வியாழன், 23 ஜூலை, 2015

எமது மாவட்ட முஸ்லீம்களும், பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவமும்

எமது மாவட்ட முஸ்லீம்களும், 
பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவமும்

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபகாத்ஹ்

இலங்கை சுதந்திரம் பெற்று இன்று 67 வருடங்களை கடந்த பின்பும் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டும்ää பறிக்கப்பட்டும்; கொண்டிருகின்றனää அண்மைக்காலமாக இலங்கை முஸ்லீம்களை சகல துறைகளிலும் நலிவுற்ற ஒரு சமூகமாக  ஆக்குவதற்கான அனைத்து செயற் திட்டங்களையும்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இந்த நாட்டை ஆட்சி செய்த சிறிலங்கா சுதந்திர கட்;ச்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி எக்குறையுமின்றி மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் கட்சிதமாக செய்து வந்தது. இலங்கை முஸ்லிம்களின் கமூக, சமய மற்றும் அரசியல் வரலாற்றில் அந்த நாட்க்கள் மிகப் பெரும் சவால்கள் நிறைந்ததாக தடம் பதித்து வந்ததனை நாம் அனைவரும் மறந்நிருக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு எதிரான வண்முறைகள் நாளுக்கு நாள் மிகவும் தீவிரம் அடைந்து சென்று கொண்டிருந்த  அந்த நாட்கள் நமது அரசியல் மற்றும் சமயத் தலைமகளின் அதி தீவிர பலவீனத்தையே பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. இந்த மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒரு ஆட்ச்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் அரியதொரு வாய்ப்பினை நமக்கு வழங்கியிருந்தான். அதன் பயனாக நாம் கடந்த சுமார் 5-6 மாத காலங்கள் ஓரளவு நிம்மதியாக வாழ முடிந்தது.

இதற்கிடையில் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒரு பொதுத் தேர்தலின் ஊடாக முஸ்லீம்களின் பலத்தை மீண்டும் ஒரு முறை பதிவு செய்யும் வாய்ப்பினை நமக்கு வழங்கியுள்ளான். எனவே இவ்வாறான இந்த அசாதாரண சூழ் நிலையில் நாம் தொடர்ந்தும்; ஒருவரை  ஒருவர் விமர்சித்துக் கொண்டும் குறைச் சொல்லிக் கொண்டும் காலத்தைக் கடத்தாது சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களும்; இதை தமக்கு விடப்பட்டிருக்கும் சவாலாக ஏற்று அனைத்து விதமான கட்ச்சி இயக்கம் போன்ற வேற்றுமைகளைக் கடந்து நின்று இப்படியான சவால்களை எதிர்கொள்வதற்க்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு திருப்பு முனையாக இச்சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளுதல் மிக மிக அவசியமாகும்.

ஏனெனில்  நமது சமூகம் கமூக, சமய, அரசியல் வரலாற்றுப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறுபட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பல்வேறுத் தடைகளைத் தாண்டித்தான் பயனித்திருக்கின்றது என்பதுவே நமது நீண்டகால வரலாற்றுண்மை.

எனவே நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் நாம் ஏதோ ஒரு அடிப்படையில் எமது கருத்து முறன்பாடுகளை புறந்தள்ளி எமது மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்து கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி ஆராய்தல் காலத்தின் தேவையாகும். அதற்கான அரியதோர் சந்தர்ப்பமாக இத்தேர்தல் அமைந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தினை நாம் தவற விட்டு விடுவோமானால் இனிமேலும் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தினை நாம் எதிர்பார்க்க முடியாது.

