செவ்வாய், 29 ஏப்ரல், 2014

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 05

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 05

இதற்க்கு முந்திய தொடர்களில் நாம் பார்த்த கல்வி ஈமான் மற்றும் தக்வா போன்றவைகளில் ஏற்ப்பட்ட அந்த குறைபாடுகள்தான் இன்றைய எமது சகோதரத்துவத்தை சிதைவுறச் செய்திருக்கினறது.

அப்படி இல்லை என்றால் இஸ்லாம் என்ற இந்த வரையறைக்குள் இருந்து கொண்டு இன்னுமொரு முஸ்லிம் சகோதரனை அவன் தான் சார்ந்திருக்கும் இயக்கத்தைச் சாராதவன் அல்லது தான் சார்ந்திருக்கும் கட்ச்சியைச் சாராதவன் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித நியாயமும் இன்றி அவனைத் தரக்குறைவாகக் கருதுவதும் தமாழ்திப் பேசுவதும் பளிவாங்குவதும் காட்டிக் கொடுத்து அவனின் துன்பத்தில் இன்பம் கானுவதும் போன்ற இந்த இழிகுணங்கள் ஏற்பட்டிருக்காது. இவையனைத்தும் எமது சகோதரத்துவத்திலும் சமூக ஐக்கியத்திலும் மிகப்பெரியதோர் வெற்றிடத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அ(ந்த இறைவன்)வன் மீது சத்தியமாக! தமக்கு விருப்பமான ஒன்றைத் தமது சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் எவரும் இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார். (அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்:புகாரிää முஸ்லிம்)

இன்னும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை சுவர்க்கதினுள் நுழையமாட்டீர்கள்; அவ்வாறே நீங்கள் ஒருவரையொருவர் அன்பு கொள்ளாத வரை இறைநம்பிக்கை கொண்டவர்களாக மாட்டீர்கள். நீங்கள் எந்த செயலை செய்தால் உங்களிடையே அன்பு ஏற்படுமோ அத்தகு செயல்முறை (திட்டத்தை) அறிவிக்க வேண்டாமா? உங்களிடையே 'ஸலாம்' கூறுவதை பரவலாக்குங்கள். (அறிவிப்பவர்: அப10ஹ{ரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)

மேற்படி நபிமொழிகளுள் முதல் நபி மொழியில் தான் விரும்புவதை தன் சகோதர முஸ்லிமுக்கு விரும்பாதவன் முஃமினாக மாட்டான் என்பதனை நபி (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

இரண்டாம் நபி மொழி கூறுகின்றது முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அன்பு கொள்ளாதவரை முஃமின்களாக முடியாது என்று. எனவே முதலில் நாம் விரும்புவதை நம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவதும் அவ்வாறே நாம் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு கொள்வதும் நாம் உண்மை விசுவாசியாக ஆவதற்கு மிகவும்;  அவசியமானவைகளாகும். இந்த இருபண்புகளும் நம்மிடம் இல்லை என்றால் உண்மையில் நாம் முஃமீன்கள் ஆகமுடியாது.

இப்பொழுது நாம் சற்று நிதானமாக இயக்கம் மற்றும் கட்ச்சிகளுக்கு வெளியே இருந்து சிந்தித்துப் பார்ப்போம் மேற்படி நபி மொழியின் ஒளியில் நம்மை ஒரு முறை எடைபோட்டு பார்ப்போம். நாம் உண்மையில் இறை விசுவாசிள்தானா? அப்படி என்றால்  எந்த அளவு நாம் விரும்புவதை நம் சகோதர முஸ்லிமுக்கு விரும்புகின்றோம்? அப்படி விரும்பாதவரை நாம் உண்மையில் (முஃமின்கள்) இறைவிசுவாசிகள் ஆகமுடியுமா? எந்த அளவு நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றோம். என்று பார்க்கும் போது மனிதர்களில் அதிகமானோர் பெயரளவில் (முஃமீன்கள்) இறைவிசுவாசிகள்  என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் அவர்கள் இறைவிசுவாசிகள் (முஃமின்கள்)  அல்லர். இறைவிசுவாசிகள்  (முஃமின்கள்) ஆகாத வரை நிச்சயமாக இம்மையில் வெற்றி பெறவோ அல்லது நாளை மறுமையில் சுவர்க்கம் செல்லவோ முடியாது என்ப உறுதி.

மேற்படி நபிமொழிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் நாம் உண்மையில் விசுவாசிகளாக இருந்தால் அந்த விசுவாசத்திற்கு கட்டியம் கூறும் சகோதரத்துவப் பிணைப்பு எங்களுக்கிடையில் ஏற்ப்பபட வேண்டும் என்பதேயாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
ஒரு இறை நம்பிக்கையாளர் இன்னொரு இறை நம்பிக்கையாளருக்கு (கற்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும்) கட்டிடத்தைப் போன்றாவார்'' (அறிவிப்பவர்: அப10மூஸா  அபூதாவூத்)

ஒரு கட்டடம் பலம் மிக்கதாகவும் வலுவாகவும் இருப்பதற்கு ஒரு கல் இன்னொரு கல்லை எவ்வாறு தாங்கி நிற்கின்றதோ அவ்வாறே முஸ்லிம் சமூகம் பலம் பெறுவதற்கும்ää வலுப்பெறுவதற்கும் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனைத் தாங்கி நிற்க வேண்டும் என்பதனை உணர்த்துகிறது இந்த நபிமொழி. 

மீண்டும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தமக்கிடையே இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவரையொருவர் சார்ந்து நிற்பதிலும் ஓர் உடலைப் போன்று முஸ்லிம்களை நீ காண்பாய். ஓர் உறுப்புக்கு நோய் ஏதும் வந்துவிட்டால் உடலின் மற்ற உறுப்புகளும் உறங்காமல் காய்ச்சலால் (வாடி அதன் துன்பத்தில் பங்குகொண்டு) துணை நிற்கின்றது.   (அறிவிப்பாளர் : நுஃமான் பின் பஷீர் நூல்: புகாரி)

அவ்வாறே நம் கசேதரத்துவத்தினைத் தகர்க்கக்கூடிய எந்தவொரு செயலையும் ஒரு மஸ்லிம் எச்சந்தர்ப்பத்திலும் செய்யமாட்டான் அவ்வாறு செய்வது அவனுக்குத் தடுக்கப்பட்ட ஹராமான செயலாகும்


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

1. நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம். 
2. ஒருவருக்கொருவர் போட்டியாக விலைகளை உயர்த்திக் கேட்க வேண்டாம்.

3. ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள வேண்டாம். 
4. ஒருவரையொருவர் புறக்கணித்து நடக்க வேண்டாம். 
5. உங்களில் சிலர் இன்னும் சிலரது வியாபாரத்திற்கெதிராக வியாபாரம் செய்ய வேண்டாம். 

அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள். ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரனாவான். 
6. எனவே அவன்; அடுத்த முஸ்லிமுக்கு அநீதியிழைக்க மாட்டான். 
7. அவனைக் கை விட்டு விட மாட்டான். 
8. அவனிடம் பொய்யுரைக்க மாட்டான். 
9. அவனை இழிவாகக் கருத மாட்டான்.

''இறையச்சம் இங்கே உள்ளது"" என்று மூன்று தடவைகள் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டிய நபியவர்கள் தொடர்ந்தும் கூறினார்கள்.
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை இழிவாகக் கருதுவதே அவன் தீயவன் என்பதற்கு போதுமான செயலாகும். 

10. ஒவ்வொரு முஸ்லிமின் இரத்தமும் உடமையும் மானமும் அடுத்த முஸ்லிமின் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது.(; நூல்:; முஸ்லிம் )

தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொள்ள விரும்பும் எந்தவொருவரும் மேற்கூறப்பட்டுள்ள இந்த இழி குணங்களிலிருந்து முழுமையாக விடுபடாத வரை அவன் உண்மையான முஸ்லிமாக முடியாது.

சிந்தித்துப்பாருங்கள் மேலே நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்பட்ட இந்த பழிக்கத்தக்கதான பத்துப் பண்புகளில் எதுதான் எம்மிடம் இல்லை அனைத்தும் மொத்தமாகவும் சில்லறையாகவும் அனைவரிடத்திலும் மிக சர்வசாதாரணமாகவே காணப்படுகின்றன. 

1. பொறாமை : இங்கே தடுக்கப்பட்டுள்ள பண்புகளில் முதலாவது பொறாமையாகும் ஏனெனில் எந்தவொரு மனிதனுடைய உள்ளத்தில் பொறாமை உட்புகுந்து விடுகின்றதோ அந்த உள்ளத்திலிருந்து ஈமான் விடைபெற்றுச் சென்று விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானுடைய உள்ளத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேராது (இபுனு ஹிப்பான்)

பொறாமை நல்லறங்களை அழித்து வீடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களை நீங்கள் பொறாமையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடுகின்றது.’ 

