இணைய தளம் இன்று (28-09-2015) வெளியிட்டிருந்த செய்தியினைப் பார்த்ததன் பிறகு அதன் உண்மைத் தண்மை மற்றும் ஆளஅகலம் நன்றாகப் புலப்படுகின்றன ஆதலால் இனிமேலும் அமைதிகாக்கக் கூடாது என்பதற்க்காக இங்கு எமது கருத்தினையும் பதிவு செய்கின்றோம்.

எமது கருத்தினைப் பதிவு செய்வதற்கு முன்னதாகப் பின்வரும் மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும் எனக்கருதுகின்றேன்.

தனது படைப்பாளனாகிய அல்லாஹ்வுடனான தொடர்பு மற்றும் தான் இரண்டறக்கலந்து வாழுகின்ற மனிதர்களுடனான தொடர்பாடல் ஆகியவற்றைப் சிறந்த முறையில் பேணும் வகையிலான ஐந்து அதிமுக்கியமான உரிமைகளின் பாதுகாப்புக் கருதி அவைகள் மீதான அத்துமீறல்களுக்கு இஸ்லாம் மிகக்கடுமையான தண்டனைகளை விதித்திருக்கின்றது. இத்தகைய குற்றச் செயல்கள் அல்லாஹ்வுடைய மற்றும் சக மனிதர்களுக்கிடையிலான உறவில் பாரிய விரிசலை ஏற்ப்படுத்தவல்லதாகும்

அவைகளாவன :

1. மார்க்கம்
2. உயிர்
3. புத்தி
4. கற்பு
5. உடமை ஆகிய ஐந்துமாகும்

மார்க்கத்தினைப் பாதுகாத்தல் : 
ஒரு மனிதன் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து மதம் மாறினால் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

உயிரைப் பாதுகாத்தல் : 
ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொலை செய்தால் அம்மனிதனுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

புத்தியைப் பாதுகாத்தல் : 
ஒரு மனிதன் அல்லாஹ் அவனுக்கு வழங்கிய புத்தியை மது அருந்துவதன் மூலம் பேதலிக்கச் செய்து கொண்டால் அவனுக்கு 80 கசையடிகள் மூலம் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

கற்பைக் காத்தல் : 
எவர்கள் திருமணத்திற்கு முன் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்களோ அவர்களுக்கு 100 கசையடிகள் மூலம் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறே எவர்கள் திருமணத்திற்கு பின் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்களோ அவர்கள் கல்லால் அடித்துக் கொலை செய்யப்படுதல் வேண்டும் என்று இஸ்லாம் கட்டளை இடுகின்றது.

உடமைகளைப் பாதுகாத்தல் : 
யாராவது பிறரின் உடமைகளைத் திருடினால் அவனுடைய கரம் துண்டிக்கப்பட வேண்டு;ம் என்பது இஸ்லாத்தின் தீர்வாகும்.

மேற்படி குற்றவியல் தண்டனைகளுள் மிகக்கடுமையான தண்டனையாக இருப்பது திருமணமான பின்னரான விபச்சாரத்திற்குரிய தண்டனையாகும். ஏனெனில் மேற்படி குற்றங்கள் அத்தனையிலும் மிகவும் கொடூரமான குற்றமாக அது காணப்படுகின்றது ஒரு மனிதன் திருமானதன் பிறகு இவ்வாறான இழிசெயலில் ஈடுபடுவதானது சமூகத்தில் மிகப்பெரும் பாதிப்பினை தோற்றுவித்து விடுகின்றது.

உதாரணமாக ஒருவன் இன்னொருவனுடைய மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் போது அது அவளது கணவன் பிள்ளைகள் சகோதர சகோதரிகள் மற்றும் பெற்றார் போன்ற இன்னும் பலரைப்பாதிக்கின்றது அவர்களின் எதிர்காலத்தைக் கேழ்விக்குறியாக்கி விடுகின்றது ஆதலால்தான் அப்படிப்பட்ட பிறர் வாழ்கையிலும் களங்கத்தினை ஏற்படுத்தும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்ற திருமணமான ஆன் பெண் ஆகிய இருவரையும் எவ்வித பாகுபாடோ தயவுதாட்ச்சண்யமோ காட்டாது கல்லால் எறிந்து கொலை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் விதித்திருக்கின்றது.

இப்படியான இழிசெயலிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் இஸ்லாம் பல்வேறு வரையறைகளை எமக்கு வகுத்துத் தந்துள்ளது அவற்றுக்கு மாறு செய்யும் போது இப்படியான இழிவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்ப்படுவது தவிர்க்கமுடியாததே.

