சனி, 5 அக்டோபர், 2013

உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர் : 04)

உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர் : 04)

முனாப் நுபார்தீன்- ஜே.பி. பணிப்பாளர். அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்

ஈமான் பலவீனமுறுவதற்கான பிரதான காரணங்கள்.

1. உலக ஆசையும் மரணத்தை வெறுத்தலும்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

மிக விரைவில் ஒரு காலம் வரும்ää உண்பவன் தனது சகாவை பந்திக்கு அழைப்பதைப் போல் உங்களின் மீது தீய சக்திகளின் ஆதிக்கமிருக்கும். (நீங்கள்ää ஈமானின் பலம் குன்றியிருப்பீர்கள்).தோழரொருவர் கேட்டார் :நாயகமே! நூம் அன்று எண்ணிக்கை குறைந்து இருப்பதால் அவ்வாறு நிகழுமோ? என்று
அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் பதலளித்தார்கள்: நீங்கள் அப்போது மிகுதியாக இருப்பீர்கள். எனினும் (ஈமான் விஷயத்தில்) நீங்கள் நுரையைப் போன்றும்ää நீர்க் குமிழிகளைப் போன்றும் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் பகைவர்களின் மனதிலிருந்து உங்களைப் பற்றிய அச்சத்தை இறைவன் போக்கி விடுவான். மேலும் உங்களுடைய மனங்களில் வஹ்னை ஏற்படுத்தி விடுவான்! அப்போது வஹ்ன்ää என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு வஹ்ன் என்றால் உலக ஆசையும்ää மரணத்தை வெறுத்தலும் ஆகும்! என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்வர் : தௌபான் (ரலி) நூல் : அபூதாவூது)

2. வெளிப்படையான பாவம்
என்னுடைய உம்மத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நல்லவர்களே (இரகசியமாகச் செய்த பாவங்களை) வெளிப்படுத்துபவர்களைத் தவிர உதாரணமாக ஒரு மனிதன் இரவில் செய்ததை அல்லாஹ் மறைத்து விடுகின்றான் காலையானதும் (பாவம் செய்த) அவன் ஓ! இன்ன மனிதனே நான் இன்ன இன்னதைச் செய்தேன் என்று மற்ற மனிதர்களிடம் கூறி விடுகின்றான். இரவு முழுவதும் அவனது பாவத்தை அவனது இறைவன் மறைத்தான் ஆனால் இறைவன் மறைத்ததை இவன் வெளிப்படுத்தி விடுகின்றான். (புகாரி ஃபத்ஹ{ல்பாரி 10ஃ486)

3. இறுகிய உள்ளம்
இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன. அவை கற்பாறையைப் போல் ஆகி விட்டன அல்லது (அதை விடவும்) அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும் சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும் திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும் அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை. (2:74)

4. நயவஞ்சகத்தனம்

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும் மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.(அல்-குர்ஆன்)
5. தலைமைத்துவ ஆசை

மனிதர்கள் அமர்ந்திருக்கக் கூடிய சபையில் தலைவராக உட்கார விரும்புவதும் அங்கு நடக்கும் ஆலோசனைகளில் தன்னுடைய கருத்தை மட்டுமே அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதும் இன்னும் அதிகாரம் வகிக்க விரும்புவதும் இத்தகைய சபைகளைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றேன் இத்தகைய தலைமையைக் கொண்ட சபையானது ஆடுகளை அறுக்கும் பலிபீடங்கள் போன்றது. (புகாரி  ஸஹீஹ் ஜமாமிஃ 120)

6. கஞ்சத்தனம்

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: யார் கஞ்சத்தனத்திலிருந்து தவிர்ந்து கொண்டார்களோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். பலவீனமான ஈமான் கருமித்தனத்தை உருவாக்குகின்றது. கஞ்சத்தனமும் மற்றும் இறை நம்பிக்கையும் இரண்டும் இறை நம்பிக்கையாளரின் மனதில் ஒன்றாக இணைந்திருக்க முடியாது. (நஸயீ அல்  ஸஹீஹ் அல் ஜாமிஃ)