2. கொடுக்கல் வாங்கல் : அதாவது ஒருவர் ஒரு குறிப்பிட்ட விலைக்குக் கேட்ட பொருளை இன்னொருவர் முதலாமவர் கேட்ட விலையை விட விலையை உயர்த்திக் கேட்பது ஹராமாகும் ஏனெனில் அது அந்த இருவருடைய சகோரத்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

3. பகமை : ஒருவரையொருவர் எக்காரணம் கொண்டும் பகைத்துக் கொள்வது ஹராமாகும். மன்னித்து மறந்து வாழ வேண்டும்.

4. புறக்கணிப்பு: ஒருவரையொருவர் புறக்கணித்து நடப்பதும் ஹராமாகும் எல்லா நிலையிலும் ஒருவரையொருவர் அனுசரித்து அனைத்துக் கொள்ள வேண்டும்.

5. வியாபாரம் : ஒருவருடைய வியாபாரத்திற்கு எதிராக அவருக்குப் போட்டியாக வியாபாரம் செய்வது ஹராமாகும் ஏனெனில் அந்தச் செயலும் நமது சகோரத்துவத்தில் விரிசலை ஏற்ப்படுத்தி விடும்.

6. அநீதி : பிற முஸ்லிம் சகோரனுக்கு அநிதி இழைப்பதும் ஹராமாகும்.

7. கை விட்டு விடல் : பிற முஸ்லிம்களுக்கு கைகொடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் கைகொடுத்து உதவாது விட்டு விடுவதும் ஹராமாகும்.

8. பொய் சொல்லுதல்: பிற முஸ்லிம் சகோதரனிடம் பொய்யுரைத்தலும் ஹராமாகும்.

9. தரக்குறைவாகக் கருதுதல்: பிற முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருதுவதும் ஹராமாகும். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை இழிவாகக் கருதுவதே அவன் தீயவன் என்பதற்கு போதுமான செயலாகும்.

10. உயிர் உடமை மானம் : பிற முஸ்லிம் சகோரனுடைய இரத்தத்தை சிந்துதல் அவனை மானபங்கப்படுத்துதல் மற்றும் அவனின் உடமைகளை கையகப்படுத்துதல் போன்ற அத்தனையும் ஹராமாகும்.

மேற்படி பத்து வகையான ஹராம்களில் எந்த அளவு நாம் மூழ்கிப் போயுள்ளோம் என்பதனைச் சற்று சந்தித்துப் பார்ப்போம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்… 

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்

அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
29-04-2014


உழவன் காவல் வைத்து விட்டான்.

உழவன் காவல் வைத்து விட்டான்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் கழுத காவல் முறைமையும்.

நமது நாட்டின் நிலையைப் பார்க்கும் போது நாம் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்ற போது பாட புத்தகத்தில் உழவன் காவல் வைத்து விட்டான். எனும் தலைப்பில் ஒரு பாடம் படித்தது ஞாபகத்திற்கு வருகின்றது. 

ஒரு ஊரில் ஒரு உழவன் இருந்தான் அவனது விவசாய நிலத்தை பறவைகள் பாழ்படுத்துவதை அவதானித்த அவன் அவற்றுக்கு காவல் செய்ய எண்ணினால் ஆதலால் பறவைகளை விரட்ட வேண்டுமானால் பெரும் சத்தம் எழுப்பப்பட வேண்டும் என்று அவனுக்கத் தோன்றியது எனவே ஒரு கழுதையை வாங்கி தோட்டத்தில் விட்டால் அது எழுப்பும் பெரும் சத்தம் பறவைகளை விரட்டி விடக்கூடும் என்றென்னி கழுதையொன்றை வாங்கி தோட்டத்திற்குக் காவல் செய்ய விட்டான். காலையும் மாலையும் அதிகமான பறவைகள் தனது எஜமானனின் தோட்டத்தை அபகரிப்பதனைக் கண்ட கழுதையோ சத்தம் போட்டால் பறவைகளை கைதாக்க முடியாமல் போய் விடும் என்றென்னி எவ்வித சத்தமுமின்றி அங்கும் இங்குமாகத் தோட்டத்திற்குள் ஓடி ஓடி பறவைகளை கைதாக்க என்னியது.

கழுதையின் நோக்கத்தினைப் புரிந்து கொண்ட பறவைகளும் அங்கும் இங்குமாகப் பறந்து பறந்து கழுதையை ஓடவைத்தன.  மறுநாள் காலையில் தோட்டங்காரன் வந்து பார்த்தபோது தோட்டம் முழுவதும் அழிக்கப்பட்டிருந்ததைக் கண்டு சினம் கொண்ட தோட்டக்காரன் அந்த கழுதையை அடித்துத் துரத்தி விட்டான்.

இந்த கதைக்கு ஒப்பானதாகத்தான் நம் நாட்டு  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் காணப்படுகின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக சிறுபாண்மை சமூகங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பிரயோகித்து நம் உரிமைகளைப் பாதுகாப்பார் என்றே பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று ஜனாதிபதியின் மௌனம் கழுதை காவல் காத்த கதையாகத்தான் உள்ளது.

எப்பொழுதுதான் இந்த உழவர்கூட்டம் இந்தக் கழுதையை நைய்யப் புடைத்துத் துரத்தப்போகின்றதோ?

முனாப் நுபார்தீன்.

திங்கள், 28 ஏப்ரல், 2014

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 04

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 04

تقوى எனும் இறையச்சத்தில் காணப்படும் பலவீனம்.

அல்லாஹ் கூறுகின்றான்: 

ஈமான் கொண்டோர்களே! நீங்கள் தக்வா உடயவர்களாக ஆகுவதற்காக உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது  (அல்-குர்ஆன் :2 : 183)

இஸ்லாமிய கல்வியில் ஏற்பட்ட அந்தப் பாதிப்பு நமது ஈமான் எனும் இறை விசுவாசத்தில் எந்த அளவு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதோ அவ்வாறே எமது அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து காணப்பட வேண்டிய தக்வா எனும் இறையச்சத்திலும் மிகப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதை உணரக்க்கூடியதாகவுள்ளது.

تقوى  எனும் அரபுப் பதத்திற்கு நாம் இலகுவாக இறையச்சம் என்று மொழியாக்கம் செய்த போதும் அது அதையும்விட அதிகூடிய பொருற்ச் செறிவு மிக்க ஒரு வாhத்தையாகும். அதன் பொருளை அதற்கே உரிய அதன் மூல மொழியிலேயே அன்றி விளங்குதல் மிகக் கடினமாகும். என்றாலும் குறைந்த அளவு தக்காத்துக் கொள்ளல் தடுத்துக் கொள்ளல் வரம்பை மீறாதிருத்தல் போன்ற பொருட்க்களைக் கொடுக்கலாம்.

அதாவது தீமைகளைத் தவிர்த்துக் கொள்வதன் ஊடாக அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தன்னைத் தக்காத்துக் கொள்ளுதல் அல்லது தீமைகளைத் தவிர்த்திருத்தல் அல்லது எல்லைக் கோட்டைத் தாண்டாதிருத்தல் என்று பொருள் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
நிச்சயமாக அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) மிகத்தெளிவானது. அவ்வாறே நிச்சயமாக தடுக்கப்பட்டவையும் (ஹராம்) மிகத்தெளிவானதே. இவ்விரண்டிற்குமிடையே இவை ஹலாலானவையாää அல்லது ஹராமானவையா என்ற சந்தேகத்திற்கிடமான விடயங்களும் காணப்படும். அவற்றை மனிதர்களில் அநேகர் அறிந்து கொள்ள மாட்டார்கள். எனவே எவர் அத்தகைய சந்தேகத்திற்கிடமானவற்றில்; (வீழ்ந்து விடாதவாறு தன்னைத்) தற்க்காத்துக் கொள்கின்றாரோää அவர் தனது மார்க்கத்தையும்ää கண்ணியத்தையும்ää பாதுகாத்துக் கொண்டவராவார். மேலும் எவர் அத்தகைய சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்து விடுகிறாரோ அவர் தடுக்கப்படவற்றி (ஹராமி) ல் வீழ்ந்து விட்டவராவார். தடுக்கப்பட்ட வேலியைச் சூழ தனது கால்நடைகளை - அவை அதில் மேய்ந்து விடக் கூடிய விதத்தில் மேய்த்துக் கொண்டிருக்கும் ஓர் இடயனைப் போல். ஒவ்வோர் அரசனுக்கும் ஒரு எல்லைக் கோடு உண்டு. அல்லாஹ்வுக்குகுரிய எல்லைக் கோடு அவனால் தடுக்கப்பட்ட (ஹராமான) வைகளாகும்.

அறிந்து கொள்ளுங்கள் உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர்கெட்டு விடுமானால்; உடல் முழுவதும் சீர்கெட்டு விடும். அதுவன்றோ  இதயம்.

மேற்படி நபி மொழியில் யார் ஒருவர் சந்தேகத்திற்கிடமானவற்றில்; (வீழ்ந்து விடாதவாறு தன்னைத்) தற்க்காத்துக் கொள்கின்றாரோ என்பதற்கு ومن اتقى  எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது இது تقوى  எனும் மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும் எனவே இந்த இடத்தில் மேற்ச்சொல்லப்பட்ட அத்தனை பொருளையும் அது ஏற்றுக் கொளளும்.