இந்த நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம்,  எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் நிலை எப்படி இருக்க வேணடும்;? அவர்களின் ஜனநாயக அரசியல் போராட்டம் எப்படி அமைய வேண்டும், இந்த நாட்டில் ஆட்ச்சியாளர்களாலும், அராஜகவாதிகளாலும் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட, இன்னும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் என்ன? ஏனைய சமூகங்களுடனான அவர்களின் உறவு எப்படி அமைய வேண்டும்? முஸ்லீம் மக்களுக்கிடையில் காணப்படும் அரசியல் ரீதியிலான முறன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி? அதன் அவசியம் எத்தகயது? என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டுமாகவிருந்தால் நமது முஸ்லிம் அரசியல் கட்ச்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஓரணியில் தனிச்சின்னத்தில் போட்டி இட்டிருக்க வேண்டும் அதை நமது தலைமைகள் தவறி விட்டன. 

இந்நிலையில் நாம் இம்முறையாவது நமது அனுராதபுர மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்றுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். அது எந்தக் கட்ச்சியின் எந்த வேட்ப்பாளரின் மூலம் சாத்தியமோ அதனை சரியான முறையில் ஆராய்ந்து இனங்கண்டு அதன் மூலம் இதனை நாம் சாதித்தேயாக வேண்டும். இந்தப் பாரிய பொறுப்பிலிருந்து நாம் யாரும் விடுபட முடியாது. “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் உங்கள் பொறுப்புக்கள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படும்” என்பது நபி வாக்காகும். எனவே எமது பொறுப்புக்களை சரிவர புரிந்து எமது பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் “எமது மாவட்ட முஸ்லீம்களும் பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவமும்” எனும் இத்தலைப்பினை அரசியல் தலைவர்கள், உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பள்ளி வாயிற்களின் நிருவாகிகள், இமாம்கள், சமூக சேவை சங்கங்கள், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் ஆராய்ந்து நமது மாவட்டத்தின் அனைத்து முஸ்லீம்களுக்கும் அறிவுறுத்துவது கடமையாகும்.

அந்த வகையில் இந்த நாட்டை ஆண்டாண்டு காலமாக மாறிமாறி ஆட்ச்சி செய்து வரும் இரு பெரும் கட்ச்சிகளிலும் நமது விடயத்தில் ஓரளவேனும் கரிசனைக் காட்டக்கூடிய நன்மை பயக்கும் ஒரே கட்ச்சி ஐ.தே.கட்ச்சிதான் எனவே அனுராதபுர மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்வதற்கும் மிகவும் பொருத்தமான கட்ச்சி; ஐ.தே.க.என்பதனையும் பொருத்தமான வேட்ப்பாளர் நமது மாகானசபை உறுப்பினர் ஆசிரியர் பி. சுஹீது அவர்கள் என்பதனையும் நாம் இணங்கண்டுள்ளோம்.

ஆசிரியர் பி. சுஹீது அவர்கள் எந்த அடிப்படையில் பொருத்தமானவராகக் கருதப்படுகின்றார்.

1. சுமார் 23 வருடகால நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்.
2. கட்ச்சி தோல்வியுற்ற போதும் மக்களின் அபிமானம் காரணமாக தொடர்ந்து வெற்றி பெற்றமை.
3. நமது மாவட்ட நீண்டகால அரசியல் வரலாற்றில் ஒரேயொரு முதல் முஸ்லிம் தொகுதி அமைப்பாளர்
4. எச்சந்தர்ப்பத்திலும் பணத்திற்கோ பதவியிற்கோ விலை போகாதவர்.
5. தளராத மனவுறுதியும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் மிக்கவர்
6. அத்துடன் எம்மால் முன் வைக்கப்பட்ட பின்வரும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டமை.