7. தான் செய்யாததைப் பிறருக்குச் சொல்வது

நீங்கள் எதைச் செய்கின்றீர்களோ அதனைப் பிறருக்குச் சொல்லுங்கள் : ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61:2-3)
8. சந்தேகத்திற்கிடமானதைச் செய்தல்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் சந்தேகத்திற்கிடமான விவகாரங்களில் விழுந்து விடுகின்றாரோ அவர் ஹராமானவற்றில் வீழ்ந்து விடுகின்றார் மேய்ப்பதற்கு அனுமதி இல்லாத இடத்திற்கு அருகில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கக் கூடிய இடையன் மிக விரைவிலேயே அந்த இடத்திற்குள் தனது கால்நடைகளை மேய விட்டு விடலாம். (புகாரி- முஸ்லிம்).

9. வரம்பு மீறுதல்

இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமை நாளின் பொழுது சிலர் துஹாமா என்னும் மலையைப் போன்று மிக அதிகமான நன்மைகளுடன் வருவார்கள் ஆனால் அல்லாஹ் அதனை தூசி போல ஆக்கி காற்றில் பறக்க விட்டு விடுவான் என்பதைக் கேட்டுக் கொண்டிருந்த தவ்பான் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களே! இத்தைகயவர்கள் பற்றி எங்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள் அதன் மூலம் நாங்களும் அத்தகைய மனிதர்களாக ஆகி விடாமல் தவிர்ந்து கொள்ள இயலுமல்லவா? என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் உங்களது சகோதரர்களாகவே இருப்பார்கள் உங்களைப் போலவே இருப்பார்கள் நீங்கள் தொழுவது போல அவர்களும் இரவில் நின்று தொழுவார்கள் ஆனால் இறைவன் விதித்திருக்கும் வரம்புகளை மீறும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் அந்த சந்தர்ப்பங்களை அவர்கள் மீறுவதற்குத் தயங்கவும் மாட்டார்கள். (இப்னு மாஜா  ஸஹீஹ் அல் ஜாமிஃ )

10. அதிகமாக வாக்குவாதம் செய்தல்.

அதிகப்படியான வாக்குவாதங்கள் செய்வதனின்றும் வழிகாட்டப்பட்டவரைத் தவிர மற்றவர்கள் நேர்வழியை தவற விட்டு விடுவார்கள் (முஸ்னத் அஹ்மத் ஸஹீஹ் அல் ஜாமிஈ ).
ஆதாரங்கள் இல்லாமல் வாதப் பிரதிவாதங்கள் செய்வது ஒருவரை நேர்வழியினின்றும் அவரை தடம் புறழச் செய்து விடும். இன்றைக்குப் பலர் கல்வி ஞானமோ அல்லது அறிஞர்களின் வழிகாட்டுதல்கள் அல்லது குர்ஆன் அல்லது சுன்னா ஆகிய எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் வாதப் பிரதிவாதங்களில் இறங்கி விடுகின்றார்கள். இத்தகைய விவாதங்களிலிருந்து ஒரு முஸ்லிம் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (முஸ்னத் அஹ்மத்)

தன் மீது நியாயம் இருந்த போதிலும் யார் (தேவையற்ற) விவாதங்களிலிருந்து விலகிக் கொள்கின்றாரோ அவர்களுக்கு சொர்க்கத்தின் ஒரு பகுதியில் அவர்களுக்காக ஒரு வீடு ஒன்றைக் கட்டித் தருவதற்கு நான் உறுதியளிக்கின்றேன்.  (அபூதாவூது ஸஹீஹ் அல் ஜாமிஈ ).

மேற்கூறப்பட்ட பண்புகள் அனைத்தும் இன்றைய நம் சமூகத்தில் மலிந்து காணப்படுபவைகளாகும் இவையனைத்தும் நமது ஈமானில் ஏற்பட்டுள்ள பலவீனங்களைப் படம் பிடித்து காட்டுபவைகளாகும்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்;.

(தொடர் : 01)


(தொடர் : 02)






கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...