அதாவது  யார் ஒருவர் சந்தேகத்திற்கிடமானவற்றில்; (வீழ்ந்து விடாதவாறு தன்னைத்) தற்க்காத்துக் கொள்கின்றாரோ என்றும் அல்லது யார் ஒருவர் சந்தேகத்திற்கிடமானவற்றில்; (வீழ்ந்து விடாதவாறு தன்னைத்) தடுத்துக் கொள்கின்றாரோ என்றும் அல்லது யார் ஒருவர் சந்தேகத்திற் கிடமானவற்றில்; (வீழ்ந்து விடாதவாறு) வரம்பை மீறாதிருக்கின்றாரோ என்று எந்தப் பொருளைக் கொடுத்தாலும் பிழையல்ல. என்றாலு நாம் பிற மொழிகளில் எந்த அளவு பொருள் கொடுத்தாலும் அவை அத்தனையும் குறைவானதே. இது வேறு எந்தவொரு மொழிக்கும் இல்லாதவாறு  அரபு மொழிக்கே உரிய சிறப்பம்சமாகும்.

இதனை நாம் இன்னுமொரு வகையில் விளங்கிக் கொள்ளலாம் அதாவது تقوى என்ற அரபுச் சொல்லின் எதிர்கருத்துச் சொல் طغىان  என்பதாகும் இதன் பொருள் வரம்பு மீறுதலாகும். அப்படியாயின் வரம்பு மீறுதலுக்கு எதிர்கருத்து வரம்பு மீறாதிருத்தலாகும்.

ஆகவே تقوى என்ற சொலலுக்குரிய சரியான பொருள் இஸ்லாத்தின் தடைகளை மீறாதிருத்தலாகும் என்ற முடிவுக்கள் நாம் வரலாம்.

அல்லாஹ் கூறுகின்றான்: 
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோää குடிபாணத்தையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (அல்-குர்ஆன் :78: 21-26)

மேற்படி வசனங்களில் வரம்பு மீறியவர்களைக் குறிக்க  طغى  என்ற சொல் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது.

அவ்வாறே அதே அத்தியயாத்தில்  தொடர்ந்து வரம்பு மீறாதவர்களைக் குறிக்க تقوى  எனும் மூலத்திலிருந்து பெறப்படும் متقين  என்ற சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்: 
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு (முத்தகீன்) வெற்றிப் பாக்கியம் இருக்கிறது. தோட்டங்களும்ää திராட்சைப் பழங்களும். ஒரே வயதுள்ள கன்னிகளும். பானம் நிறைந்த கிண்ணங்களும்     (இருக்கின்றன). (அல்-குர்ஆன் :78: 31- 34)

எனவே மேற்படி விளக்கத்தின் அடிப்படையில் تقوى  என்பது அல்லாஹ்வுடைய மற்றும் அவனின் தூதருடைய தடையானைகளை மீறாது நடந்து கொள்தலாகும் இந்த இடத்தில் எமது வாழ்க்கையை ஒரு கணம் திரும்பிப் பார்ப்போம் நாம் எந்த அளவுக்கு அல்லாஹ்வுடைய மற்றும் அவனின் தூதருடைய தடையானைகளை மீறாது நம்மைத் தற்க்காத்து நடந்து கொள்கின்றோம்.

எந்த அளவு அல்லாஹ்வுடையவும் அவன் தூதருடையவும் கட்டளைகளுக்கு மதிப்பளிக்கின்றோம். 

சந்தேகத்திற்கு இடம்பாடானவற்றை செய்யக்கூடிய ஒருவனே தக்வாவை இழந்து ஹராத்தில் வீழ்ந்து விடுகின்றான் எனும் போது தெளிவாக ஹராம் என்று தெரிந்நிருந்தும் அந்த  ஹராத்தைச் சிறிதும் தயக்கமின்றி பகிரங்கமாகச் செய்வது நம் தக்வாவின் பலவீனத்தின் அடையாளமன்றோ.

நபி (ஸல்) அவாகள் கூறினாhகள் : 
என்னுடைய உம்மத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மன்னிக்கப்படக் கூடியவர்களேää யார் பாவங்களை வெளிப்படையாகச் செய்கின்றார்களோ அவர்களைத் தவிரää உதாரணமாகää ஒரு மனிதன் இரவில் செய்ததைää அல்லாஹ் மறைத்து விடுகின்றான்ää காலையானதும் (பாவம் செய்த) அவன் ஓ! இன்ன மனிதனேää நான் இன்ன இன்னதைச் செய்தேன் என்று மற்ற மனிதர்களிடம் கூறி விடுகின்றான். இரவு முழுவதும் அவனது பாவத்தை அவனது இறைவன் மறைத்தான்ää ஆனால் இறைவன் மறைத்ததை இவன் வெளிப்படுத்தி விடுகின்றான். (புகாரி)

இத்தகைய தீயச் செயற்களிலிருந்து விடுபட முடியாமைக்கான பிரதான காரணம் தன்னைத் தற்க்காத்து கொள்ள முடியாத அளவு تقوي  பலமிளந்து போய் உள்ளதேயாகும். தக்வா என்பது அன்டி வைரஸ் போன்றதாகும் எந்த உள்ளத்தில் இந்த தக்வா எனும் அன்டி வைரஸ் நிறுவப்பட்டு இல்லையோ அத்தகைய உள்ளத்தில் தீமைகள் எனும் வைரஸ் ஊடுருவி உள்ளம் எனும் ஹார்ட் டிஸ்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஈமான் இஹ்ஸான் அஹ்லாக் போன்ற மென்பொருற்களில் பாதிப்பை ஏற்ப்படுத்தி விடும் அல்லது முற்றாகவே அழித்தும் விடும். 

அடுத்து இன்று நம் சமூகத்தில் கனிசமான அளவு மக்கள் அல்-குர்ஆனை ஓரளவேனும் கற்று விளங்கி வருகின்றார்கள் என்றாலும் அதன்படி நேர் வழியில் நடக்குகின்றார்களா? என்றால் இல்லை என்பதுதான் அதிகமான பதிலாக இருக்கும் காரணம் அவர்கள் எந்த அளவு அல்குர்ஆனைக் கற்று விளங்கிய போதிலும் அவர்களிடம் தக்வா எனும் தற்க்காப்பு ஆயுதமாகிய அன்;டி வைரஸ் இல்லாத வரை அவர்கள் யாரும் நேர் வழி பெற இயலாது.

ஏனெனில் ஒரு கணனியில் நமது பதிவேற்றங்கள் மற்றும் மென்பொருட்களைப் பாதுகாத்துக் கொள்ள அன்டி வைரஸ் நிருவப்படுதல் எந்த அளவுக்கு முக்கியமோ அவ்வாறே  அல்-குர்ஆன் மூலம் எமது உள்ளங்களில் பதிவேற்றப்படுகின்ற ஹிதாயத் எனும் அந்த நன்நெறியினைப் பாதுகாத்துக் கொள்ள தக்வா நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும் ஆதலால்தான் அல்குர்ஆன் தக்வாவைத் தன்னகத்தே கொண்டுள்ளவ ர்களுக்கத்தான் வழிகாட்டும் என்று அதன் ஆரம்ப வரிகளிலேயே மிகத்தெளிவாக கூறிக்கொண்டிருக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்: 
இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;ää இதில் எத்தகைய சந்தேகமும் இல்லைää இது தக்வாவை உடையோருக்கு நேர்வழிகாட்டும். (அல்-குர்ஆன் :2 :2)

மனிதர்கள் நேர்வழி பெறுவதற்க்காக  வேண்டி அல்-குர்ஆனை இறக்கியருளிய அல்லாஹ் அந்த நேர்வழியைப் பெற்றுத்தரும் தக்வாவை அடைந்து கொள்ளும் வழிமுறையாகிய நோன்பையும் அல்-குர்ஆன் அருளப்பட்ட அதே மாதத்தில் எமக்கக் கடமையாக்கிள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்: 
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர் வழி காட்டியாகவும்ää தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவேää உங்களில் எவர் அம்மாதத்தை அடைகின்றாரோää அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்;. (அல்-குர்ஆன் :2 : 185)

இன்ஷா அல்லாஹ் தொடரும்…
இப்படிக்கு

முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
28-04-2014 திங்கள்


ஞாயிறு, 27 ஏப்ரல், 2014


بسم الله الرحمن الرحيم

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 03

إيمان எனும் இறை விசுவாசத்தில் ஏற்பட்டுள்ள பலவீனம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பலசாலியான இறை விசுவாசி பலவீனனான இறைவிசுவாசியை விட அல்லாஹ்விடத்தில் சிறந்தவனும் விருப்புக்குரியவனும் ஆவான். (நூல் : முஸ்லிம் )

நமது கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த பலவீனம் நமது ஈமானிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்று பார்த்தோம். கல்வியை இஸ்லாம் வலியுறுத்துவது போன்று வேறு எந்த சமயமும் வலியுறுத்துவதில்லை அல்குர்ஆன் முழுவதிலும் அல்லாஹ் அவனிடம் அதிகப்படுத்துமாறு பிரார்த்தனை செய்யுமாறு கற்றுத் தருகின்ற ஒரேயொரு விடயம் இந்த கல்வி மட்டும்தான் ஏனெனில்; கல்வியின் மூலம்தான் மனிதனுடைய ஈமான் அதிகரிக்க முடியும். ஆனால் இன்று நாம் கற்றிருக்கின்ற இந்த மார்க்கல்வி எந்த அளவு எமது ஈமானை அதிகரிக்கச் செய்திருக்கின்றது என்பதனைப் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மறுவுலக வாழ்க்கைதனை மைய்யமாக் கொண்டு கற்கப்பட வேண்டிய இந்தக் கல்வி இவ்வுலகை மைய்யப்படுத்தி கற்கப்படுவதனால் மனித மனங்களில் மறுமை மீது ஏற்ப்பட வேண்டிய ஆசைக்குப் பதிலாக இவ்வுலக ஆசையே மேலோங்கிக் காணப்டுகின்றது.