நிபந்தனைகள்:
1. அவர் பாராளுமன்றத்திற்க்குத் தெரிவு செய்யப்படும்; பட்ச்சத்தில் நமது முழு மாவட்டத்தையும் சமமாக பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மாவட்ட முஸ்லிம் மத்திய குழுவொன்று உருவாக்கப்படுதல்.
2. இக்குழு மார்க்க அறிவில் தேர்ச்சியும், மார்க்கப்பற்றும், சமூக உணர்வும், சேவை மணப் பாண்மையும், தியாக சிந்தனையும் கொண்ட மார்க்க அறிஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் ஆகியோர்களைக் உள்ளடக்கியிருத்தல்;.
3. தேவைக்கேற்ப தொகுதி, பிரதேச, கிராமிய மட்டத்திலான கிழைகளும் ஸ்தாபிக்கப்பபடல்.
4. பிரதிநிதி எச்சந்தர்ப்பத்திலும் அவரின் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு கட்டுப்படாது இக்குழுவின் முடிவின்படியே செயல்படுதல்.
5. மத்திய குழு எச்சந்தர்ப்பத்திலும் அல்குர்ஆன், அல்-ஹதீஸ{க்கு மாற்றமில்லாத வகையில் நீதியானதும் நேர்மையானதுமான முடிவுகளை எடுத்தல்.

முக்கிய குறிப்பு:
நமது மாவட்டத்தில் மொத்தம் 636733 வாக்காளர்கள் உள்ளனர் இவர்களுள் முஸ்லிம் வாக்காளர்கள் 8.4மூ விகிதம் ஆகும் இது சுமார் 53740; வாக்காளர்கள் என கொள்ளலாம். இந்த 53740 வாக்காளர்களில் நூற்றுக்கு 80 விகிதம் வாக்களிக்கப்பட்டாலும் சுமார் 42992 பேர் வாக்களிப்பார்கள் இந்த 42990 பேர்களும் பிரிந்து செல்லாது ஒன்றுபட்டு ஒட்டு மொத்தமாக தங்களது வாக்குகளை ஐக்கிய தேசிய கட்ச்சியின் யானைச் சின்னத்திற்கும் அதில் போட்டி இடும் எமது வேட்ப்பாளர்   மாகானசபை உறுப்பினர் ஆசிரியர் பி. சுஹீது அவர்களின் இலக்கமாகிய இலக்கம் 10 ற்க்கும் வழங்குவதன் மூலம் நமது அனுராதபுர மாவட்ட முஸ்லிம் பிரதிநித்துவத்தினை உறுதி செய்து கொள்ள முடியும் என நம்புகின்றோம்.


தேர்தல் விழிப்பூட்டல் மற்றும் வழிகாட்டலுக்கான முஸ்லிம் ஒன்றியம்
அனுராதபுர மாவட்டம்.
தொடர்புகளுக்கு
மௌலவி முனாப் நுபார்தீன்- ஜே.பி
தொ.பே. 0767221243



சனி, 4 ஜூலை, 2015

தூங்கியது போது துள்ளி எழுவோம்


தூங்கியது போது துள்ளி எழுவோம்

அன்பின் சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ{

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிம் ஒரே குழியில் இரு தடவைகள் விழ மாட்டான். (புஹாரி)

சுதந்திர இலங்கையின் கடந்த 67 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களில் இந்த நாட்டை மாறி மாறி ஆட்ச்சி செய்து வருகின்ற இரு பேரினதவாத கடச்சிகளாலும் தொடர்ந்தும் ஏமாற்றப்ட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதுவே நமது கசப்பான வரலாற்றுண்மையாகும்.

இவ்வாறான நீண்ட ஏமாற்றம் நிறைந்த வரலாற்றைக் கொண்ட நம் சமூகத் தலைமைகள் தொடர்ந்தும் பேரினவாதக் கட்ச்சிகளுக்குப் பின்னால் நானா நீயா? என்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்வதில் ஆவர்வம் காட்டி வருவதன் மர்மம்தான் என்ன? என்பது பற்றி நாம் ஆழமாக சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிம் ஒரே குழியில் இரு தடவைகள் விழ மாட்டான். (புஹாரி)

இந்த நபி மொழியின் அடிப்படையில் பார்கின்றபோது யார் ஒருவரிடம் பல முறைகள் ஏமாற்றப்டுகின்றாரோ அவர் உண்மையில் ஒரு உண்மையான விசுவாசியாக இருக்க முடியாது என்பதனையே எம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஒருவர் ஒருவரிடம் ஒரு முறை ஏமாற்றமடையலாம் ஆனால் தொடர்ந்தும் துணைபோவதும் இடையில் ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறிக் கொண்டு  வெளியில் வருவதும் பிறகு மீண்டும் அவர்களுடனையே கூட்டு சேர்வதும் மீண்டும் ஐய்யோ ஏமாற்றி விட்டார்களே என்று கூறுவதையுமே தனது வழமையாக ஆக்கிக் கொண்டவர்கள் எவ்வாறு உண்மை விசுவாகிகளாக இருக்க முடியும்.