இஸ்லாத்தின் வரையறைகள்

1. நான்கு சாட்ச்சிகள் : 
அனைத்து விடயங்களுக்கும் அதிகபட்ச்சம் இரண்டு சாட்ச்சிகளைக் கோருகின்ற இஸ்லாம் விபச்சாரத்திற்கு மாத்திரம் நான்கு சாட்ச்சிகளைக் கோருகின்றது காரணம் விபச்சாரம் என்பது அந்த அளவு கடினமான ஒரு குற்றமாக உள்ளது. ஆகவே அது சர்வசாதாரணமாக மக்களுக்கு மத்தியில்; பேசப்படக்கூடாது என்பதற்காக இந்த அளவு வலுவான சட்டங்கள் இடப்பட்டுள்ளன.

2. திரைமறைவில் வாழுதல்
உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால்ää திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல. (அல்-குர்ஆன் : 33-53)

இந்த இடத்தில் கவனிக்கவேண்டிய விடயம்  உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; எனும் வாசகமாகும் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களுக்கும் அன்னாரின் அருமை ஸகாபாக்களுக்குமே உள்ளங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள திரை அவசியம் என்றால் நாமக்கு அது மிகவும் அவசியானதாகும்.

3. வீட்டைவிட்டு வெளிச்செல்லாமை
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசத்தங்களை நீக்கிää உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (அல்-குர்ஆன் : 33-33)

ஒரு பெண் தனது பரிசுத்தத்தண்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாகவிருந்தால் அத்தியவசியத் தேவைகளுக்கே அல்லாது தனது வீட்டைவிட்டு வெளிச்செல்வதைத் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்.

4. பார்வையைத் தாழ்த்துதல்
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; 


5. தங்கள் அலஙங்காரங்களை மறைத்து வாழுதல்.

தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் : 24-30-31)

6. பேச்சில் நளினம் தவிர்த்தல்.

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசங்கள். (அல்-குர்ஆன் : 33-32)

7. அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்காமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு அந்நிய ஆனும் பெண்ணும் அவர்களுடன் மூன்றாவது நபராக சைத்தான் இல்லாமல் தனித்திருக்கமாட்டார்கள் (நூல்: திர்மிதி)

அசாத்துக்கும் அவனது கள்ளக்காதலிக்குமான இஸ்லாத்தின் தண்டனை

இத்துனை தடைகளையும் தாண்டி ஒருவன் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றான் என்றால் நிச்சயமாக அவன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவனேயாவான்.

இதன்படி உவைஸ் ஹாஜியாரின் மனைவியை அபகரித்துச் சென்ற அசாத் சாலியிற்கும் அவனுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட உவைஸ் ஹாஜியாரின் மனைவியிற்க்கும் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள திருமணத்திற்குப்பின்னரான விபச்சாரத்திற்குரிய தண்டனையாகிய மரண தண்டனை அனைவர் முன்னாலும் பகிரங்கமாக நிறைவேற்றப்படல் வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் : விபசாரியும், விபசாரனும் - இவ் விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல்-குர்ஆன் : 24:2)

அவர்களிருவரும் இதிலிருந்து தப்பித்தால் நாமனைவரும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதனை நாமனைவரும் மறந்து விடக்கூடாது.

அடுத்த குற்றவாளி

அடுத்து நாம் இன்னுமொரு விடயத்தினையும் இந்த இடத்தில் கவனித்தல் அவசியமாகும் அதாவது இஸ்லாம் ஒரு போதும் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்புச் சொல்லும் மார்க்கம் கிடையாது அது நன்றாக ஆராய்ந்து நோய்க்கான காரணம் என்னவென்பதனைக் கண்டறிந்து அதற்க்கான வைத்தியத்தினையே முதலில் முற்படுத்தும். உதாரணமாக நுழம்பை இல்லாதொழிப்பதற்கு முன்னதாக நுழம்பு உருவாவதற்க்கான காரணிகளாகவுள்ள குப்பைக்கூளங்கள் கழிவுப் பொருட்க்கள் நீர்த்தேக்கங்கள் போன்றவைகள் அகற்றப்படல் வேண்டுமோ அவ்வாறே குற்றம் நிகழ்வதற்கு முன்னர் அதற்க்கானக் காரணிகள் களையப்பட்டிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால் இஸ்லாமிய வரையறைகள் பேணப்பட்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால் இப்படித்தான் கைசேதப்படவேண்டி ஏற்படும்.