நமது ஈமானை பலமிளக்கச் செய்கின்ற இது போன்ற பல விடயங்கள் இன்று நம் சமூகத்தில் உணரப்படாமல் மலிந்து காணப்படுகின்றன. அக்காரணிகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

1. உலகத்தின் மீதான அதீத ஆசையும் மரணத்தின் மீதான இனம் புரியாத வெறுப்பும்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
மிக விரைவில் ஒரு காலம் வரும், உண்பவன் தனது சகாவை பந்திக்கு அழைப்பதைப் போல உங்களின் மீது தீய சக்திகளின் ஆதிக்கமிருக்கும். (நீங்கள், ஈமானின் பலம் குன்றியிருப்பீர்கள்). 

ஆப்போது நாயகமே! நாமன்று எண்ணிக்கை குறைந்து இருப்பதனால் அவ்வாறு நிகழுமோ? என்று ஒரு நபித் தோழர் கேட்டார் :

அதற்கு நபி (ஸல்) அவர்கள்;:

நீங்கள் அப்போது மிகுதியாக இருப்பீர்கள். எனினும் (ஈமான் விஷயத்தில்) நீங்கள் நுரையைப் போன்றும்,  நீர்க்குமிழிகளைப் போன்றும் காணப் படுவீர்கள். இதனால் உங்கள் பகைவர்களின் மனதிலிருந்து உங்களைப் பற்றிய அச்சத்தை இறைவன் போக்கி விடுவான். மேலும் உங்களுடைய மனங்களில் வஹ்னை ஏற்படுத்தி விடுவான்! எனறு பதிலளித்தார்கள்

அப்போது வஹ்ன்,  என்றால் என்ன? என்று வினவப்பட்டது.

அதற்கு வஹ்ன் என்றால் உலக ஆசையும், இறப்பை வெறுத்தலும் ஆகும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பாளர் : சௌபான் (ரலி) நூல் : அபூதாவூது)

நமது ஈமான் வலுவிழக்குகின்ற போதே தீய சக்திகள் நம்மீது அராஜகத்தினையும் அடக்குமுறைகளையும் பிரயோகிக்கும் என்பது மேற்படி நபிவழிச் செய்தி நமக்குக் கற்றுத்தருகின்ற பாடமாகும்.

2. பொருளாசையும் பதவி மோகமும்

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:

ஒருவனது பொருளாசையும் பதவி மோகமும்ää இரண்டு பசி கொண்ட ஓநாகளிpடம் அகப்பட்ட ஆட்டிற்கு நேரக் கூடிய பாதிப்பை விட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். (திர்மிதி)

3. தலைமைத்துவ ஆசை

மனிதர்கள் அமர்ந்திருக்கக் கூடிய சபையில் தலைவராக உட்கார விரும்புவதும், அங்கு நடக்கும் ஆலோசனைகளில் தன்னுடைய கருத்தை மட்டுமே அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதும், இன்னும் அதிகாரம் வகிக்க விரும்புவதும், இத்தகைய சபைகளைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றேன், இத்தகைய தலைமையைக் கொண்ட சபையானது ஆடுகளை அறுக்கும் பலிபீடங்கள் போன்றது. (புகாரி)

4. வரம்பு மீறுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமை நாளின் பொழுது சிலர் துஹாமா என்னும் மலையைப் போன்று மிக அதிகமான நன்மைகளுடன் வருவார்கள், ஆனால் அல்லாஹ் அதனை தூசி போல ஆக்கி காற்றில் பறக்க விட்டு விடுவான் என்பதைக் கேட்டுக் கொண்டிருந்த தவ்பான் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே! இத்தைகயவர்கள் பற்றி எங்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள்,  அதன் மூலம் நாங்களும் அத்தகைய மனிதர்களாக ஆகி விடாமல் தவிர்ந்து கொள்ள இயலுமல்லவா? என்று கேட்டார்கள், 

அதற்கு, அவர்கள் உங்களது சகோதரர்களாகவே இருப்பார்கள்,  உங்களைப் போலவே இருப்பார்கள்,  நீங்கள் தொழுவது போல அவர்களும் இரவில் நின்று தொழுவார்கள், ஆனால் இறைவன் விதித்திருக்கும் வரம்புகளை மீறும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால்,  அந்த சந்தர்ப்பங்களை அவர்கள் மீறுவதற்குத் தயங்கவும் மாட்டார்கள்.  (இப்னு மாஜா)


இவ்வாறே போட்டி, பொறாமை, கருமித்தனம், முகஸ்த்ததி, தற்பெருமை, வீண்வாதம் போன்ற இன்னும் பல  காரணிகள் எமது ஈமானை பலமிழக்கச் செய்து விடக் கூடியது என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தள்ளார்கள். விரிவஞ்சி அவைகள் தவிர்க்கப்படுகின்றன.

எனவே தற்கால நம் சமூகத்தில் இந்த தீமைகள் அதிகரித்தே காணப்படுவது மாத்திரமின்றி அவைகள் சர்வசாராதன விடயங்களாகவும் ஆகிவிட்டிருப்பதனைப் பாhக்கின்றோம்.

இந்த நன்மை தீமைகளைப் பிரித்தறிந்து கொள்ள முடியாமைக்கான காரணம் மனித உள்ளங்கள் பாவங்களினால் இருண்டு விட்டதனால் ஈமன் வலுவிழந்து விட்டது ஆதலால் வலுவற்ற அந்த இறை விசுவாசிகளால் தாங்கள் செய்து கொண்டிருப்பது தீமை என்பதனைப் புரிந்து கொள்ள முடியாது உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

புற்பாய் போன்று உள்ளங்களில் தீமை கீற்று கீற்றாக வெளியாகும். எந்தவொரு உள்ளம் அதனை உள்வாங்க்கிக் கொள்கின்றதோ அதில் ஒரு கரும் புள்ளி விழுந்து விடுகின்றது. அவ்வாறே எந்தவொரு உள்ளம் அதனை புறக்கனித்து விடுகின்றதோ அதில் ஒரு வெண்புள்ளி விழுந்து விடுகின்றது. ஈற்றில் அது இரண்டு வகையான உள்ளங்களாக ஆகிவிடுகின்றன. ஓன்று தெளிவான வெண்மையாகும் அதில் வானம் பூமி நிலைகொண்டிருக்கும் காலம் எல்லாம் எந்தவொரு தீமையும் பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. மற்றயது மனோ இச்சையை வழிப்படுவதைத் தவிர நன்மையை அறிந்து கொள்ளவோ தீமையை தவிர்த்துக் கொள்ளவோ முடியாதவாறு கடுமையான கருமையாக ஆகிவிடுகினறது.