எனவே இப்படியான பெயர்தாங்கிகளை நம்பி பயன் ஏதும் இல்லை ஆகவே தூங்கியது போதும் தாமதமின்றி துயில் எழுவோம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளத் தயாராகுவோம். அதற்க்கான ஒரு சிறந்த களமாக எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துவோம்.

யாரெல்லாம் நமதுத் தனித்துவத்துடன் நமது உரிமைகளுக்காக நாடளாவிய ரீதியில் களமிறங்குகின்றார்களோ அத்தகையவர்களுடன் கை கோர்த்து அவர்களின் பாதங்களை பாறாளுமன்றத்தில் தடம் பதிக்கச் செய்து நமது உரிமைகளைப் பாதுகாப்போம்.

அவ்வாறே யாரெல்லாம் பேரினவாத கட்ச்சிகளிடம் தங்களது சின்னங்களை அடமானம் வைத்துவிட்டு வீராப்பு பேசுகின்றார்களோ அத்தகையோர்களை நிராகரித்து அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட ஒன்றுபடுவோம். 


இப்படிக்கு
முனாப் நுபார்தீன்



வியாழன், 2 ஜூலை, 2015

சமயம் பார்த்து சதி செய்யும் சந்தர்ப்பவாதிகளிடமிருந்து நம் சமூகத்தைப் பாதுகாக்க ஒன்று படுவோம்


சமயம் பார்த்து  சதி செய்யும்  சந்தர்ப்பவாதிகளிடமிருந்து 
நம் சமூகத்தைப் பாதுகாக்க ஒன்று படுவோம்

நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்ச்சிகளும் தமது கடச்சியை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது தமது சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் எவ்வபறு உறுதி செய்து கொள்வது என்பது பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நமது முஸ்லிம் தலைமைகளோ ஒன்றிணைந்து ஒரே அணியாக நின்று நம் சமூகத்தைப் பாதுகாக்கும் சிந்தனையை விட்டு விட்டு பேரினவாதக் கட்ச்சிகளிடம் வேட்ப்புமனுப் பிச்சைக் கேட்டு மூக்குடைப்பட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்கள் நாளாந்தம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருப்பதனைப் பார்க்கும் போது வெட்க்கித் தலை குனிய வேண்டியுள்ளது.

எமக்கு மத்தியில் ஆயிரம் கருத்துமுறண்பாடுகளும் பிரச்சினைகளும் இருக்கலாம் என்றாலும் அவைகள் நம்மை பலவீனப்படுத்தி நமது பொது எதிரிகளை பலப்படுத்திவிட நாம் இடம் கொடுத்து விடக்கூடாது.

உண்மையில் மைத்திபாள சிறிசேன அவர்கள் ஐக்கிய தேசிய கட்ச்சியின் தலைமையில் எதிர்கட்ச்சிகளின் கூட்டணி சார்பில் புதிய ஜனநாயக முன்னனி சின்னத்தில் போட்டி இட்டுத்தான் வெற்றி பெற்றார் என்றாலும் அவரின் வெற்றியைத் தொடர்ந்து அவரை வெற்றிபெறச் செய்த எந்தவொரு கட்ச்சியிலும் அவர் இல்லை மாறாக அவரின் பளைய கட்ச்சியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியையே பிரதிநிதித்துவம் செய்து கொண்டு வருகின்றார் என்பது நாம் நன்றாக சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும். 