எனவே அசாத் சாலி விடயத்தில் முதல் குற்றவாளி உவைஸ் ஹாஜி அவர்களேயாவார்கள் ஏனெனில் இஸ்லாமிய வரையறைகளுக்கப்பால் அசாத் சாலியுடன் தனது மணைவியை அன்னியோண்யமாகப் பழக அனுமதித்தமை அவர் செய்த மிகப்பெரும் குற்றமாகும். 

நபி (ஸல்) அவர்களது மணைவிமார்களுக்கே அல்லாஹ் பின்வருமாறு கட்டளை இடுகின்றான் “நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால்ää திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; (அல்-குர்ஆன் : 33-53)

இந்த இடத்தில் உங்கள் இருதயங்களுக்கும் அவர்கள் இருதயங்களுக்கும் தூய்மையாக இருக்கும்; என்று கூறப்பட்டுள்ளதனைப் பார்க்கின்றோம் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களுக்கும் அன்னாரின் அருமை ஸகாபாக்களுக்குமே உள்ளங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள திரை அவசியம் என்றால் நமக்கு அது எந்த அளவு அவசியமானதாகும் என்பதனை நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.

எனவே இதனை அனைவரும் ஒரு பாடமாக எடுத்து தங்கள் மனைவிமார்களையும் பெண்மக்களையும் இஸ்லாமிய வரையறைக்குள் வாழ வைத்து நமது குடும்ப கௌரவத்தினைப் பாதுகாத்துக் கொள்ள முன்வருவோமாக.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்



புதன், 23 செப்டம்பர், 2015

இரு பெருநாட்களும் அதன் ஒழுங்குவிதிகளும்


இரு பெருநாட்களும் அதன் ஒழுங்குவிதிகளும்

இஸ்லாத்தின் மிக முக்கிய சிறப்பம்சங்களுள்  ஒன்றுதான் இரு பெருநாள் தினங்களுமாகும் இது   இஸ்லாத்தின் வெளிப்படையான அடையாளச் சின்னங்களில் முக்கிய ஒன்றாகும்  இதை நாம் மதித்து கண்ணியப்படுத்துதல் தக்வா எனும் பயபக்தியைச் சார்ந்ததாகும்.  ஏனெனில் வல்ல அல்லாஹ் கூறுகிறான்: 

“அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை யார் கண்ணியப் படுத்துகின்றாரோ நிச்சயமாக அது உள்ளங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடேயாகும்”. (22:32) 

இப்புனித நாளைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துள்ளார்கள்.

''நபி (ஸல்)  அவர்கள் மதீனா நகருக்கு வருகை தந்த போது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு திருநாள்கள் இருந்தன. அவ்விரு நாட்களிலும் அவர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி (ஸல்)  அவர்கள் ''இவ்விரு நாட்களை விடச்சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானி தியாகத் திருநாள்,  மற்றும் ஃபிதர் ஈகைத் திருநாள் ஆகிய இரண்டுமாகும்'' எனறார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபதாவூத், நஸயீ

எனவே இப்புனித நாளை நாம்  நபி (ஸல்)  அவர்கள் காட்டித்தந்த வழியில் நின்று அனுஷ்ட்டிப்பது  அவசியமாகும்;. இதுவே ஏனைய சமூகத்தினர்களதும் நமதும் பெருநாளைக்குள்ள வேறுபாடாகும்.

முதலாவது தக்பீர் சொல்லுதல்

முதலில் மகிழ்ச்சிகரமான இவ்விருநாட்களை நாம் தக்பீர் முழக்கத்துடன் வரவேற்க வேண்டும்;. 

நோன்புப் பெருநாள் தக்பீர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்ய, உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமை படுத்தி தக்பீர் செய்து அவனுக்கு நன்றி செலுத்துவதையுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)      (அல்குர்ஆன் -  2:185)

ஹஜ்ஜுப் பெருநாள் தக்பீர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம் எனினும் குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் சென்றடைவதில்லை ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனைச் சென்றடையும்;  அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தி  தக்பீர் செய்யும் பொருட்டு  இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்;   (அல்குர்ஆன் - 22:36-37)

அல்லாஹ் எமக்கு செய்திருக்கும் அருட்களுக்கும் இன்னும் இவ்வாறான புனிதத் தினங்களை வழங்கியதற்கும் நாம் நன்றி செலுத்தும் வகையில் அல்லாஹ்வை பெருமைப் படுத்தும் விதமாக, அன்றைய தினங்களில் தக்பீர் சொல்லுதல் சுன்னத்தாக ஆக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் அதிகமதிகம் தக்பீர் தஸ்பீஹ் போன்றவைகளை சொல்வதில் கழிக்கப்படல் வேண்டும்.

குளித்லும் தொழுதலும்

அடுத்ததாக நாம்  இந்நாளை ஆனந்தத்துடன் கொண்டாடுவதற்கு முன் தொழுகையைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.

''நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்து பலியிடுவோம் யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழி முறையைப் பேணியவராவார்'' என்று நபி (ஸல்)  அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பர்ரா  நூல்: புகாரி

நபி (ஸல்)  அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு (மைதானத்திற்கு) செல்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்த பின்னர் மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு போதனை செய்வார்கள், (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள்,  ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப நாடியிருந்தால் அனுப்புவார்கள். ஏதேனும் (கட்டளையிட வேண்டியிருந்தால் கட்டளையிடுவார்கள் பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். 
அறிவிப்பவர்: அப ஸயீத் அல் குத்தி நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னதாகக் குளித்து சுத்தம் செய்து கொள்வது சுன்னத்தாகும் அத்துடன் தன்னிடம் இருக்கக்கூடிய ஆடைகளில் சிறந்ததை அணிவதுடன் தம்மிடம் இருக்கக்கூடிய வாசனைத் திரவியங்களிலும் பூசிக்கொள்ளுதல்; நபி வழியாகும். ஆனால் பெண்கள் தங்களின் அலங்காரங்களை வெளிக்காட்டாத வகையில் ஆடையணிவதுடன் வாசனை எதுவும் பூசிக்கொள்ளாமல் தொழுகைக்குச்; செல்ல வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளில் அந்நிய ஆண்கள் இல்லாத போது தங்களை அலங்கரித்து வாசனைகளை பூசிக்கொள்வதில் தவறேதும் கிடையாது. பெருநாள் தொழுகை நடை பெறுவது பள்ளிவாயிலாக இருந்தால் மாதவிடாய், மற்றும் பிரசவத்தீட்டையுடைய  பெண்கள் செல்லக்கூடாது ஆனால் தொழுகை பள்ளி வாயிலுக்கு வெளியே மைதானத்தில் நடைபெறுமாகவிருந்தால் அவர்கள் தொழுகையில் கலந்து கொள்ளாது பயான் மற்றும் தக்பீர் சொல்லுதல் போன்ற ஏனைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லலாம். 

பெருநாள் தொழுகையைக் கழாச் செய்தலும் அதற்குரிய நேரமும்.

ஒரு வாகனக் கூட்டத்தினர் நபி (ஸல்)  அவர்களிடம் வருகை தந்து தாங்கள் நேற்று பிறையைப் பார்த்தாக சாட்சி அளித்தனர். நபி É அவர்கள் நோன்பை விடுமாறும், காலை விடிந்ததும் தொழும் திடலுக்கு செல்லுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். 
அறிவிப்பவர்: அப உமைர்  நூல்கள்: அபதா வூத் நஸயீ

மேற்படி அறிவிப்பு பெருநாள் தொழுகை ழுஹருடைய நேரத்திற்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கும், அவ்வாறு அதற்கு உரிய நேரத்தில் அதனை நிறைவேற்ற முடியாது போனால் மறுநாள் அதன் நேரத்தில்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கும் சான்றாகும்
.
இரு பெருநாளைக்கும் இடையிலான வேறுபாடுகள்.

நோன்புப் பெருநாளைக்குரிய தக்பீர் சவ்வால் பிறை தெரிபட்டால் அன்று மஃரிபிலிருந்து  மறு நாள் பெருநாள் தொழுகை வரை சொல்லப்படும். 

ஹஜ் பெருநாளைக்குரிய தக்பீர் இரு விதமாக சொல்லப்படும். 

1. துல்ஹஜ் பிறை 01 ஆம் நாள் மஃரிபிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் அதாவது துல்ஹஜ் 13 ம் தினத்தின் அஸர் வரை பள்ளி வாயில்கள், கடைத்தெருக்கள், வீடுகள் போன்ற அனைத்து இடங்களிலும் தக்பீர் சொல்லுதல்  ஆண்கள் சப்தமாக கூறுவது விரும்பத்தக்கது பெண்கள் சத்தமாகச் சொல்லக் கூடாது. 

2. இரண்டாம் வகை அரஃபாவுடைய தினம் அதாவது துல்ஹஜ் 9ம் நாள் சுபஹிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் அதாவது துல்ஹஜ் 13 ம் தினத்தின் அஸர் வரை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் தக்பீர்  சொல்லுதலாகும்.