அல்லாஹ் கூறுகின்றான் :

இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும் சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும் திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும் அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை. (அல்-குர்ஆன் :2: 74)


இன்ஷா அல்லாஹ் தொடரும்…

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்

அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்


சனி, 26 ஏப்ரல், 2014

பொது பல சேனா தொடர்பான தேசிய ஷூரா சபையின் ஊடக அறிக்கை

பொது பல சேனா தொடர்பான தேசிய ஷூரா சபையின் ஊடக அறிக்கை


2014.04.24
தேசிய ஷூறா சபையின் ஊடக அறிக்கை:
NSC Banner
பொது பல சேனாவுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய ஷூறா சபை அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் வேண்டுகோள்
கடந்த ஒன்றரை வருட காலமாக பொது பல சேனா என்ற அமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் தீவிரவாத செயற்பாடுகள், நாட்டிற்கும் பரந்தளவில் மதிக்கப்படும் பௌத்த கோட்பாடுகளுக்கும் மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அழுத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
இவர்களது இவ்வாறான நடவடிக்கைகள், சமூகங்களைக் கூறுபடுத்தி அதன் மூலம் மக்களிடையே பாரிய இன முரண்பாடுகளையும் தோற்றுவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. சர்வதேச அரங்கில் அரசாங்கத்திற்குள்ள வெளிநாடுகளின் ஆதரவை, மென்மேலும் குறைக்க விரும்பும் சில வெளிநாடுகள் சார்பாக பொது பல சேனா இயங்குகின்றதா என்ற சந்தேகமும் பரவலாகக் நிலவுகிறது. இது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
இலங்கைக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைந்து செயற்படும் விடயம் குறித்து, இந் நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பில் அடிக்கடி அறிக்கை வெளியிடும் நாடுகளினது தூதரகங்கள் மௌனம் சாதிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இலங்கையை ஒன்றிணைந்த சுபீட்சம் மிக்க நாடாகக் காண்பதில் ஆர்வமிக்க அனைவரும், இந்த அவல நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்வர வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தேசிய ஷூறா சபை முன்னர் கையளித்த மகஜர் ஒன்றில், மத சுதந்திரத்தையும் சிறுபான்மையினரது உரிமையையும் உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலையிட வேண்டும் என வேண்டி இருந்தது.
2013 நவம்பர் 06 ஆம் திகதியன்று 196000 பொதுமக்களது கையொப்பங்கள் அடங்கிய ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை தேசிய ஷூறா சபையினர் கையளித்திருந்தனர். சிறுபான்மை மதத்தினரதும் அவர்களது மத ஸ்தலங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான அனைத்து எதிர்ப்புப் பிரச்சாரங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இம் மகஜரில் வேண்டப்பட்டிருந்தது.
எனினும், நெருக்கடிக்குள்ளாகியுள்ள முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசும் பௌத்த மத குருக்களை, இழிவான வார்த்தைகளால் அச்சுறுத்தும் பொது பல சேனாவின் நடவடிக்கைகள், தண்டனையிலிருந்து அவர்கள் சூசகமாக தப்பிய வகையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒன்றரை வருட காலத்தில் 300 இற்கும் அதிகமான மத விரோத மற்றும் எதிர்ப்புடன் தொடர்புபட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் அதிகமானவை பொலிஸாரின் முன்னிலையிலேயே இடம்பெற்றுள்ளன.
பொது பல சேனாவின் எதிர்ப்புப் பிரச்சாரம், புனித அல்குர்ஆனை இழிவுபடுத்தும் நிலையை இன்று அடைந்துள்ளது. இது உலகளாவிய ரீதியில், நாட்டிற்கெதிரான எதிர்மறையான அவப்பெயரை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.
உதாரணமாக, 2013 மார்ச் 17 ஆம் திகதி பொது பல சேனாவின் பேச்சாளரான மாவத்தகம பேமானந்த தேரர், கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் “முஸ்லிம் அல்லாதோருக்கு உணவு வழங்கும்போது முஸ்லிம்கள் மூன்று தடவை துப்பிவிட்டே வழங்குகின்றனர்” என்று கூறி அல்குர்ஆன் தொடர்பான அப்பட்டமான அவதூறு ஒன்றைக் கூறியிருந்தார்.
புனித அல்குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் அவ்வாறான ஒரு வசனமோ, கூற்றோ கிடையாது. முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களை தவறாக வழிநடத்தும் வகையில், வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்ட பொய்யே இதுவாகும்.
2014 ஏப்ரல் 12 இல் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், புனித அல்குர்ஆனில் “தகிய்யா” கோட்பாடு இருப்பதாக தவறான முறையில் கதையளந்துள்ளார். இக்கோட்பாடு பிற மதத்தவர்களை முஸ்லிம்கள் வஞ்சிப்பதற்கு வழிவகுப்பதாகவும், முஸ்லிம் அல்லாதோரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களையும் செல்வத்தையும் சுவீகரிப்பதற்கு அனுமதிப்பதாகவும் இட்டுக்கட்டிக் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும்.
ஆனால், அல்குர்ஆன் இதற்கு நேர் எதிராக பேசுகிறது. புனித அல்குர்ஆனின் ஸூறா அல் பகறா (2:188) மிகத் தெளிவாக பின்வருமாறு குறிப்பிடுகிறது:
“உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்கள் வாதம் பொய்யானது என நீங்கள் அறிந்திருந்தும், இதர மனிதர்களது பொருள்களை எதனையும் பாவமான வழியில் லஞ்சம் கொடுத்து அபகரித்துக் கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்”
இலங்கையின் பெரும்பான்மையினர் பின்பற்றும் பெளத்த மதம் கூட ஒருபோதும் பிறர் மீது அபாண்டம் சுமத்துவதை, கடினப் போக்கை, மத நிந்தனையை அனுமதிக்கவில்லை. இஸ்லாத்தை பிறருக்கு அறிமுகப்படுத்தும் போதும் பிறசமயத்தவரது மனதைப் புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளைப் முஸ்லிம்கள் பிரயோகிக்க்க் கூடாது என இஸ்லாம் கடுமையாக வலியுறுத்துகிறது. “அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவர்களை (தெய்வங்களை) நீங்கள் ஏசாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால் அவர்கள் அறிவின்றி அல்லாஹ்வை வரம்பு மீறி ஏசுவார்கள்” (அல்-குர்ஆன் 6:108) என அல்-குர்ஆன் வலியுறுத்துகிறது.
இது இப்படியிருக்க பொது பல சேனா தலைமையிலான கும்பல், ஏப்ரல் 09 ஆம் திகதி மதிப்பிற்குரிய வடரக விஜித தேரர் நடத்திய ஊடக சந்திப்பை கொலை அச்சுறுத்தல் மூலம் பலவந்தமாக குழப்பியிருக்கிறது.இதற்கு எதிராக, உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ஷூறா சபை, அரசாங்கத்தையும் அதன் முதன்மையான சட்ட அமுலாக்கல் அலகான பொலிஸாரையும் வேண்டிக் கொள்கிறது.
ஏப்ரல் 12 ஆம் திகதி கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்திற்கு வெளியே, இஸ்லாத்தையும் புனித அல்குர்ஆனையும் கொச்சைப்படுத்தி, முஸ்லிம்களின் மத உணர்வை அவமதித்து புண்படுத்தும் வகையில் இவர்கள் நடந்து கொண்டனர். இவ்விரு நிகழ்வுகளும் பொலிஸார், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் முன்னிலையிலேயே இடம்பெற்றது.
இதனையடுத்து ஏப்ரல் 23 ஆம் திகதி பொது பல சேனா தலைமையிலான ஒரு கும்பல், எந்த சட்ட அதிகாரமும் இல்லாமல் அலரி மாளிகைக்கு அண்மையில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகம் ஒன்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. கொலை அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தி, கொம்பனித்தெரு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த வட்டரக விஜித தேரரை, துன்புறுத்தும் சாத்தியங்களுடனேயே இத்தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்த வெறுக்கத்தக்க சட்டவிரோத செயல்கள் அனைத்தும், நாட்டின் அரசியல் அமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள இம்மதகுருவினதும் முஸ்லிம்களினதும் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலேயே அமைந்துள்ளன என தேசிய ஷூறா சபை கருதுகிறது.
கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொது பல சேனா கும்பல், விஜித தேரரின் ஊடகவியலாளர் மாநாட்டை பலவந்தமாக தடுத்து நிறுத்தியதன் மூலம், நாட்டின் குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையிலுள்ள பல விதிகளை மீறியுள்ளது.
கொலை அச்சுறுத்தல், சட்ட விரோத ஒன்று கூடல், குற்றவியல் அத்துமீறல், முறைகேடான ஊடுருவல், பயமுறுத்தல், மிரட்டுதல் அல்லது கொள்ளை, பிழையான கட்டுப்படுத்தல், சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் போன்ற பல சட்ட விதிகளை இக்கும்பல் மீறியுள்ளது.
கொம்பனித் தெரு பொலிஸில் ஞானசார தேரர் கொடுத்த வாக்குமூலத்தின் பின்னர், புனித அல்குர்ஆனையும் இஸ்லாம் மதத்தையும் அவர் கொச்சைப் படுத்திப் பேசியுள்ளார். இது குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள சமயம் சார்ந்த விடயப் பரப்பை மீறி, அவர் இழைத்த தெளிவான குற்றச் செயலாகும்.
மேலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் (தற்காலிக விதிகள்) 2(1)(h) பிரிவினை மீறும் செயலாகவும் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. வழக்கு முடிவடையும் வரை குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே இச்சட்டப் பிரிவு குறிப்பிடுகிறது.
கடுமையான சட்ட விதிகள் உள்ள நிலையில் கூட, குறித்த விடயம் தொடர்பான உண்மைத் தகவல்களை வெளிக் கொண்டு வராமலும், சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமலும் பொலிஸார் நடந்து கொண்டுள்ளனர். அத்துடன், குற்றவாளிகளை பொலிஸ் நிலையத்தில் வைத்தே பொலிஸார் அதிர்ச்சியூட்டும் வகையில் விடுவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் என்ன நிகழ்ந்தது, நிகழவில்லை என்பது குறித்த காட்சிகளை முழு நாடுமே அறிந்திருந்தது. சட்ட விதிகளை மீறியது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் ஊடகங்கள் பலவற்றில் பதிவாகிய வீடியோ காட்சிகளாக, எப்போதும் பெறத் தக்க வகையில் தயார் நிலையில் உள்ளன.
இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களது மனங்களை திசைதிருப்பி விடுவதற்கு வசதியாக, சேறு பூசும் நடவடிக்கைகளும் சேதங்களும் ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் விரிந்த நன்மை கருதி, முஸ்லிம்களுக்கு எதிரான – முஸ்லிம் சமூகத்தினது சமய, கலாச்சார, பொருளாதார, அரசியல் வாழ்வின் ஆணிவேரைத் தாக்கும் இந்த அழிவுப் பிரச்சாரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நாடு தாங்க முடியாத அபாயகரமான விளைவுகளாகவே இவை அமைந்துள்ளன.
இஸ்மாயில் ஏ அஸீஸ்
பொதுச் செயலாளர்​