எனவே இவரையும் நாம் எழிதில் நம்பிவிட முடியாது அவரும் அவரின் நண்பர் மஹிந்த அவர்கள் எவ்வாறு 18 வது அரசியல் யாப்பு சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் வரை நல்லவராக நடித்து அதன் பின்னர்

“இந்த நாட்டில் இதன் பிறகும் தமிழர் முஸ்லிம்களை நினைத்தவாறு ஆட இடம் கொடுக்க முடியாது அவர்கள் ஆடியது போதும்’ 

என்று கூறி இனவாதத் தீயை மூட்டினாரோ அவ்வாறே இவரும் காலம் கனியும் வரையே காத்திருப்பார் அதன் பிறகு இவரின் சுயரூபத்தையும் நாம் வெகு விரைவில் கண்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

எனவே சகோதரர்களே சமயம் பார்த்து சானக்கியமாக சதி செய்யும் இந்த சந்தர்ப்பவாத இனவாதிகளிடமிருந்து நம் சமூகத்தைப் பாதுகாப்பதற்க்கு அல்லாஹ் நமக்கு வழங்கிய அரியதோர் வாய்ப்பே இந்தத் தேர்தல் ஆகவே நாமனைவரும் ஓரணியாக நின்று நமது பலத்தை மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய ஒன்று படுவோமாக. 

இப்படிக்கு
முனாப் நபார்தீன்


எங்கே நமது அரசியல் தலைமைகள்?


எங்கே நமது அரசியல் தலைமைகள்?

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ்

சுதந்திர இலங்கையின் 67 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமயம் பார்த்து ஏமாற்றப்பட்ட நமது முஸ்லிம் தலைமைகள் இன்னும் புத்தி தெளியவில்லை போல் தெரிகின்றது. ஆதலால்தான் தீர்மானகரமான இந்தச் சந்தர்ப்பத்திலும் பேரினவாதக் கட்ச்சிகளிடமே தங்களது அரசியலை அடமானம் வைப்பது தொடர்பாகவே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

கடந்த 2015 ஜுன் மாதம் 26ம் திகதி பாராளுமன்றம்  கலைக்கப்பட்டதிலிருந்து இன்றளவும் எந்தவொரு முஸ்லிம் தலைமையும் தங்களுக்குள் இருக்கின்ற கட்ச்சி மோதல்களையும் கருத்து வேறுபாடுகளையும் குரோத மனப்பாண்மைகளையும் புறந்தள்ளி சமூகத்திற்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய இச்சந்தர்ப்பத்தில் அது பற்றி எவ்வித கவலையும் கரிசனையும் காட்டுவதாகத் தெரியவில்லை.

இதே நேரம் நாடு தழுவிய மட்டத்தில் ஒரு சில குறிப்பிடத்தக்க சமூக சிந்தனையற்ற சுயநலமிகளைத் தவிர அனைத்து முஸ்லிம்களும் எங்கே நமது தலைமைகள் ஓரணியில் ஒன்று சேராதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள் . 

தேசிய மட்டத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபடவே விரும்புகின்றோம் அதற்க்காக என்ன விலை கொடுக்கவேண்டி வந்தாலும் என்ன தியாகங்களைச் செய்யவேண்டி ஏற்ப்பட்டாலும்  சரி எமக்கு வேண்டியது தனித்துவமான ஒரே தலைமையே தவிர மீண்டும் மீண்டும் ஒரே குழியில் பல தடவைகள் விழுகின்ற சோரம் போன தலைமை அல்ல.

எனவே நம் சமூக ஆண்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக சிந்தனையாளர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் தொழிலதிபர்கள் செல்வந்தர்கள் ஏழைகள் படித்த வர்க்கத்தினர்கள் பாமரர்கள் சாதாரண தொழிலாளிகள் விவசாயிகள் போன்ற அனைத்து வர்க்கத்தினர்களும் அனைத்து விதமான வேறுபாடுகளையும் மறந்து ஒரே சகோதரர்களாக அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் அடிப்படையில் ஒன்று படுவதன் மூலம் மாத்திரமே எமக்கு எதிரான சவால்களுக்கு நாம் முகம் கொடுக்க முடியும் என்பதில் முதலில் உடன்பாட்டுக்கு வருதல் வேண்டும். 

அவ்வாறு நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் போது நிச்சயமாக அல்லாஹ்வின் அன்பும் அருளும் உதவியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எம்மை வந்தடையும் என்பதில் ஒரு ஈமானியனுக்க அனுப்பிரமானமேனும் சந்தேகம் ஏற்ப்படக் கூடாது.

ஆல்லாஹ் கூறுகின்றான் : ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (அல்-குர்ஆன்: 47: 7)

(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கை விட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.  (அல்-குர்ஆன்: 3: 160)

அவ்வாறு நாம் ஒன்று படாது வழக்கம் போல் இதிலும் அரசியலுக்குள் இஸ்லாத்தைப் புகுத்த வேண்டாம் என்று கூறி இதிலும் கருத்து வேறுபாட்டையே மூலதனமாக்கி நமது இஸ்லாம் பற்றிய ஞானசூண்யத்தை நம் வரலாற்றில் மீண்டும் ஒரு முறைப் பதிவு செய்து விடுவோமாக இருந்தால் நிச்சயமாக அது நம் வருங்கால சந்ததினர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரும் சமூகத்துரோகச் செயலாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே ஏமக்கு மத்தியில் காணப்படும் சகலவிதமான பிரிவினைவாதத்திற்கும் நாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் இல்லை என்றால் எதிர்காலத்தில் நாம் இந்நாட்டில் நம்மை முஸ்லிம் என்று சொல்வதற்கே அச்சப்பட வேண்டிய ஒரு நிலையை அது தோற்றுவித்து விடும்; என்பதில் இரு கருத்திற்கு இடமில்லை.

எனவே நாம்  இந்த தீர்மானகரமான நேரத்தில் வழமை போல் சடவாதக் கொள்கைகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்காது எல்லாக் காலத்திற்கும் எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் சரியானதும் முழுமையானதுமான வழி காட்டலினைத் தன்னகத்தே கொண்டுள்ள புனித அல்-குர்ஆன் அல்-ஹதீஸின் வழிகாட்டுதலில் அறிவார்த்த மற்றும் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை வகுத்து ஜனநாயக ரீதியில் எதிரிகளை எதிர் கொள்வதற்கான சிறந்ததொரு களமாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகுதல்  மிக மிக அவசியமாகும்.

எணவே நாமனைவரும் ஒரே இஸ்லாமிய சகோதரர்கள் எனும் ஒரே கொள்கையின் கீழ் களமிறங்கி நமது உரிமைகளை வென்றெடுக்கவும் பாதுகாத்துக் கொள்ளவும் முன்வருமாறு வேண்டுகின்றேன்.

இப்படிக்கு 
முனாப் நுபார்தீன்


புதன், 1 ஜூலை, 2015

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே இது உனது கடமை


சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே இது உனது கடமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ{

முஸ்லிம்கள் மத்தியில் கடந்த 5-6 மாதங்களுக்கு முன் நாளாந்தப் பேச்சுப் பொருளாக இருந்து வந்த தேசிய தலைமைத்தவம் ஒற்றுமை சகோதரத்தவம் அனைத்தும் கடந்த 2015-01-08- ம் திகதியுடன் முற்றுப் பெற்று விட்டதைப் பார்கின்றோம். இது ஒன்றும் எமக்குப் புதிதல்ல இது இலங்கை முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் அவ்வப்போது முஸ்லிம்களக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான சக்திகள் களம் இறங்கும் போது பேசப் பட்டு பிறகு வெகு விரைவிலேயே மறந்து விடுவதுதான் நமது வழக்கம்.

ஆதலால்தான் இன்றளவும் அதனை நம்மால் அடையப் பெற முடியாது போய் உள்ளது அவ்வாறே அதனை எவ்வாறு அடைந்து கொள்வது என்பதனை ஆராய்ந்து அறிந்து அதற்கான ஆக்கபூர்வமானதும் அறிவூபூர்வமானதுமான வழிதுமுறைகள்  என்ன என்பதனையும் யாரும் முன் வைத்ததாகவும் தெரியவில்லை.

1986-87 காலப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழுகின்ற கிழக்கு மாகானத்தில் விடுதலைப் புலிகளின் அராஜகங்களால் உந்தப்பட்ட அம்மாகான மக்கள் மறைந்த தலைவர் மர்ஹ{ம் அஷ்ரப் அவர்களின் தலைமையின் கீழ் அரசியல் ரீதியாக அணி திரண்டாhகள். அதன் பின் அந்தத் தலைமைத்துவம் தேசிய அளவில் அரசியல் ரீதியாக இரு பெரும் பிரிவுகளாக பிரிந்திருந்த நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒன்று படுத்தும் முயற்ச்சியில் கவனம் செலுத்தியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் கனிசமான மக்களின் அங்கிகாரத்தினைப் பெற்றது.

அப்படி அரசியலின் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகளாக பிரிந்திருந்த நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒன்று படுத்த வேண்டும் எனும் இலச்சியத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் தலைமைத்துவம் அவரின் மறைவுக்குப் பின் ஏற்கனவே இரண்டு பிரிவாக இருந்த நம் சமூகத்தை இன்று பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பிரித்துள்ளது. ஆளுக்கு ஆள் கட்ச்சி என்றும் தலைவர் என்றும் வெளியாகத் தலைப்ட்டு விட்டார்கள்.

இந்நிலையில் மீண்டும் ஒரு முறை அரசியல் ரீதியில் ஒன்றுபடுத்துவதென்பது இதன் பிறகு சாத்தியமற்ற ஒன்றாகும் என்றே கருத வேண்டியுள்ளது.

அப்படியானால் அரசியலை முற்றாகத் தவிர்த்து ஆண்மீகத் தலைமையின் கீழ் ஒன்றுபடுத்தலாமா? என்றால் அதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் மத்ஹபுகளின் பெயரால் பிரிந்திருந்த சமூகத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒன்று படுத்தவென்று உதயமான இயக்கங்கள் ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி இன்று எத்தனை எத்தனையோ எண்ணில் அடங்கா குழுக்களாகப் பிரிந்தே காணப்படுகின்றது.  ஏற்கனவே அரசியல் ரீதியாக இரு பெரும் பிரிவினர்களாகவும் ஆண்மீகரீதிPல் நான்கு மத்ஹப்புகளை உடையவர்களாகமு; இருந்த போதிலும் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை சகோதரத்துவம் மேலோங்கிக் காணப்பட்டன. இன்றோ நம் சமூகத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாகவுள்ளது  இயக்கங்கள் மற்றும் கட்ச்சிகளின் பெயரால் ஏற்படும் முறுகல் நிலையும் குழுச் சண்டைகளும் நாளாந்தம் ஊடகங்களில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்களுக்குள்ளேயே புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் சகிப்புத் தன்மையும் இல்லாத அவர்களால் எவ்வாறு முழு சமூகத்தையும் வழி நடாத்த முடியும் எனும் நியாயமான கேள்விகள் எழுகின்றன.

இப்படிப்பட்ட நம் தலைவர்களினதும்; சமயக் குழுக்களினதும் தூரப்பார்வையற்ற இத்தகைய குருட்டுத்தனமான குறுகிய சிந்தனைகளின் வெளிப்பாடே இன்றைய நம் சமூகத்தின் தலைவிதியாக பரினாமம் கொண்டுள்ளது எனலாம்.

