சமயம் பார்த்து சதி செய்யும் சந்தர்ப்பவாதிகளிடமிருந்து
நம் சமூகத்தைப் பாதுகாக்க ஒன்று படுவோம்
நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்ச்சிகளும் தமது கடச்சியை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது தமது சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் எவ்வபறு உறுதி செய்து கொள்வது என்பது பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் நமது முஸ்லிம் தலைமைகளோ ஒன்றிணைந்து ஒரே அணியாக நின்று நம் சமூகத்தைப் பாதுகாக்கும் சிந்தனையை விட்டு விட்டு பேரினவாதக் கட்ச்சிகளிடம் வேட்ப்புமனுப் பிச்சைக் கேட்டு மூக்குடைப்பட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்கள் நாளாந்தம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருப்பதனைப் பார்க்கும் போது வெட்க்கித் தலை குனிய வேண்டியுள்ளது.
எமக்கு மத்தியில் ஆயிரம் கருத்துமுறண்பாடுகளும் பிரச்சினைகளும் இருக்கலாம் என்றாலும் அவைகள் நம்மை பலவீனப்படுத்தி நமது பொது எதிரிகளை பலப்படுத்திவிட நாம் இடம் கொடுத்து விடக்கூடாது.
உண்மையில் மைத்திபாள சிறிசேன அவர்கள் ஐக்கிய தேசிய கட்ச்சியின் தலைமையில் எதிர்கட்ச்சிகளின் கூட்டணி சார்பில் புதிய ஜனநாயக முன்னனி சின்னத்தில் போட்டி இட்டுத்தான் வெற்றி பெற்றார் என்றாலும் அவரின் வெற்றியைத் தொடர்ந்து அவரை வெற்றிபெறச் செய்த எந்தவொரு கட்ச்சியிலும் அவர் இல்லை மாறாக அவரின் பளைய கட்ச்சியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியையே பிரதிநிதித்துவம் செய்து கொண்டு வருகின்றார் என்பது நாம் நன்றாக சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும்.
எனவே இவரையும் நாம் எழிதில் நம்பிவிட முடியாது அவரும் அவரின் நண்பர் மஹிந்த அவர்கள் எவ்வாறு 18 வது அரசியல் யாப்பு சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் வரை நல்லவராக நடித்து அதன் பின்னர்
“இந்த நாட்டில் இதன் பிறகும் தமிழர் முஸ்லிம்களை நினைத்தவாறு ஆட இடம் கொடுக்க முடியாது அவர்கள் ஆடியது போதும்’
என்று கூறி இனவாதத் தீயை மூட்டினாரோ அவ்வாறே இவரும் காலம் கனியும் வரையே காத்திருப்பார் அதன் பிறகு இவரின் சுயரூபத்தையும் நாம் வெகு விரைவில் கண்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
எனவே சகோதரர்களே சமயம் பார்த்து சானக்கியமாக சதி செய்யும் இந்த சந்தர்ப்பவாத இனவாதிகளிடமிருந்து நம் சமூகத்தைப் பாதுகாப்பதற்க்கு அல்லாஹ் நமக்கு வழங்கிய அரியதோர் வாய்ப்பே இந்தத் தேர்தல் ஆகவே நாமனைவரும் ஓரணியாக நின்று நமது பலத்தை மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய ஒன்று படுவோமாக.
இப்படிக்கு
முனாப் நபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக