بسم الله الرحمن الرحيم அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் எனும் எமது அமைப்பு இயக்கசார்பின்றி நடுநிலையான ஒரு சமுதாயத்தினைக் கட்டியெழுப்புவதனை நோக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்க மற்று கட்ச்சி வேறுபாடுகளுக்கு வெளியே நின்று நடுநிலயாக செயல்பட ஆர்வமுள்ள சகோதரர்களிடமிருந்து ஆக்கபூர்வமான அறிவுரைகள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வரவேர்க்கின்றோம்.
வியாழன், 31 அக்டோபர், 2013
சனி, 26 அக்டோபர், 2013
வெள்ளி, 25 அக்டோபர், 2013
திங்கள், 21 அக்டோபர், 2013
புதன், 16 அக்டோபர், 2013
Jaffna Muslim: 68 வது ஐக்கிய நாடுகள் பொது சபையில் இலங்கையைச் சேர்...
Jaffna Muslim: 68 வது ஐக்கிய நாடுகள் பொது சபையில் இலங்கையைச் சேர்...: (ஆதில் பாக்கிர் மரைக்கார்) நான் வட மாகாணத்திற்கு விஜயம் செய்தபோது சிவா என்ற ஒரு நபரை சந்தித்து கதைத்தேன். அப்போது அவர் என்னிடம் இவ்வாற...
Jaffna Muslim: முஸ்லிம் தீவிரவாத சக்திகளும், புலித்தீவிர வா...
Jaffna Muslim: முஸ்லிம் தீவிரவாத சக்திகளும், புலித்தீவிர வா...: (vi) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது வரவேற்கத்தக்கது. ஆனால், இவ் வெற்றியை வைத்து பிரிவினைவாதம் பேசுவது தவறாகும்...
Jaffna Muslim: அரசியல்வாதிகளின் ஆவணங்களைக் கைப்பற்றி, அச்சுறுத்து...
Jaffna Muslim: அரசியல்வாதிகளின் ஆவணங்களைக் கைப்பற்றி, அச்சுறுத்து...: எதிர்க்கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வித பயனும் கிட்டப் போவதி...
Jaffna Muslim: பள்ளிவாசலுக்குள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின்போது ...
Jaffna Muslim: பள்ளிவாசலுக்குள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின்போது ...: ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின்போது பள்ளிவாசலுக்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானின் பொகார் மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் கொல்லப் பட்...
Jaffna Muslim: பள்ளிவாசலுக்குள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின்போது ...
Jaffna Muslim: பள்ளிவாசலுக்குள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின்போது ...: ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின்போது பள்ளிவாசலுக்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானின் பொகார் மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் கொல்லப் பட்...
Jaffna Muslim: இலங்கை ஆண்களை பற்றிய ஒரு எச்சரிக்கை குறிப்பு
Jaffna Muslim: இலங்கை ஆண்களை பற்றிய ஒரு எச்சரிக்கை குறிப்பு: இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள் தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எச்.ஐ.வீ. தவிர்ப்...
Jaffna Muslim: ஹஜ்: முஸ்லிம்களின் சர்வதேச மாநாடு
Jaffna Muslim: ஹஜ்: முஸ்லிம்களின் சர்வதேச மாநாடு: அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (கிழக்குப் பல்கலைக் கழகம்) ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் சஊதி அரேபியா...
Jaffna Muslim: பிரதமர் ஜயரட்ன விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்...
Jaffna Muslim: பிரதமர் ஜயரட்ன விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்...: உலக வாழ் முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி கூறுமுகமாகக் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஆசிச் செய்தியினை வெளியிடு வதில் பெரு மகிழ்ச்சி...
Jaffna Muslim: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த...
Jaffna Muslim: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த...: ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தினத்தில், முஸ்லிம்களுடைய பிரார்த்தனைகள் சகல மக்களினதும் சமாதானத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் இருக்குமென்பதில் ...
Jaffna Muslim: தலைவர் பதவியிலிருந்து விலக ரணில் ஒப்புதல் - தேசிய ...
Jaffna Muslim: தலைவர் பதவியிலிருந்து விலக ரணில் ஒப்புதல் - தேசிய ...: கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒப்புக் கொண்டதாக தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது...
Jaffna Muslim: பௌத்த தேரர்கள் வழங்கிய ஆலோசனைகளை ஏகமனதாக ஏற்றுக்கொ...
Jaffna Muslim: பௌத்த தேரர்கள் வழங்கிய ஆலோசனைகளை ஏகமனதாக ஏற்றுக்கொ...: (nf) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்ற ஐக்கிய பிக்குகள் முன்னணியின் யோசனையை, தலைமைத்த...
செவ்வாய், 15 அக்டோபர், 2013
Jaffna Muslim: மறதியை அதிகரிக்கும் உணவுகள் (வாசிக்கத் தவறாதீர்கள்...
Jaffna Muslim: மறதியை அதிகரிக்கும் உணவுகள் (வாசிக்கத் தவறாதீர்கள்...: சத்தான உணவை, சரியான அளவு எடுத்துக்கொண்டால் உடலில் நோய்க்கு இடமில்லை. அனைத்து மருத்துவ முறைகளும் வலியுறுத்துவது இதைத் தான். இப்போதெல்லாம்...