நோன்புப் பெருநாளைக்குத் தொழச் செல்லுமுன் ஒற்றைப்பட ஈத்தம்பழங்களை சாப்பிட்டு விட்டுச் செல்லுதல் சுன்னத்தாகும் ஈத்தம் பழம் கிடைக்கவில்லையாயின் ஏதாவது தன்னிடம் இருக்கக்கூடிய உணவை சாப்பிட்டு விட்டுச் செல்லுதல் சிறந்ததாகும்.

ஹஜ்ஜுப் பெருநாளைக்குத் தொழச் செல்லுமுன் எதுவும் சாப்பிடாமல் செல்வது சுன்னத்தாகும் அவ்வாறே தான் குர்பான் கொடுப்பவராக இருந்தால் அவர் குர்பான் இறைச்சியையே அன்றைய தினம் தொழுதுவிட்டு வந்து சாப்பிட வேண்டும் இதுவே அவருக்கு சுன்னத்தாகும் அவர் குர்பான் கொடுக்கவில்லையாயின் தன்னிடம் இருக்கக்கூடிய உணவைச் சாப்பிடலாம்.

நோன்புப் பெருநாளைக்குத் தொழுவதற்கு முன் ஜக்காத்துல் பித்ர் கொடுப்பது கடமையாகும். தொழுகை முடியும் வரை பிற்ப்படுத்துதல் கூடாது.

ஹஜ்ஜுப் பெருநாளைக்கு தொழுகை முடிந்த பிறகு உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்தாகும். தொழுகைக்கு முன் கொடுக்கக் கூடாது.

ஜக்காத்துல் பித்ர் கொடுப்பது ரமழானின் இறுதி நாளிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்லும் வரையிலாகும். ஓரிரு தினங்கள் முன்னதாகக் கொடுத்து விடுவதில் தவறில்லை.

உழ்ஹிய்யா கொடுப்பது பெருநாள் தினத்திலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் என்னும் மூன்று தினங்களுடன்  துல்ஹஜ் 10, 11, 12, 13  ஆகிய நான்கு நாட்க்களுமாகும். பெருநாளன்று கொடுப்பது மிகவும் ஏற்றமுடையதே.

குர்பானியை நிறைவேற்றுபவர் தனது உழ்ஹிய்யாவின் இறைச்சியை உண்பது நபிவழியாக இருப்பதுடன் அல்லாஹ்வின் கட்டளையாகவும் உள்ளது.

“அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுள்ளோருக்கும் உண்ணக் கொடுங்கள்”( அல்குர்ஆன், 22:28) 

தொழுகைக்குச் செல்லும் போது ஒரு வழியாலும்  திரும்பி வரும்  போது வேறு வழியாலும் செல்லுதல் நபிவழியாகும்.


தவிர்த்துக் கொள்ள வேண்டியவைகள்.

இசையுடன் கூடிய பாடல்களை கேட்டல்,  
திரைப்படங்கள் பார்த்தல்
ஆண்கள் பெண்கள் கலந்து கலியாட்டங்களில் ஈடுபடுதல்
பட்டாசு கொழுத்துதல் 
மற்றும் ஏனைய அணைத்துவிதமான வெறுக்கத்தக்க காரியங்களிலும் ஈடுபடுதல் போன்றவைகளை அந்தப் புனித நாட்களில் தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

பெருநாள் வெள்ளிக்கிழமையில் வந்தால்.

பெருநாள் வெள்ளிக்கிழமையில் ஏற்படுமேயானால் இரண்டு தொழுகையையும் வவ்வேறாக தொழுதாக வேண்டுமா அல்லது இரண்டில் ஒன்றை மட்டும் தொழுதால் போதுமா? என்ற கேள்வி எழலாம். 

இது பற்றி நபி (ஸல்)  அவர்கள் பின்வருமாறு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
''இன்றைய தினம் இரு பெருநாள்கள் வந்துவிட்டன. யார் விரும்புகிறாரோ அவருக்கு பெருநாள் தொழுகை ஜும்ஆவுக்கும் போதுமானதாகும். ஆனால் நாம் ஜும்ஆ நடத்துவோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: அபஹரைர  நூல்கள்: அபூதாவூத் இப்னுமாஜா

மேற்படி அறிவிப்பின் மூலம் பெருநாள் தொழுகை தொழுதால் ஜும்ஆ தொழுகை விரும்பினால் தொழலாம் இல்லையெனில் விட்டுவிடலாம் என்று நபி(ஸல்)  அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் தொழுலாமா?

பெருநாள் தொழுகைக்கு முன்பாக லுஹர் தொழுகை உட்பட எத்தொழுகையும் தொழக்கூடாது.

நபி (ஸல்)  அவர்கள் நோன்பு பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ  நூல்கள்: புகாரி முஸ்லிம்


நபி (ஸல்)  அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்பு எத்தொழுகையும் தொழமாட்டார்கள் வீட்டிற்கு நபி (ஸல்)  அவர்கள் திரும்பினார்கள். இரண்டு ரக்அத் தொழுதார்கள். அறிவிப்பவர்: அபஸயீத   நூல்: இப்னுமாஜா

பெருநாள் தொழுகை பள்ளிவாயலுக்கு வெளியில் மைதானத்தில் நிறைவேற்றப்படுமானால் அத்தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தவொரு தொழுகையும் தொழக்கூடாது. ஏன்றாலும் வீட்டில் தொழுவதில் ஆட்சேபனை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறே பெருநாள் தொழுகை பள்ளிவாயலில் நடாத்தப்பட்டால் பள்ளிவாயலுக்குச் செல்பவர் பள்ளிக் கானிக்கை இரண்டு ரகஅத்து தொழுவது அவசியமாகும்.

நன்றி : அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம 



செவ்வாய், 15 செப்டம்பர், 2015

ஹஜ் - உம்றா செய்யும் முறை சுருக்கம்

كيفية الحج والعمرة باختصار

ஹஜ் - உம்றா செய்யும் முறை

ஹஜ்ஜின் வகைகள் 

அவரவர் வசதிக்கு ஏற்ப்ப மூன்று விதமாக ஹஜ்ஜை நிறைவேற்ற முடியும்.

1. இஃப்ராத் : ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுதல்.

இதற்கு மீக்காத்தில் அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன் என்று நிய்யத் வைக்க வேண்டும் இவர் உம்ரா செய்யாது ஹஜ்ஜை மட்டும் செய்வார் இவர் குர்பான் பொடுப்பது கடமை இல்லை.

2. கிறான் : ஹஜ்ஜையும் உம்றாவையும் ஒன்றாக சேர்த்து  நிறைவேற்றுதல்.

இதற்கு மீக்காத்தில் அல்லாஹ{ம்ம லப்பைக்க உம்றத்தன் வஹஜ்ஜன் என்று நிய்யத் வைக்க வேண்டும். 

இவர் உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமை களையக் கூடாது அதே இஹ்ராத்துடன் ஹஜ்ஜையும்  நிறைவேற்றிய பிறகே இஹ்ராமை களைதல் வேண்டும். ஹஜ் கிரான் செய்பவர்  ஓரு ஆடு குர்பானி கொடுப்பது கடமையாகும்.

3. தமத்துஉ : உம்றாவையும் ஹஜ்ஜையும் வௌ;வேறாக நிறைவேற்றுதல்.

இதற்கு மீக்காத்தில் அல்லாஹ{ம்ம லப்பைக்க உம்றத்தன் என நிய்யத் வைத்து இஹ்ராம் தரித்து உம்றாவை நிறைவேற்றியதன் பிறகு இஹ்ராமைக் களைந்திட வேண்டும். பிறகு. துல்ஹஜ் பிறை 8ல் தான் இருக்கும் இடத்திலேயே அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன் என நிய்யத் வைத்து ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். இவரும் ஓரு ஆடு குர்பானி கொடுப்பது கடமையாகும்.

ஹஜ்ஜின் (பர்ளு )கடமைகள் -4

இஹ்ராம் தரித்தல்
அரஃபாவில் தங்குதல்
தவாப் செய்தல்
ஸயி செய்தல்

ஹஜ்ஜின் (வாஜிப்) கடமைகள் 

மீகாத்தில் இஹ்ராம் கட்டுதல்
அரபாவில் சூரியன் மறையும் வரை தங்குதல்
முஸ்தலிபாவில் தங்குதல்
பிறை 11,  12,  13 இரவுகளில் மினாவில் தங்குதல்
அகபா ஜம்ராத் தூண்களில் வரிசைப்படி கல் எறிதல்
தலைமுடி மழித்தல் அல்லது குறைத்தல்
விடை பெறும் தவாப் அல் -வதாஉ செய்தல்

ஹஜ்ஜின் ஸ{ன்னத்கள் 

இஹ்ராம் தரிக்கும் பொழுது குளித்தல்
ஆண்கள் வெள்ளை ஆடைகளில்; இஹ்ராம் தரித்தல் 
தல்பியா சொல்லுதல்
அரஃபா நாளின் இரவு (பிறை 8 மாலையில்) மினாவில் தங்குதல்
மக்கா நகருக்குச் சென்றவுடன் செய்யும் தவாபில் ஆண்கள் மட்டும் முதல்         மூன்று சுற்றுகளில் சற்று வேகமாக நடக்குதல்.
வலது புஜம் திறந்த நிலையில் மேலங்கி அணிதல் 
ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுதல்