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 02

بسم الله الرحمن الرحيم

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 02

1. علم எனும் மார்க்கக் கல்வியில் காணப் படும் பலவீனம்

அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ் உங்களில் ஈமான் கொண்டவர்களை உயர்வடையச் செய்வான். இன்னும் மார்க்கக்கல்வி ஞானம் கொடுக்கப்பட்டவர்களுக்கு பல பதவிகள் உண்டு (அல்-குர்ஆன்: 58: 11)

இன்றைய இந்த முஸ்லிம்களுக்கு மத்தியில் காணப்படும் சகோதரத்துவ வீழ்ச்சிக்கான பிரதான முதற்காரணம் علم எனும் மார்க்கக் கல்வியில் ஏற்பட்டுள்ள பலவீனமேயாகும் என்று பார்த்தோம். இதன் பொருள் மார்க்க அறிஞர்கள் இல்லை என்றோ அல்லது மார்க்கக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை என்பதோ அல்ல. இன்று எமது நாட்டை எடுத்துக் கொண்டால் முன் எப்போதும் இல்லாத அளவு மார்க்க அறிஞர்களும் மார்க்கம் கற்பிக்கப்படுகின்ற கல்வியகங்களும் அதிகரித்தே காணப்படுகின்றன. 

என்றாலும்  இன்று மார்க்கக் கல்வி பயிலுகின்ற மாணவர்களும் சரி கற்கவைக்கின்ற பெற்றார்களும் சரி அல்லது கற்பிக்கின்ற ஆசிரியர்களும் சரி அனைவரிடமும் மார்க்கக் கல்வியின் மூலம் இஸ்லாம் எதிர்பார்க்கின்ற முழு மனித சமுதாயத்துக்குமான மறுமையின் வெற்றிக்கான வழி காட்டுதல் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மாறாக உலகாதாய நோக்கங்களே மேலோங்கி காணப்படுகின்றது. 

கல்வி கற்கின்ற மாணவர்களிடம் உங்களின் இலட்ச்சியம் என்னவென்று கேட்டால் பாலர் வகுப்பிலிருந்தே அவர்கள் ஒவ்வொருவரும் கூறும் பதில் நான் ஒரு டாக்டராக அல்லது பொறியியலாளராக அல்லது வழக்கறிஞராக அல்லது ஆசிரியராக வர வேண்டும் என்றுதான் கூறுவார்களே தவிர நான் ஒரு அறிஞனாக வரவேண்டும் என்று யாரும் கூறுவதாக இல்லை.

அவர்கள் யாரிடமும் இஸ்லாம் வலியுறுத்துகின்ற إخلاص  எனும் உளத்தூய்மை காணப்படுவதில்லை. உதாரணமாக ஏகத்துவம் அல்லது மார்க்கச் சட்டக் கலை அல்லது அல்-குர்ஆன் விரிவுரை அல்லது நபி மொழிகளைக் கற்கக்கூடிய இரண்டு நபர்களில் ஒருவன் சுவர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானவனாகவும்ää மற்றவன் சுவர்க்கத்திற்கு மிகவும் தூரமானவனாகவும் காணப்படலாம். இருவரும் ஒரே நூலையே படிக்கின்றார்கள்ää ஒரே ஆசிரியரிடமே கற்கின்றார்கள் அவர்களுள் ஒருவன் தான் ஒரு காழியாக (உயர் அதிகாரி) வேண்டும் ஒரு காழியிற்கு உயர்ந்த ஊதியமும் உயர் அந்தஸ்தும் கிடைக்கின்றன எனும் நோக்கத்தில் மார்க்கச்சட்டக் கலையைக் கற்கின்றான். மற்றவன் தான் கற்று ஒரு மார்க்க அறிஞனாகி முகம்மது நபி (ஸல்) அவர்களுடைய உம்மத்தினர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் உளத்தூய்மையுடன் மார்க்கச்சட்டக் கலையைக் கற்கின்றான் ஆகவே அவர்கள் இருவருக்கும் இடையே அவர்களின் எண்ணத்தின் பிரகாரம் மிகப் பெரும் வேறுபாடு காணப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : செயல்கள் அனைத்தும் (நிய்யத்) எண்ணங்களைப் பொறுத்ததே. எனவே நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியது உண்டு. (நூல்: புகாரி-முஸ்லிம். அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப்(ரலி))

இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : புத்திசாலி என்பவன் தனது ஆண்மாவைக் கட்டுப்படுத்தி தனது மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கைக்காகச் செயல்படுபவனாவான். (நூல் : முஸதத்ரக். அறிவிப்பவர் : சத்தாத் பின் அவுஸ்)

அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட அளப்பெரிய அந்தஸ்த்துக்களையும் வெகுமதிகளையும் நோக்காக கொள்வதற்குப் பதிலாக இந்த கல்வியின் மூலம் தான் எவ்வாறு மக்களுக்கு மத்தியில் மதிப்பையும் மரியாதையையும் உயர் பதவிகளையும் பெற்றுக் கொள்வது அதன் மூலம் எவ்வாறு பொருளீட்டுவது எவ்வாறு இந்த உலக இலாபங்களை அடைந்து கொள்வது என்பது பற்றியே அனைவரது சிந்தனைகளும் வழிகாட்டல்களும் அமையப் பெற்றிருப்பதனைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. மறுமை என்பது இரண்டாம் தரத்தில் வைத்தே பார்க்கப்படுகின்றது. இந்த நிலை கல்வியில் ஏற்பட்டுள்ள பலவீனம் இல்லையா?

இதற்கான மிக முக்கிய காரணம் இன்றய உலகின் யூத கிருஸ்த்துவர்களால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்தக்  கல்வி கொள்கை எமது ஷரீஆ கல்வியகங்களிலும் அதன் செல்வாக்கினை செலுத்தியுள்ளது எனலாம்.

ஆதலால்தான் தனது பெயருக்குப் பின்னால் பல பட்டங்கள் இருக்க வேண்டும் அதன் மூலம் மக்களிடம் தான் பல பட்டங்களுக்குச் சொந்தக்காரன் என்று புகழப்பட வேண்டும் என்ற சிந்தனைப் போக்கு காணப்படுகின்றது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை தனது குடும்பம் தொழில் படிப்பு என்பதுடன் சுருங்கி விடுகின்றது. சுமூகம் தஃவா என்பதெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடைத்தால்தான் என்ற நிலைத் தோன்றியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுடைய திருப்தியை நோக்காக் கொண்டு கற்க வேண்டியக் கல்வியை யார் இந்த உலகத் தேவைகளை அடைந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்திற்கே அன்றி கற்க்கவில்லையோ அவன் நாளை மறுமையில் சுவர்க்கத்தின் வாடையைக் கூட அடைந்து கொள்ள மாட்டான். (நூல்: இபுனு ஹிப்பான். அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரழி)

அடுத்ததாக கருத்து வேறுபாடு மற்றும் கருத்து முறண்பாடு ஆகிய இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டினை புரிந்து கொள்ள முடியாத அல்லது அதனை ஏற்று அங்கீகரிக்க முடியாத நிலைத் தோன்றிக் காணப்படுகின்றது அதாவது மார்க்கத்தின்  فقه  எனும் சட்ட நுனுக்கங்கள் விடயத்தில் கருத்து வேறுபாடு என்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல அது வாணவர்களுக்கு மத்தியில் நபிமார்களுக்கு மத்தியில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் இமாம்களுக்கு மத்தியில் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த வந்து கொண்டிருக்கின்ற அத்தனை ஆய்வாளர்கள் அறிஞர்கள் அனைவருக்கு மத்தியிலும் இருந்து கொண்டேதான் வருகின்றது. என்றாலும் அந்த கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியில் கருத்து முறன்பாடாக உருப்பெறவில்லை. மாறாக அது அவர்களுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவே வழிகாட்டி இருக்கின்றது என்பதனை இஸ்லாமிய வரலாற்றை அறிந்த அனைவரும் ஏற்றுக் கொள்வர். எனவே கருத்து வேறுபாடு என்பது வேறு. கருத்து முறன்பாடென்பது வேறு என்பதனை நாம் முதலில் புரிந்து ஏற்றுக் கொள்ளுதல் அவசியமாகும்.