Jaffna Muslim: தியாகத்தை நினைவுகூரும் உழ்ஹிய்யா
Jaffna Muslim: தியாகத்தை நினைவுகூரும் உழ்ஹிய்யா: (அஷ்ஷெய்ஹ் அல்ஹாபிழ் என்.எம். அப்துல் ஹலீம்) உழ்ஹிய்யா என்ற பெயரில் நிறைவேற்றப்படுகின்ற குர்பானி நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலிவுறுத்த...
திங்கள், 14 அக்டோபர், 2013
Jaffna Muslim: திஹாரி சுமையா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு ...
Jaffna Muslim: திஹாரி சுமையா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு ...: அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த 12-10-2013 ம் திகதி திஹாரி சுமையா பெண்கள் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலு...
இரு பெருநாட்களும் அதன் ஒழுங்குவிதிகளும்
இரு பெருநாட்களும் அதன் ஒழுங்குவிதிகளும்
முனாப் நுபார்தீன் -ஜே.பி
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யää உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமை படுத்தி தக்பீர் செய்து அவனுக்கு நன்றி செலுத்துவதையுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (அல்குர்ஆன்ää 2:185)
நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம் எனினும் குர்பானியின் மாமிசங்களோää அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை ஆனால் உங்க ளுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தி தக்பீர் செய்யும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; எனவே நல்லோர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக (அல்குர்ஆன்ää 22:36-37)
இஸ்லாத்தின்; மிக முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்றுதான் இரு பெருநாள் தினங்களுமாகும் இது இஸ்லாத்தின் வெளிப்படையான அடையாளச் சின்னங்களில் முக்கிய ஒன்றாகும் இதை நாம் மதித்து கண்ணியப்படுத்துதல் தக்வா எனும் பயபக்தியைச் சார்ந்ததாகும். ஏனெனில் வல்ல அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை யார் கண்ணியப்படுத்துகின்றாரோ நிச்சயமாக அது உள்ளங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடேயாகும்”. (22:32)
இப்புனித நாளைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துள்ளார்கள்.
''நபி நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வருகை தந்த போது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு திருநாள்கள் இருந்தன. அவ்விரு நாட்களிலும் அவர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி நபி(ஸல்) அவர்கள் ''இவ்விரு நாட்களை விடச்சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானி தியாகத் திருநாள்ää மற்றும் ஃபிதர் ஈகைத் திருநாள் ஆகிய இரண்டுமாகும்'' எனறார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் நூல்: அப10தாவூத்ää நஸயீ
எனவே இப்புனித நாளை நாம் நபி நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நின்று அனுஷ்ட்டிப்பது அவசியமாகும்;. இதுவே ஏனைய சமூகத்தினர்களதும் நமதும் பெருநாளைக்குள்ள வேறுபாடாகும்.
முதலாவது தக்பீர் சொல்லுதல்
முதலில் மகிழ்ச்சிகரமான இவ்விருநாட்களை நாம் தக்பீர் முழக்கத்துடன் வரவேற்க வேண்டும்;.
நோன்புப் பெருநாள் தக்பீர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யää உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமை படுத்தி தக்பீர் செய்து அவனுக்கு நன்றி செலுத்துவதையுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (அல்குர்ஆன்ää 2:185)
ஹஜ்ஜுப் பெருநாள் தக்பீர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம் எனினும் குர்பானியின் மாமிசங்களோää அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் சென்றடைவதில்லை ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனைச் சென்றடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தி தக்பீர் செய்யும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; (அல்குர்ஆன்ää 22:36-37)
அல்லாஹ் எமக்கு செய்திருக்கும் அருட்களுக்கும் இன்னும் இவ்வாறான புனிதத் தினங்களை வழங்கியதற்கும் நாம் நன்றி செலுத்தும் வகையில் அல்லாஹ்வை பெருமைப் படுத்தும் விதமாகää அன்றைய தினங்களில் தக்பீர் சொல்லுதல் சுன்னத்தாக ஆக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் அதிகமதிகம் தக்பீர் தஸ்பீஹ் போன்றவைகளை சொல்வதில் கழிக்கப்படல் வேண்டும்.
குளித்லும் தொழுதலும்
அடுத்ததாக நாம் இந்நாளை ஆனந்தத்துடன் கொண்டாடுவதற்கு முன் தொழுகையைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.
''நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்து பலியிடுவோம் யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழி முறையைப் பேணியவராவார்'' என்று நபி நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பர்ராÊ நூல்: புகாரி
நபி நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு (மைதானத்திற்கு) செல்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்த பின்னர் மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு போதனை செய்வார்கள்ää (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள்ää ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப நாடியிருந்தால் அனுப்புவார்கள். ஏதேனும் (கட்டளையிட வேண்டியிருந்தால் கட்டளையிடுவார்கள் பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.