ஹஜ் - உம்றா செய்யும் முறை

உம்றாவின் கடமைகள் -4

1. இஹ்ராம்
2. தவாப்
3. ஸயி
4. தலைமுடி மழித்தல் - குறைத்தல்

உம்றா செய்யும் முறை

இஹ்ராம்

உம்றா நிறைவேற்றப் புனிதப் பய ணம் மேற்கொள்பவர் தமக்குரிய (எல்லை) மீகாத் வந்ததும் குளித்து இஹ்ராம் கட்டி அல்லா ஹ{ம்ம லப்பைக்க உம்றத்தன் என்று நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும். நிய்யத் வைத்தலிலிருந்து புனித கஃபாவை அடையும் வரை தொடர்ந்து தல்பிய்யாவைச் சொல்லிக் கொண் டிருக்க வேண்டும். 

தல்பிய்யா

لَبَّيْكَ الَّلهُمَّ لَبَّيْكَ  لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ  اِنَّ الْحَمْدَ وَ النِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشّرِيْكَ لَكَ

லப்பை(க்)க அல்லாஹ{ம்ம லப்பைக்ää லப்பை(க்)க லா சரீக்க ல(க்)க லப்பைக்ää இன்னல் ஹம்த வன்நிஃ;மத்த லக்க வல் முல்க்க லா சரீக்க லக் 
மக்கா சென்றதும் கஃபாவுக்குச் செல்ல வேண்டும். அங்கு வலது காலை வைத்து 

بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَي رَسٌوْلِ اللهِ اَلَّلهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ

பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸ_லுல்லாஹி அல்லாஹ{ம்மப்தஹ் லீ அப்வாப ரஹ்மத்திக்க என்று ஓதியவாறு உள்ளே நுழைய வேண்டும்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால்! ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்மீது உண்டாவதாக யா அல்லாஹ் எனக்கு உன் அருள் வாயில்களைத் திறந்து விடுவாயாக. என்ற துஆவை ஓத வேண்டும் அத்துடன் தல்பியா ஓதுவதை நிறுத்தி விட்டு உடனடியாகத் தவாபை ஆரம்பிக்க வேண்டும்.

தவாப்

ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடல் அல்லது வலது கையால் தொட்டு கையை முத்தமிட்டு விட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூறி சுற்றைத் தொடங்க வேண்டும். முத்தமிட அல்லது தொட முடியவில்லையெனில் அதை நோக்கி கையால் சைக்கினை செய்ய வேண்டும். சைகை செய்த கையை முத்தமிடக் கூடாது.

இவ்வாறு ஹஜருல் அஸ்வத் கல்லில் ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வத் கல்லை வந்தடையும் போது தவாபின் ஒரு சுற்று முடிவடையும் இவ்வாறு ஏழுமுறைகள் சுற்றி வர வேண்டும். 

முதல் மூன்று சுற்றுக்களில் ரமல் அதாவது ஓரளவு வேகமாக நடக்க வேண்டும்.

இஹ்ராமின் மேலங்கியை வலது அக்குளின் கீழ் சுற்றி அதன் இரு முனைகளையும் இடது தோள் புஜத்தின் மீது போட்டு வலது தோள் புஜம் திறந்திருக்க வேண்டும். 
ருக்னுல் யமானியில் இருந்து ஹஜ்ருல் அஸ்வத் வரும் வரை ரப்பனா ஆத்தினா பித்துன்யா  எனும் துஆவை முழுமையாக ஓத வேண்டும்ää

தவாப் முடிந்த பிறகு ம(க்)காமே இப்ராஹீமுக்கு எதிரில் வந்து இரு ரக்அத் தொழ வேண்டும். முதல் ரக்அத்தில் பாத்திஹா சூராவுக்குப் பிறகு குல் யா அய்யுஹல் காகுபிரூன் சூராவையும் இரண்டாம் ரக்அத்தில் பாத்திஹா சூராவுக்குப் பிறகு குல் ஹ{ வல்லாஹ{ அஹத் சூராவையும் ஓத வேண்டும்.

ஸயி

பிறகு ஸபா- மர்வாவிற்கு இடையில்  ஸயி (தொங்கோட்டம்) செய்ய வேண்டும். முதலாவது ஸபா மலை மீது ஏறி நின்று கஃ;பாவை முன்னோக்கியவாறு

 اِنَّ الصَّفاَ وَ الْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ  فِمَنْ حَجَّ الْبَيْتَ أوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أن يَّطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ  خَيْرًا فَاِنَّ اللهَ شَاكِرٌ عَلِيْمٌ 

எனும் அல்-குர்ஆன் வசனத்தை ஓத வேண்டும். அதனைத் தொடர்ந்து ஸபா வில் பின் வரும் துஆவையும் ஓத வேண்டும்.

اللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ  لا اله اِلاَّ اِللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكَ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَي كُلَِ شَيْءٍ قَدِيْرٌ  لا َالهَ اِللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ أنْجَزَ وَعْدَهُ وَ نَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ  

அல்லாஹ{ அக்பர்ää அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{அக்பர் ää லா இ லாஹ இல்லல்லாஹ{ வஹ் தஹ{ லா ஷரீக லஹ{ லஹ{ல் முல்கு வலஹ{ல் ஹம்து யுஹ்யீ வ யுமீத்து வஹ{வ அலா குல்லி ஷை யின் கஸீர்ää லா இலாஹ இல்லல்லாஹ{ வஹ்தஹ{ லாஷ ரீக்கலஹ்ää அன் ஜஸ வஅ;த ஹ{ வ நஸர அப்தஹ{ வ ஹஸ மல் அஹ்ஸாப வஹ்தஹ் 

பிறகு கைகளை உயர்த்தி தமது தேவைகளை வேண்டி துஆ செய்ய வேண்டும். இவ்வாறு மூன்றுமுறை ஓத வேண்டும் பிறகு ஸபாவிலிருந்து மர்வா மலைக்குச் செல்ல வேண்டும். 

அவ்வாறு செல்லும் வழியில் பச்சை விளக்குகளால் அடையாளமிடப்பட்ட பகுதியில் வேகமாக நடக்க வேண்டும். பிறகு மர்வாவை அடைந்ததும்; ஸபாவில் செய்தது போன்று செய்ய வேண்டும். அல்-குர்ஆன் வசனத்தை ஓதக்கூடாது. இப்போது ஸயியின் ஒரு சுற்று முடிந்து விடும் பிறகு மர்வாவிலிருந்து ஸபாவுக்கு செல்லும் போது ஸயியின் இரண்டு சுற்றுக்கள் முடிந்து விடும். இவ்வாறு ஏழு முறைகள் செய்ய வேண்டும்.

தலைமுடி மழித்தல் அல்லது குறைத்தல்
ஸயி முடிந்ததும் தலைமுடியை மழித்த்துக் கொள்ள அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். குறைப்பதாயின் தலை முழுவதிலிருந்தும்; குறைத்தல் வேண்டும். 

ஹஜ் செய்முறை 

மீக்காத்தில் இஹ்ராம் கட்டுதல்
தவாப் செய்தல்
ஸயி செய்தல் 
ஹஜ்ஜு தமத்துவு செய்பவர் தலைமுடியைக் கத்தரித்து இஹ்ராம்                           களைதல் வேண்டும்.

பிறை 8 ல்

மினாவுக்குச் செல்லுதல்
ஹஜ்ஜு தமத்துஉ    செய்பவர் தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து                   கொண்டே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைக்க வேண்டும்.

பிறை 9 ல்

அரபா மைதானத்திற்குச் செல்ல வேண்டும்.
அரபாவில் சூரியன் மறையும் வரை    தங்கியிருக்க வேண்டும். 
பிறகு முஸ்தலிபாவில் அன்றய இரவு தங்க வேண்டும்.

பிறை 10 ல் 

ஸ{ப்ஹ{ தொழுததன் பிறகு முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்குச் செல்ல          வேண்டும். 
அகபா தூண்களில்; கல் எறிய வேண்டும்ää 
குர்பானி கொடுக்க வேண்டும்ää 
தலை முடியை மழிக்க அல்லது குறைக்க வேண்டும்ää 
தவாப் அல்-இபாழா செய்ய வேண்டும்; 
ஸயி  செய்ய வேண்டும்; 

பிறை: 11, 12, 13 

மினாவில் இரவு தங்கி ஜம்றா தூண்களில் நன்பகலுக்குப் பிறகிலிருந்து               கல் எறிய வேண்டும்.  இவ்வாறு இரவு முழுதும் எறியலாம். பிறை 12 ல்              மஃக்ரிப்புக்கு முன்னரே அங்கிருந்து வெளியேறினால் அந்த இரவு மினாவில்      தங்குவது கடமை இல்லை.

இறுதியாகப் பிரியாவிடைத் தவாப்; செய்தல் இந்த தவாபிற்க்குப் பிறகு                 தாமதிக்காமல் மக்காவை விட்டு வௌியேறிவிட வேண்டும்.




මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...