கருத்து வேறுபாடு என்பது மாற்றுக் கருத்தையுடையவர்களைப் பற்றிய நல்லெண்ணத்தையும் மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்கச் செய்யும்;. கருத்து முறண்பாடென்பது தான் கொண்டிருக்கும் கருத்தினை பிறர் மீது பலவந்தமாகத் தினிக்கத் தூண்டும். தனது கருத்திற்க்கு மாற்றமான கருத்தில் இருப்பவர்களைப் பற்றிய தவறான தரக்குறைவான சிந்தனைகளைத் தூண்டும். அவர்கள் மீது பொறாமை கொள்ளச் செய்யும். இந்த வித்தியாசத்தினைப் புரிந்து கொண்டால் எமக்கு மத்தியில் காணப்படும் மார்க்கக் கல்வியில் ஏற்பட்டுள்ள பலவீனம் களையப்பட்டு கருத்து முறண்பாடுகள் அத்தனையும் விடைபெற்றுச் சென்று விடும் என்பது உறுதி.

இந்த இடத்தில் இன்னுமொரு முக்கியமான விடயத்தினை நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டு. அதாவது சில கருத்து வேறுபாடுகளில் ஒன்றுக்கொன்று முறன்பட்ட இரண்டு கருத்துக்கள் காணப்படு அதில் ஒரு கருத்துதான் சரியான கருத்தாக இருக்க முடியும் அதனை நாம் அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் மூலம் இலகுவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் உதாரணமாக நூறு கொலைகளைச் செய்த ஒரு பாவி பாவ மன்னிப்புத் தேடி சென்ற போது பாதி வழியில் இறந்து விட்ட நிலையில் வாணவர்களுக்கு மத்தியில் அவன் சுவர்க்கவாதியா நரகவாதியா எனும் விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அது உரிய முறையில் தீர்க்கப்ட்ட போது இரு தரப்பினர்களும் அதனை உளப் பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.

அவ்வாறே இன்னும் சில கருத்து வேறுபாடுகள் ஒன்றை விட்டு ஒன்றை சரிகான முடியாததாகக் காணப்படும். அப்படியான கருத்துக்கள் அல்-குர்ஆன் அல்-ஹதீஸிற்கு முறன் இல்லாத போது அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையே உதாரணமாக நபி (ஸல) அவர்கள் பனீ குறைளாவிலே அன்றி நீங்கள் அஸர் தொழக்கூடாது என்று கூறி அனுப்பிய நபித்தோழர்கள் இடையில் அஸர் தொழுகையின் நேரம் வந்த போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு கருத்து வேறுபாடு. அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அந்த இரண்டு விதமான கருத்துக்களில் எந்தவொரு கருத்தையும் நபி (ஸல) அவர்கள் தவறாகக் காணவில்லை.மாறாக இரு தரப்பினர்களது இரு கருத்துக்களுக்கும் அங்கிகாரம் கொடுத்தார்கள்.

இன்று எமக்கு மத்தியில் குறிப்பாக தமிழ் இஸ்லாமிய உலகில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகளாக தொழுகையில் தக்பீர் கட்டுதல் அத்தஹ்யாத்தில் விரல் அசைத்தல் தராவீஹ் தொழுகையின் ரகஅத்துக்களின் என்னிக்கை போன்ற இன்னோரன்ன விடயங்களில் கருத்து வேறுபாடுகளும் முறண்பாடுகளும் மோதல்களும் நிலவி வருவதைப் பார்கின்றோம் இவை அனைத்தும் எமது மார்க்கக் கல்வியில் ஏற்பட்டுள்ள பலவீனத்தின் வெளிப்பாடுகளே.

அல்லாஹ் கூறுகின்றான் : (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும்-(தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள்- தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும்- தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே- அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். (அல்-குர்ஆன்: 2: 113)

இன்ஷா அல்லாஹ் தொடரும்…
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்

அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்


வெள்ளி, 25 ஏப்ரல், 2014

இலங்கை முஸ்லிம்களின் சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்கள்... தீர்வு என்ன?

இலங்கை முஸ்லிம்களின் சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்கள்... தீர்வு என்ன?

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும், தீர்வும். - தொடர் - 01

بسم الله الرحمن الرحيم

அன்புடையீர்!

து சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும்,  தீர்வும்.  - தொடர் - 01

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ்

முஸ்லிம்கள் மத்தியில் இன்று நாளாந்தப் பேச்சுப் பொருளாக மாறியுள்ள தேசிய தலைமைத்தவம் ஒற்றுமை சகோதரத்தவம் இதுதான் இன்று ஒவ்வொரு இஸ்லாமியனுடையவும் அவாவாகவும் தேவையாகவும் கருதப் படுகின்றது. இது ஆண்டாண்டுகாலமாக அவ்வப்போது முஸ்லிம்களக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான சக்திகள் களம் இறங்கும் போது பேசப் பட்டு பிறகு மறந்தாலும் இன்றைய கால கட்டத்தில் அதன் அவசரத் தேவை அனைத்துத் தரப்பினர்களாலும் மிகவும் ஆழமாகவே உணரப்பட்டுள்ளது.

என்றாலும் இன்றளவும் அதனை அடையப் பெற முடியாமைக்கான காரணம் என்ன என்பதனை ஆராய்ந்து அறிந்து அதற்கான ஆக்கபூர்வமானதும் அறிவூபூர்வமானதுமான வழிதுமுறைகள்  என்ன என்பதனை யாரும் முன் வைத்ததாகத் தெரியவில்லை.

1986-87 காலப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழுகின்ற கிழக்கு மாகானத்தில் விடுதலைப் புலிகளின் அராஜகங்களால் உந்தப்பட்ட அம்மாகான மக்கள் மறைந்த தலைவர் மர்ஹ{ம் அஷ்ரப் அவர்களின் தலைமையின் கீழ் அரசியல் ரீதியாக அணி திரண்டாhகள். அதன் பின் அந்தத் தலைமைத்துவம் தேசிய அளவில் அரசியல் ரீதியாக இரு பெரும் பிரிவுகளாக பிரிந்திருந்த நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒன்று படுத்தும் முயற்ச்சியில் கவனம் செலுத்தியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் கனிசமான மக்களின் அங்கிகாரத்தினைப் பெற்றது.

அப்படி அரசியலின் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகளாக பிரிந்திருந்த நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒன்று படுத்த வேண்டும் எனும் இலச்சியத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் தலைமைத்துவம் அவரின் மறைவுக்குப் பின் ஏற்கனவே இரண்டு பிரிவாக இருந்த நம் சமூகத்தை இன்று பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பிரித்துள்ளது. ஆளுக்கு ஆள் கட்ச்சி என்றும் தலைவர் என்றும் வெளியாகத் தலைப்ட்டு விட்டார்கள்.

இந்நிலையில் மீண்டும் ஒரு முறை அரசியல் ரீதியில் ஒன்று படுத்துவதென்பது இதன் பிறகு சாத்தியமற்ற ஒன்றாகும் என்றே கருத வேண்டியுள்ளது.

அப்படியானால் அரசியலை முற்றாகத் தவிர்த்து ஆண்மீகத் தலைமையின் கீழ் ஒன்றுபடுத்தலாமா? என்றால் அதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் மத்ஹபுகளின் பெயரால் பிரிந்திருந்த சமூகத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒன்று படுத்தவென்று உதயமான இயக்கங்கள் ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி இன்று எத்தனை எத்தனையோ எண்ணில் அடங்கா குழுக்களாகப் பிரிந்தே காணப்படுகின்றது.  ஏற்கனவே நான்கு மத்ஹப்புகள் இருந்தாலும் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை சகோதரத்துவம் மேலோங்கிக் காணப்பட்டன. இன்றோ நம் சமூகத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாகவுள்ளது  இயக்கங்களின் பெயரால் ஏற்படும் முறுகல் நிலையும் குழுச்சண்டைகளும் நாளாந்தம் ஊடகங்களில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் அவர்களுக்குள்ளேயே புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் சகிப்புத் தன்மையும் இல்லாத அவர்களால் எவ்வாறு முழு சமூகத்தையும் வழி நடாத்த முடியும் எனும் நியாயமான கேள்விகள் எழுகின்றன.

இப்படிப்பட்ட நம் தலைவர்களினதும்; சமயக் குழுக்களினதும் தூரப் பார்வையற்ற இத்தகைய குறுகிய சிந்தனைகளின் வெளிப்பாடே இன்றைய நம் சமூகத்தின் தலைவிதியாக பரினாமம் கொண்டுள்ளது எனலாம்.