அறிவிப்பவர்: அப10 ஸயீத் அல் குத்தி நூல்கள்: புகாரிää முஸ்லிம்ää நஸயீ
பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னதாகக் குளித்து சுத்தம் செய்து கொள்வது சுன்னத்தாகும் அத்துடன் தன்னிடம் இருக்கக்கூடிய ஆடைகளில் சிறந்ததை அணிவதுடன் தம்மிடம் இருக்கக்கூடிய வாசனைத் திரவியங்களிலும் பூசிக்கொள்ளுதல்; நபி வழியாகும். ஆனால் பெண்கள் தங்களின் அலங்காரங்களை வெளிக்காட்டாத வகையில் ஆடையணிவதுடன் வாசனை எதுவும் பூசிக்கொள்ளாமல் தொழுகைக்குச்; செல்ல வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளில் அந்நிய ஆண்கள் இல்லாத போது தங்களை அலங்கரித்து வாசனைகளை பூசிக்கொள்வதில் தவறேதும் கிடையாது. பெருநாள் தொழுகை நடை பெறுவது பள்ளிவாயிலாக இருந்தால் மாதவிடாய்ää மற்றும் பிரசவத்தீட்டையுடைய பெண்கள் செல்லக்கூடாது ஆனால் தொழுகை பள்ளி வாயிலுக்கு வெளியே மைதானத்தில் நடைபெறுமாகவிருந்தால் அவர்கள் தொழுகையில் கலந்து கொள்ளாது பயான் மற்றும் தக்பீர் சொல்லுதல் போன்ற ஏனைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லலாம். பெருநாள் தொழுகையை திறந்த ஒரு மைதானத்தில் நிறைவேற்றுவதுதான் நபிவழியாகும் எனினும் மழை மற்றும் கடினமான வெய்யில்; போன்ற காரணங்கள் இருந்தால் பள்ளிவாசலில் தொழலாம்.
பெருநாள் தொழுகையைக் கழாச் செய்தலும் அதற்குரிய நேரமும்.
ஒரு வாகனக் கூட்டத்தினர் நபி நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்து தாங்கள் நேற்று பிறையைப் பார்த்தாக சாட்சி அளித்தனர். நபி நபி(ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும்ää காலை விடிந்ததும் தொழும் திடலுக்கு செல்லுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப10 உமைர் நூல்கள்: அப10தாவூத்ää நஸயீ
மேற்படி அறிவிப்பு பெருநாள் தொழுகை ழுஹருடைய நேரத்திற்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கும்ää அவ்வாறு அதற்கு உரிய நேரத்தில் அதனை நிறைவேற்ற முடியாது போனால் மறுநாள் அதன் நேரத்தில்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கும் சான்றாகும்.
இரு பெருநாளைக்கும் இடையிலான வேறுபாடுகள்.
நோன்புப் பெருநாளைக்குரிய தக்பீர் சவ்வால் பிறை தெரிபட்டால் அன்று மஃரிபிலிருந்து மறு நாள் பெருநாள் தொழுகை வரை சொல்லப்படும்.
ஹஜ் பெருநாளைக்குரிய தக்பீர் இரு விதமாக சொல்லப்படும்.
1. துல்ஹஜ் பிறை 01 ஆம் நாள் மஃரிபிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் அதாவது துல்ஹஜ் 13 ம் தினத்தின் அஸர் வரை பள்ளி வாயில்கள்ää கடைத்தெருக்கள்ää வீடுகள் போன்ற அனைத்து இடங்களிலும் தக்பீர் சொல்லுதல் ஆண்கள் சப்தமாக கூறுவது விரும்பத்தக்கது பெண்கள் சத்தமாகச் சொல்லக் கூடாது.
2. இரண்டாம் வகை அரஃபாவுடைய தினம் அதாவது துல்ஹஜ் 9ம் நாள் சுபஹிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் அதாவது துல்ஹஜ் 13 ம் தினத்தின் அஸர் வரை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் தக்பீர் சொல்லுதலாகும்.
நோன்புப் பெருநாளைக்குத் தொழச் செல்லுமுன் ஒற்றைப்பட ஈத்தம்பழங்களை சாப்பிட்டு விட்டுச் செல்லுதல் சுன்னத்தாகும் ஈத்தம் பழம் கிடைக்கவில்லையாயின் ஏதாவது தன்னிடம் இருக்கக்கூடிய உணவை சாப்பிட்டு விட்டுச் செல்லுதல் சிறந்ததாகும்.
ஹஜ்ஜுப் பெருநாளைக்குத் தொழச் செல்லுமுன் எதுவும் சாப்பிடாமல் செல்வது சுன்னத்தாகும் அவ்வாறே தான் குர்பான் கொடுப்பவராக இருந்தால் அவர் குர்பான் இறைச்சியையே அன்றைய தினம் தொழுதுவிட்டு வந்து சாப்பிட வேண்டும் இதுவே அவருக்கு சுன்னத்தாகும் அவர் குர்பான் கொடுக்கவில்லையாயின் தன்னிடம் இருக்கக்கூடிய உணவைச் சாப்பிடலாம்
.
நோன்புப் பெருநாளைக்குத் தொழுவதற்கு முன் ஜக்காத்துல் பித்ர் கொடுப்பது கடமையாகும். தொழுகை முடியும் வரை பிற்ப்படுத்துதல் கூடாது.
ஹஜ்ஜுப் பெருநாளைக்கு தொழுகை முடிந்த பிறகு உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்தாகும். தொழுகைக்கு முன் கொடுக்கக் கூடாது.
ஜக்காத்துல் பித்ர் கொடுப்பது ரமழானின் இறுதி நாளிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்லும் வரையிலாகும். ஓரிரு தினங்கள் முன்னதாகக் கொடுத்து விடுவதில் தவறில்லை.