எது எப்படி இருந்தாலும் இந்த நாட்டில் மீண்டும் ஒரு முறை நமது பெறுமதியினைப் பதிவு செய்து கொள்வதற்கான அரியதோர் சந்தர்ப்பத்தினை வல்ல அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான் எனவே அவற்றின் மீது மண்ணை வாரி விடாது இவ்வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள முன் வருமாறு நம் தலைமைகளை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதிலும் குறிப்பாக இந்த நாட்டு முஸ்லிம்களை முதற்தடவையாக நாடளாவிய ரீதியில் விழிப் ப10ட்டி அரசியல்மயப்படுத்திய சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கடமையிலிருந்து எந்நிலையிலும விடுபட முடியாது எனவே மீண்டும் ஒரு முறை அது முழு முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப் படுத்த முன்வர வேண்டும் இல்லையேல் பொறுப்புதாரிகள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்



பிரதமரை தீர்மானிக்கும் சக்தி நாமே


பிரதமரை தீர்மானிக்கும் சக்தி நாமே

அன்புடையிர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ

நடைபெற இருக்கின்ற நடாளுமன்றத் தேர்தல் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவூம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக நோக்கப்பட வேண்டியூள்ளது. ஏனெனில் இந்த நாட்டை மாறி மாறி ஆட்ச்p செய்து வரக்கூடிய இரு பேரினவாதக் கட்ச்சிகளும் வரலாறு நெடுகிலும் சந்தர்ப்பம் பார்த்து முஸ்லீம்களுக்குத் துரோகம் செய்தே வந்திருக்கின்றது என்பது கசப்பான உண்மையாகும்.

எனவே தொடர்ந்தும் அந்தத் துரோகிகளுக்கே எமது வாக்குகளைத் தாரவார்த்துக் கொடுத்து விட்டு கைசேதப்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் மிகவூம் அவதாணமாகவூம் கவனமாகவூம் இருந்து கொள்வது மிகவூம் அவசியமாகும். 

இன்றைய இந்த சூழ்நிலையில் நம்மில் சுயநலமிகளைத் தவிர வேறு யாரும் பேரினவாதக் கட்சிகளில் போட்டி இடவோ அல்லது அவற்றிற்கு வாக்களிக்கவோ மாட்டான். ஏனெனில் கடந்த பல தசாப்த்தங்களாக நாம் கற்றுக் கொண்ட படிப்பினைகள் ஏராளம் ஏராளம்.

எனவே நமது அரசியல் தலைமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று தனித்துப் போட்டீ இடுவதே சாலவூம் பொருத்தமான மிகவூம் ஆரோக்கியமான ஒரு முடிவாக இருக்க முடியூம் என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வாறு அவர்களால் ஒன்றுபட முடியாது எனில் நிச்சயமாக அவர்களுக்கு நம்மை அரசியல் ரீதியாக வழி நடாத்தும் தகுதியூம் தகமையூம் இல்லை என்றே அர்த்தமாகும்.

அப்படியாயின் நாடளாவிய ரீதியில் பேரினவாதிகளுக்கு நமது வாக்குகளைத் தாரவாத்துக் கொடுத்து விட்டுத் தொடர்ந்தம் கைசேதப்படுவதை விட நாமனைவரும் ஒன்று சேர்ந்து நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் சுயேற்ச்சையாகவேனும் களமிறங்குவது சாலவூம் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

இவ்வாறு நாம் களமிறங்குவதால் நமக்கு எந்தப் பிரச்சினையூ நஸ்டமும் ஏற்பட்டுவிடப் போவதும் இல்லை அவ்வாறின்றி நாம் பேரினவாதிகளுடன் இணைந்திருப்பதனால் எவ்வித நன்மையூம் நமக்குக் கிடைக்கப் போவதும் இல்லை. 

மாறாக நாமனைவரும் நாடளாவிய ரீதியில் ஒன்று பட்டு ஒரே அணியாகப் போட்டி இட்டால் நிச்சயமாக இந்த நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சக்தி நாமேயாவோம் 

இவ்வாறான ஒரு தீர்மானகரமான நேரத்தில் நாம் கடச்சி மற்றும் இயக்கப் பேதங்களையூம் குரோத மாணப்பாண்மையையூம் கை விட்டு விட்டு நம் சமூகத்திற்க்காக ஓன்றுபடுதல் மிகவூம் அவசரமும் அவசியமும் ஆகும்.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்



මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...