உழ்ஹிய்யா கொடுப்பது பெருநாள் தினத்திலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் என்னும் மூன்று தினங்களுடன் துல்ஹஜ் 10ää 11ää 12ää 13 ஆகிய நான்கு நாட்க்களுமாகும். பெருநாளன்று கொடுப்பது மிகவும் ஏற்றமுடையதே.
குர்பானியை நிறைவேற்றுபவர் தனது உழ்ஹிய்யாவின் இறைச்சியை உண்பது நபிவழியாக இருப்பதுடன் அல்லாஹ்வின் கட்டளையாகவும் உள்ளது.
“அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுள்ளோருக்கும் உண்ணக் கொடுங்கள்”( அல்குர்ஆன்ää 22:28)
தொழுகைக்குச் செல்லும் போது ஒரு வழியாலும் திரும்பி வரும் போது வேறு வழியாலும் செல்லுதல் நபிவழியாகும்.
தவிர்த்துக் கொள்ள வேண்டியவைகள்.
இசையுடன் கூடிய பாடல்களை கேட்டல்ää திரைப்படங்கள் பார்த்தல்ää ஆண்கள் பெண்கள் கலந்து கலியாட்டங்களில் ஈடுபடுதல் பட்டாசு கொழுத்துதல் மற்றும் ஏனைய அணைத்துவிதமான வெறுக்கத்தக்க காரியங்களிலும் ஈடுபடுதல் போன்றவைகளை அந்தப் புனித நாட்களில் தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும்.
பெருநாள் வெள்ளிக்கிழமையில் வந்தால்.
பெருநாள் வெள்ளிக்கிழமையில் ஏற்படுமேயானால் இரண்டு தொழுகையையும் வௌ;வேறாக தொழுதாக வேண்டுமா அல்லது இரண்டில் ஒன்றை மட்டும் தொழுதால் போதுமா? என்ற கேள்வி எழலாம்.
இது பற்றி நபி É அவர்கள் பின்வருமாறு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
''இன்றைய தினம் இரு பெருநாள்கள் வந்துவிட்டன. யார் விரும்புகிறாரோ அவருக்கு பெருநாள் தொழுகை ஜும்ஆவுக்கும் போதுமானதாகும். ஆனால் நாம் ஜும்ஆ நடத்துவோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப10ஹ{ரைரா நூல்கள்: அபூதாவூத்ää இப்னுமாஜா
மேற்படி அறிவிப்பின் மூலம் பெருநாள் தொழுகை தொழுதால் ஜும்ஆ தொழுகை விரும்பினால் தொழலாம் இல்லையெனில் விட்டுவிடலாம் என்று நபிÉ அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் தொழுலாமா?
பெருநாள் தொழுகைக்கு முன்பாக லுஹர் தொழுகை உட்பட எத்தொழுகையும் தொழக்கூடாது.
நபி நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் நூல்கள்: புகாரிää முஸ்லிம்ää திர்மிதி
நபி நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்பு எத்தொழுகையும் தொழமாட்டார்கள்ää வீட்டிற்கு நபி நபி(ஸல்) அவர்கள் திரும்பினார்கள். இரண்டு ரக்அத் தொழுதார்கள். அறிவிப்பவர்: அப10ஸயீத நூல்: இப்னுமாஜா
பெருநாள் தொழுகை பள்ளிவாயலுக்கு வெளியில் மைதானத்தில் நிறைவேற்றப்படுமானால் அத்தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தவொரு தொழுகையும் தொழக்கூடாது. ஏன்றாலு வீட்டில் தொழுவதில் ஆட்சேபனை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறே பெருநாள் தொழுகை பள்ளிவாயலில் நடாத்தப்பட்டால் பள்ளிவாயலுக்குச் செல்பவர் பள்ளிக் கானிக்கை இரண்டு ரகஅத்து தொழுவது அவசியமாகும்.
திஹாரி சுமையா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு பண உதவி
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்pன் ஏற்பாட்டில் கடந்த 12-10-2013 ம் திகதி திஹாரி சுமையா பெண்கள் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் 83 மாணவிகளுக்கு ஒருவருக்கு 1000 ஆயிரம் ரூபா வீதம் மொத்தம் 83000 ரூபா பணம் சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு நலன் விரும்பி மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)
ஞாயிறு, 13 அக்டோபர், 2013
Jaffna Muslim: சிங்கள ராவயவின் கூட்டத்தை அடித்துவிரட்டிய அமைச்சர்...
Jaffna Muslim: சிங்கள ராவயவின் கூட்டத்தை அடித்துவிரட்டிய அமைச்சர்...: (Riswan Khalid) அமெரிக்காவைத் தாக்கிய அல் கைதாவினருக்கு இலங்கையைத் தாக்குவது ஒரு சிறிய வேலை. இலங்கை ஒரு எறும்பு மாதிரி என்றும் அப்...
சனி, 12 அக்டோபர், 2013
Jaffna Muslim: கெலிஓயா, கலுகமுவ முஸ்லிம் மாணவனின் கண்டுபிடிப்பு (...
Jaffna Muslim: கெலிஓயா, கலுகமுவ முஸ்லிம் மாணவனின் கண்டுபிடிப்பு (...: (எம்.எம்.எம். ரம்ஸீன்) கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரி தரம் 12 மாணவன் எம்.எம்.எம். முஸ்னி மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையி...
Jaffna Muslim: புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவருக்கு 10 ஆண்டுகள் வரை...
Jaffna Muslim: புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவருக்கு 10 ஆண்டுகள் வரை...: புகை பிடிக்கும் பழக்கம் உலக நாடுகளில் ஆண்– பெண் பாகுபாடின்றி பரவியுள்ளது. மேலை நாடுகளில் விருந்துகளில் பெண்கள் புகை பிடிப்பது சர்வ சாதார...
Jaffna Muslim: அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களை வாக்கு வங்க...
Jaffna Muslim: அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களை வாக்கு வங்க...: அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களை வாக்கு வங்கிகளாகவே பார்க்கின்றார்கள் என்று ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ...
Jaffna Muslim: கெலிஓயா, கலுகமுவ முஸ்லிம் மாணவனின் கண்டுபிடிப்பு (...
Jaffna Muslim: கெலிஓயா, கலுகமுவ முஸ்லிம் மாணவனின் கண்டுபிடிப்பு (...: (எம்.எம்.எம். ரம்ஸீன்) கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரி தரம் 12 மாணவன் எம்.எம்.எம். முஸ்னி மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையி...
வியாழன், 10 அக்டோபர், 2013
Jaffna Muslim: முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க, ப...
Jaffna Muslim: முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க, ப...: முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கட்டத்தில் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் தேர்தல் தொகுதி ஒன்று உருவாக்க...
Jaffna Muslim: இலங்கையை தனிச் சிங்கள நாடாக மாற்றிக்காட்ட எம்...
Jaffna Muslim: இலங்கையை தனிச் சிங்கள நாடாக மாற்றிக்காட்ட எம்...: (vi) அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் எமக்கில்லை. நாட்டையும் சிங்களவர்களையும் காப்பற்றவே நாம் முயற்சிக்கின்றோம். இல...
Jaffna Muslim: பிரபாகரனுக்கு ஏற்பட்ட தலைவிதியே ரவூப் ஹக்கீமுக்கு ...
Jaffna Muslim: பிரபாகரனுக்கு ஏற்பட்ட தலைவிதியே ரவூப் ஹக்கீமுக்கு ...: ரணில் மற்றும் பிரபாகரனுக்கு ஏற்பட்ட தலைவிதியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஏற்படும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ த...
Jaffna Muslim: முஸ்லிம் காங்கிரஸுக்கு மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை
Jaffna Muslim: முஸ்லிம் காங்கிரஸுக்கு மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை: ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றுள்ளது. பல்வேறு வ...
செவ்வாய், 8 அக்டோபர், 2013
ஒரு நாளின் துவக்கம் எப்பொழுதிலிருந்து
மனித வாழ்கையில் காலம் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும் என்றாலும் இதில்தான் அனைவரும் கவனயீனமாக இருப்பதைப்பார்கின்றோம் காலம் என்பது வினாடிகளாகவும் நிமிடங்களாகவும் நாட்களாகவும் வாரங்களாகவும் மாதங்களாகவும் மாற்றம் பெற்று வருடங்களாக முடிவடைகின்றன.
எனவே ஒரு நாளின் துவக்கம் எப்பொழுதிலிருந்து என்பதை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த வீடியோவைப் பார்க்கவும்.
திங்கள், 7 அக்டோபர், 2013
ஞாயிறு, 6 அக்டோபர், 2013
சனி, 5 அக்டோபர், 2013
உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர் : 04)
உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர் : 04)
முனாப் நுபார்தீன்- ஜே.பி. பணிப்பாளர். அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
ஈமான் பலவீனமுறுவதற்கான பிரதான காரணங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
மிக விரைவில் ஒரு காலம் வரும்ää உண்பவன் தனது சகாவை பந்திக்கு அழைப்பதைப் போல் உங்களின் மீது தீய சக்திகளின் ஆதிக்கமிருக்கும். (நீங்கள்ää ஈமானின் பலம் குன்றியிருப்பீர்கள்).தோழரொருவர் கேட்டார் :நாயகமே! நூம் அன்று எண்ணிக்கை குறைந்து இருப்பதால் அவ்வாறு நிகழுமோ? என்று
அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் பதலளித்தார்கள்: நீங்கள் அப்போது மிகுதியாக இருப்பீர்கள். எனினும் (ஈமான் விஷயத்தில்) நீங்கள் நுரையைப் போன்றும்ää நீர்க் குமிழிகளைப் போன்றும் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் பகைவர்களின் மனதிலிருந்து உங்களைப் பற்றிய அச்சத்தை இறைவன் போக்கி விடுவான். மேலும் உங்களுடைய மனங்களில் வஹ்னை ஏற்படுத்தி விடுவான்! அப்போது வஹ்ன்ää என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு வஹ்ன் என்றால் உலக ஆசையும்ää மரணத்தை வெறுத்தலும் ஆகும்! என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்வர் : தௌபான் (ரலி) நூல் : அபூதாவூது)
2. வெளிப்படையான பாவம்
என்னுடைய உம்மத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நல்லவர்களே (இரகசியமாகச் செய்த பாவங்களை) வெளிப்படுத்துபவர்களைத் தவிர உதாரணமாக ஒரு மனிதன் இரவில் செய்ததை அல்லாஹ் மறைத்து விடுகின்றான் காலையானதும் (பாவம் செய்த) அவன் ஓ! இன்ன மனிதனே நான் இன்ன இன்னதைச் செய்தேன் என்று மற்ற மனிதர்களிடம் கூறி விடுகின்றான். இரவு முழுவதும் அவனது பாவத்தை அவனது இறைவன் மறைத்தான் ஆனால் இறைவன் மறைத்ததை இவன் வெளிப்படுத்தி விடுகின்றான். (புகாரி ஃபத்ஹ{ல்பாரி 10ஃ486)
3. இறுகிய உள்ளம்
இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன. அவை கற்பாறையைப் போல் ஆகி விட்டன அல்லது (அதை விடவும்) அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும் சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும் திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும் அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை. (2:74)
4. நயவஞ்சகத்தனம்
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும் மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.(அல்-குர்ஆன்)
5. தலைமைத்துவ ஆசை
மனிதர்கள் அமர்ந்திருக்கக் கூடிய சபையில் தலைவராக உட்கார விரும்புவதும் அங்கு நடக்கும் ஆலோசனைகளில் தன்னுடைய கருத்தை மட்டுமே அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதும் இன்னும் அதிகாரம் வகிக்க விரும்புவதும் இத்தகைய சபைகளைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றேன் இத்தகைய தலைமையைக் கொண்ட சபையானது ஆடுகளை அறுக்கும் பலிபீடங்கள் போன்றது. (புகாரி ஸஹீஹ் ஜமாமிஃ 120)
6. கஞ்சத்தனம்
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: யார் கஞ்சத்தனத்திலிருந்து தவிர்ந்து கொண்டார்களோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். பலவீனமான ஈமான் கருமித்தனத்தை உருவாக்குகின்றது. கஞ்சத்தனமும் மற்றும் இறை நம்பிக்கையும் இரண்டும் இறை நம்பிக்கையாளரின் மனதில் ஒன்றாக இணைந்திருக்க முடியாது. (நஸயீ அல் ஸஹீஹ் அல் ஜாமிஃ)
7. தான் செய்யாததைப் பிறருக்குச் சொல்வது
நீங்கள் எதைச் செய்கின்றீர்களோ அதனைப் பிறருக்குச் சொல்லுங்கள் : ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61:2-3)
8. சந்தேகத்திற்கிடமானதைச் செய்தல்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் சந்தேகத்திற்கிடமான விவகாரங்களில் விழுந்து விடுகின்றாரோ அவர் ஹராமானவற்றில் வீழ்ந்து விடுகின்றார் மேய்ப்பதற்கு அனுமதி இல்லாத இடத்திற்கு அருகில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கக் கூடிய இடையன் மிக விரைவிலேயே அந்த இடத்திற்குள் தனது கால்நடைகளை மேய விட்டு விடலாம். (புகாரி- முஸ்லிம்).
9. வரம்பு மீறுதல்
இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மறுமை நாளின் பொழுது சிலர் துஹாமா என்னும் மலையைப் போன்று மிக அதிகமான நன்மைகளுடன் வருவார்கள் ஆனால் அல்லாஹ் அதனை தூசி போல ஆக்கி காற்றில் பறக்க விட்டு விடுவான் என்பதைக் கேட்டுக் கொண்டிருந்த தவ்பான் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களே! இத்தைகயவர்கள் பற்றி எங்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள் அதன் மூலம் நாங்களும் அத்தகைய மனிதர்களாக ஆகி விடாமல் தவிர்ந்து கொள்ள இயலுமல்லவா? என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் உங்களது சகோதரர்களாகவே இருப்பார்கள் உங்களைப் போலவே இருப்பார்கள் நீங்கள் தொழுவது போல அவர்களும் இரவில் நின்று தொழுவார்கள் ஆனால் இறைவன் விதித்திருக்கும் வரம்புகளை மீறும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் அந்த சந்தர்ப்பங்களை அவர்கள் மீறுவதற்குத் தயங்கவும் மாட்டார்கள். (இப்னு மாஜா ஸஹீஹ் அல் ஜாமிஃ )
10. அதிகமாக வாக்குவாதம் செய்தல்.
அதிகப்படியான வாக்குவாதங்கள் செய்வதனின்றும் வழிகாட்டப்பட்டவரைத் தவிர மற்றவர்கள் நேர்வழியை தவற விட்டு விடுவார்கள் (முஸ்னத் அஹ்மத் ஸஹீஹ் அல் ஜாமிஈ ).
ஆதாரங்கள் இல்லாமல் வாதப் பிரதிவாதங்கள் செய்வது ஒருவரை நேர்வழியினின்றும் அவரை தடம் புறழச் செய்து விடும். இன்றைக்குப் பலர் கல்வி ஞானமோ அல்லது அறிஞர்களின் வழிகாட்டுதல்கள் அல்லது குர்ஆன் அல்லது சுன்னா ஆகிய எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் வாதப் பிரதிவாதங்களில் இறங்கி விடுகின்றார்கள். இத்தகைய விவாதங்களிலிருந்து ஒரு முஸ்லிம் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (முஸ்னத் அஹ்மத்)
தன் மீது நியாயம் இருந்த போதிலும் யார் (தேவையற்ற) விவாதங்களிலிருந்து விலகிக் கொள்கின்றாரோ அவர்களுக்கு சொர்க்கத்தின் ஒரு பகுதியில் அவர்களுக்காக ஒரு வீடு ஒன்றைக் கட்டித் தருவதற்கு நான் உறுதியளிக்கின்றேன். (அபூதாவூது ஸஹீஹ் அல் ஜாமிஈ ).
மேற்கூறப்பட்ட பண்புகள் அனைத்தும் இன்றைய நம் சமூகத்தில் மலிந்து காணப்படுபவைகளாகும் இவையனைத்தும் நமது ஈமானில் ஏற்பட்டுள்ள பலவீனங்களைப் படம் பிடித்து காட்டுபவைகளாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்;.
(தொடர் : 01)
(தொடர் : 02)
வியாழன், 3 அக்டோபர், 2013
புதன், 2 அக்டோபர், 2013
ءஉலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர் : 03)
cyfshtpa
K];yPk;fspd; ,d;iwa mty epiyf;fhd fhuzq;fs;;.(njhlH : 03)
''நாங்கள் ஈமான் கொண்டோம்"" என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள்ää ''நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழிபட்டோம்" (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. ''ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை மேலும்ää நீங்கள் அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில்ää எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்"" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். (அல்-குர்ஆன்: 49:14)
நிச்சயமாகää (உண்மையான) முஃமின்கள் யார் என்றால்ää அவர்கள் அல்லாஹ்வின் மீதும்ää அவனுடைய தூதர் மீதும்ää ஈமான் கொண்டுää பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாதுää தம் செல்வங்களைக் கொண்டும்ää தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள். (அல்-குர்ஆன்: 49:15)
மேற்படி அல்குர்ஆனின் 49:14-15 ஆகிய இரு வசனங்களும் உண்மையான முஃமின் யார் முஸ்லிம் யார் என்பதனைத் தெளிவு படுத்துகின்றது. அதாவது ஈமான் கொண்டு விட்டு வெறுமனே வணக்கவழிபாடுகளுடன் தங்களது வாழ்வை சுருக்கி கொண்டபவர்கள் முஸ்லிம்கள் என்றும் தங்களது உயிர் உடல் பொருள் மற்றும் காலநேரலங்கள் போன்ற வளங்களால் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்பவர்கள்தான் உண்மையான முஃமின்கள் என்றும் எம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.
நிச்சயமாக இவ்விரு பிரிவினர்களும் சமமாக மாட்டார்கள்.
ஈமான் கொண்டவர்களில் (நோய்ää பலஹீனம்ää முதுமைää பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும்ää தங்களுடைய சொத்துக்களையும்ää தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக)அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாகமாட்டர்கள் தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரைää உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்;. எனினும்ää ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்;. ஆனால் அறப்போர் செய்வோருக்கோää (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான். (அல்-குர்ஆன்: 4:95)
ஈமானின் கடைசித் தரத்திறகான அடையாளம்; இதற்கப்பால் ஈமான் கிடையாது
நபி (ஸல்லள்ளாஹ{ அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறினார்கள்:-
உங்களில் எவர் தீமையைக் காண்கின்றாரோ அவர் தனது கரத்தால் அதனைத் தடுக்க வேண்டும்ää அதற்கு அவர் சக்தி பெறாவிட்டால்; நாவினால் அதைத் தடுக்க வேண்டும்ää அதற்கும் அவரால் முடியாவிட்டால் மனதால் அதனை வெறுத்துக்கொள்ள வேண்டும். இதுவே ஈமானின் பலவீனமான இறுதி நிலையாகும். ஆதாரம்: முஸ்லிம்.
பிரிதோர் அறிவிப்பில் இதற்கு அப்பால் ஈமானின் படித்தரமொன்று கிடையாது என்று வந்துள்ளது.
இந்த நபி மொழியில் எம்மை சற்று உரசி பார்ப்போம் எம்மிடம் ஈமான் இருக்கின்றதா? என்பதை நாமே அறிந்து கொள்ளலாம்.
எம்மைச் சூள எத்தனை தீமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இவற்றைப்பற்றி நாம் எந்த அளவு கரிசனை காட்டுகின்றோம் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
குறைந்த பட்சம் எம்மால் அத்தீமைகளை கையினாலும் நாவினாலும் தடுக்க முடியா விட்டாலும் மனதாலாவது எம்மில் எத்தை பேர் வெறுக்குகின்றோம்.
மனதாலாவது வெறுக்காத ஒரு மனிதனிடம் ஈமான் அறவே இருக்க முடியாது என்றுதான் நபி (ஸல்லள்ளாஹ{ அலைஹி வஸல்லம்;)அவர்கள் மேற்படி பொன் மொழி மூலம் தெளிவு படுத்துகின்றார்கள்.
ஈமான் உடையோரின் அடையாளம்
.
1. தான விரும்புவதை தன் சகோதரமுஸ்லிமுக்கும் விரும்புதல்.
நபி (ஸல்லள்ளாஹ{ அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறினார்கள்:-
எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அ(ந்த இறைவன்)வன் மீது சத்தியமாக! தமக்கு விருப்பமான ஒன்றைத் தமது சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் எவரும் இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார். (அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்:புகாரிää முஸ்லிம்)
2. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு காட்டுதல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை சுவர்க்கதினுள் நுழையமாட்டீர்கள்; இன்னும் ஒருவருக்கொருவர் சினேகம் கொள்ளும்; வரை இறைநம்பிக்கை கொண்டவர்களாகமாட்டீர்கள். நீங்கள் எந்த செயலை செய்தால் உங்களிடையே அன்பு ஏற்படுமோ அத்தகு செயல்முறை (திட்டத்தை) அறிவிக்க வேண்டாமா? உங்களிடையே 'ஸலாம்' கூறுவதை பரவலாக்குங்கள்'' (அறிவிப்பவர்: அப10ஹ{ரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
முதல் நபி மொழியில் தான் விரும்புவதை தன் சகோதர முஸ்லிமுக்கு விரும்பாதவன் முஃமினாக மாட்டான் என்பதனை நபி (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.
இரண்டாம் நபி மொழி கூறுகின்றது முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சினேகம் கொள்ளாதவரை முஃமின்களாக முடியாது என்று. எனவே முதலில் நாம் விரும்புவதை நம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்பவேண்டும் அவ்வாறே நாம் ஒருவருக்கொருவர் அன்பு கொள்வதும் நாம் உண்மை விசுவாசியாக ஆவதற்கு மிகவும்; அவசியமாகும்.
இந்த இருபண்புகளும் நம்மிடம் இல்லை என்றால் உண்மையில் நாம் முஃமீன்கள் இல்லை என்பதுதான் பொருளாகும்.
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம் மேற்படி நபி மொழியின் ஒளியில் நம்மை சற்று எடைபோட்டு பார்ப்போம். நாம் உண்மையில் இறை விசுவாசிள்தானா? அப்படி என்றால் எந்த அளவு நாம் விரும்புவதை நம் சகோதர முஸ்லிமுக்கு விரும்புகின்றோம்? அப்படி விரும்பாதவரை நாம் உண்மையில் (முஃமின்கள்) இறைவிசுவாசிகள் ஆகமுடியுமா? என்று பார்க்கும் போது மனிதர்களில் அதிகமானோர் பெயரளவில் (முஃமீன்கள்) இறைவிசுவாசிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் அவர்கள் இறைவிசுவாசிகள் (முஃமின்கள்) அல்லர்.
இறைவிசுவாசிகள் (முஃமின்கள்) ஆகாத வரை நிச்சயமாக இம்மையில் வெற்றி பெறவோ அல்லது நாளை மறுமையில் சுவர்க்கம் செல்லவோ முடியாது.
இந்த தலைப்பின் கீழ் அதிகமான நபி மொழிகள் காணப்பாட்டாலும் இந்த இரண்டு நபி மொழிகளும் போதும் எனகருதுகின்றேன்.
தொடர் 02 யைப் படிக்க இதன் கீழ் தரப்பட்டுள்ள தலைப்பை சொடுக்கவும்
SRILANKA ISLAMIC GUIDANCE CENTRE :
உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர்: 02)
aslislamguide.blogspot.com
தொடர் 02 யைப் படிக்க இதன் கீழ் தரப்பட்டுள்ள தலைப்பை சொடுக்கவும்
SRILANKA ISLAMIC GUIDANCE CENTRE :
உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர்: 02)
aslislamguide.blogspot.com
செவ்வாய், 1 அக்டோபர், 2013
இலங்கை முஸ்லிம்கள் சிங்கள முஸ்லிம்களே
கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்கள் அன்மையில் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சி ஒன்றின் போது வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேட்டியிலிருந்து.
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
பொது பள சேனா என்ற இனவாத அமைப்பு கடந்த 17-03-2013 அன்று கண்டியில்
பொது பள சேனா என்ற இனவாத அமைப்பு கடந்த 17-03-2013 அன்று கண்டியில் நடாத்திய முஸ்லிம் விரோத மாநாட்டில் அதன் செயலாளர் (அஞ்)ஞான சேர (ஹொற) தேரர் ஆற்றிய முஸ்லிம் வரோத உரையின் ஒரு பகுதி.
குறிப்பிடத்தக்க விஷேடம் என்னவென்றால் அவர் தனது உரையில் முஸ்லிம்கள் சிங்கள கண்னிப் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறுகின்றார் அதன் போது அனைவரும் கைதட்டி தங்கள் மகிழ்சியை வெளிக்காட்டுகின்றார்கள்.
எதற்கு கைதட்டுவதென்றே அறிவற்ற மக்கள்தான் அவர்களுக்குப் பின்னால் செல்கின்றார்கள் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා
මව්ලවි මුනාබු නුබාර්දීන්. (සාම විනිසුරු) සංවිධායක ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ ...
-
சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஞானசார தேரர் அவர்களுக்கு நேர் வழியில் இருப்பவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் பௌத்த மதத...
-
මිනිසාට ඇඳුමක්! කතුවරයා/දේශකයා: ඉබ්නු මන්සූර් on 22nd October 2011 සකස්කිරීම: ඉබ්නු මන්සූර් ඇඳුම සංස්කෘතියෙන් සංස්කෘතියට වෙනස්විය හ...
-
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்pன் ஏற்பாட்டில் கடந்த 12-10-2013 ம் திகதி திஹாரி சுமையா பெண்கள் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும...



