இவற்றுக்கான காரணங்கள் :

இஸ்லாம் ஒவ்வொரு தனிமனிதன் குழுக்கள் சமூகம் போன்ற அத்தனையிலும் தலையிட்டு தனது செல்வாக்கைச் செலுத்தும். ஆதலால் அது ஒவ்வொரு தனிமனிதன் குழுக்கள் சமூகம் போன்ற அத்தனை பேரிடத்திலும் அவர்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் முன்னெடுப்புக்களுக்கும் அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் ஆகியவற்றின் வழிகாட்டலினையே பின்பற்ற வேண்டும் என்று வலுவாக கட்டளை இட்டுள்ளது. அது எந்தவொரு சந்தாப்பத்திலும் பிரிவினையையோ முறண்பாட்டையோ அனுமதித்ததே கிடையாது.

அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் முறண்பட்டுக் கொள்ளாதீர்கள்; (அல்-குர்ஆன்: 8: 46)

மீண்டும் வல்ல அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருட் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. (அல்-குர்ஆன்: 3: 102: 103)

அப்படியாயின் இன்றய இந்த இயக்கவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் முறண்பாட்டுக்கும் மிகமுக்கிய முதற்காரணம்; என்னதான் நாம் அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் கற்றிருந்த போதிலும் அந்தக் கல்வியில் எங்கோ ஓரிடத்தில் பலவீனம் ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் உண்மை. 

அப்படி இல்லை என்றால் நமக்கு மத்தியில் காணப்படும் இஸ்லாமிய அகீதா எனும் அடிப்படை விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தாத மார்க்கச் சட்ட விவகாரங்களில் ஏற்பட்டுள்ள இந்த சிறிய சிறிய கருத்து வேறுபாடுகளெல்லாம் கருத்து முறன்பாடாக உருப்பெற்று கருத்து மோதலாக மாறி இயக்க வெறி பிரசவித்திருக்க நியாயம் கிடையாது. 

நமது மார்க்கக் கல்வியில் ஏற்பட்ட இந்த பலவீனம் முறையே

علم எனும் மார்க்கக் கல்வி மற்றும் அதன் மூலம் அதிகரிக்கப்பட வேண்டியதான

إيمان எனும் இறை விசுவாசம். அதன் ஊடாக வலுப் பெற வேட்டியதான

تقوى எனும் இறையச்சம். அதன் அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டிய

أخوة  எனும்  சகோதரத்துவம் ஆகியவற்றில் இன்று பாரியதோர் வீழ்ச்pயை ஏற்படுத்தியுள்ளதை உணரக் கூடியதாகவுள்ளது.

இவை ஒவ்வொன்றும் தனித்தனித் தலைப்புகளாக அடுத்தடுத்து வரவுள்ள பதிவுகளில் ஆராயப்படவுள்ளது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்


வியாழன், 24 ஏப்ரல், 2014

Jaffna Muslim: கம்பளை முஸ்லிம்களை இலக்குவைத்த பொதுபல சேனா - பள்ளி...

Jaffna Muslim: கம்பளை முஸ்லிம்களை இலக்குவைத்த பொதுபல சேனா - பள்ளி...: (அஸ்-ஸாதிக்) கம்பளை முஸ்லிம் செறிவாக வசிக்கும் பெபிளை பகுதிக்கு இன்று; 23.04.2014 பொதுபல சேனா பௌத்த தேரர்களை உள்ளடக்கிய குழுவொன்று ...

Jaffna Muslim: சிங்களவர்களுடைய கடைகளில் மட்டும் பொருட்களை கொள்வனவ...

Jaffna Muslim: சிங்களவர்களுடைய கடைகளில் மட்டும் பொருட்களை கொள்வனவ...: (மொஹொமட் ஆஸிக்) கடந்த சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் எமது பிரதேசங்களில் இன வாதத்தை தூண்டும் சுவரொட்டிகள் கானபப்ட்டதாகவும் சிங்களவ...

புதன், 23 ஏப்ரல், 2014

சட்டம் யாருடைய கையில்... ?

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்...

சட்டம் யாருடைய கையில்... ?

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் 

மஹிந்த ராஜபக்கஷவின் ஆட்ச்சியின் இறுதி நேரம் நெருங்கி கொண்டிருக்கின்றது என்பது நலாளாந்தம் உறுதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த நயவஞ்சக ஆட்ச்சிக்கு முடிவுரை எழுதி முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு நாடு போய்க்கொண்டிருக்கின்றது. அவர் ஆட்ச்சிக்  கதிரையில் அமர்ந்தலிருந்து சிறுபான்மை இன மக்கள் மீது அளவுக்கதிகமான அநியாயங்களையும் அத்து மீறல்களையும்தான் செய்து கொண்டிருக்கின்றார் என்பதை முழு உலகமும் அறியும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தின் போது சர்வசேத யுத்த வரம்புகளை மீறி யுத்தம் எனும் போர்வையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொண்டு குவித்தார் எனும் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளார்.

என்னதான் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் அனைத்து சிறுபான்மை இனங்களையும் அடக்கி அடிமைப் படுத்துவதாகவே அவரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக இரண்டாம் நிலையில் உள்ள சிறுபான்மையாகிய முஸ்லிம்கள் மீதே தற்பொழுது அவரதும் அவரின் கொள்கையை ஒத்த அத்தனை அரசியல் கட்ச்சிகள் மற்றும் அமைப்புக்களுடைய கவனமும் வெகுவாக திரும்பியுள்ளது.

ஹலால் பிரச்சினை என்ற போர்வையில் உலமா சபையுடன் ஆரம்பித்து இன்று (23-04-2014) அமைச்சர் றிசாட் பதிய்யுத்தீன் அவர்களின் அலுவலக முற்றுகை வரை இஸலாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான எத்தனையோ அத்து மீறலகளையும் அடாவடித்தனங்களையும் மானமிளந்த பாதுகாப்பு படையினரின் பூரண பாதுகாப்புடன் பொது பளு சேனா எனும் பாசிஸ கும்பல் அரங்கேற்றி வருகின்றது.

இவ்வளவு நடந்தும் ஜனாதிபதியோ பாதுகாப்புச் செயலாளரோ இது வரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக ஜனாதிபதி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்: இந்த நாட்டில் பள்ளிகள் உடைக்கப்படுவதாக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். அப்படி எந்தவொரு பள்ளியும் உடைக்கப்படவோ தாக்கப்படவோ இல்லலை. அனுமதியின்றி பள்ளிவாயல்கள் கட்டமுடியாது என்று அல்-குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. எனவே அப்படி உடைக்கப்பட்டிருரூந்தால் அது அனுமதியின்றி கட்டப்பட்டவையாகும்.

அல்-குர்ஆனுக்கும் ஜனாதிபதியின் இந்தக் கூற்றுக்கம் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது ஒரு புறமிருக்க, அவரின் மேற்படி உரை எமக்கு ஒரு செய்தியைச் சொல்கின்றது, அதுதான் சிறுபான்மை குறிப்பாக முஸ்லிம்களை அடக்கியாள்வதற்காக அவரால் உருவாக்கப்பட்ட பாசிஸ கும்பலே பொது பளு சேனா என்பது. இல்லை எனின் ஒரு ஜனநாயக நாட்டில் நாட்டுச் சட்டத்திற்கு முறனாக ஒருவர் ஒரு செயலைச் செய்தால் அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்தான் கவனிக்க வேண்டும். கண்ட கண்ட நாய்கள் எல்லாம் அதற்கு குரைக்க முடியாது.

அவ்வாறிருக்கும் பொழுது பொதுபளு சேனாவுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது. அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எனும் கேள்விக்கு ஜனாதிபதி பதில் சொல்லியாக வேண்டும்.

அவ்வாறின்றேல்; அனுமதியில்லாத பள்ளிவாயல்களை உடைப்பதற்காகத்தானா பொதுபளு சேனாவை போசித்துப் பாதுகாத்து வளர்த்து வருகின்றீர்கள் எனும் நியாயமான கேள்வி எழுகின்றது. 
அத்துடன் இந்த நாட்டில் என்ன நடக்கின்றது. சட்டம் யாருடைய கையில் இருக்கின்றது. சட்டத்தை நடைமுறைப் படுத்துபவர்கள் யார்? என்பதெல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியவைகளாகும்.

அனுராதபுரத்தில் முஸ்லிம்களின் பூர்வீகத்தினைப் பறைசாட்டிக் கொண்டிருந்த மன்னறையுடன் கூடிய தைக்யா தகர்ப்பு முதல் இன்று வரை தாக்கப்பட்ட அத்தனை பள்ளிவாயல்கள் தைகாகள் கடைகள் போன்ற அத்தனையும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடனேயே நடந்தேறியுள்ளதானது அனைத்தும் அரச அங்கீகாரத்துடனும் வழிகாட்டலுடனும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை சந்தேகத்திற்கிடமின்றி படம் பிடித்துக் காட்டுகின்றது.

அவ்வாறின்றேல் சில அமைப்புக்கள் மக்களுக்கிடையே இனவாத்தினைத் தோற்றுவிக்க முயற்சிகள் செய்கின்றன என்று அடிக்கடி ஊடகங்களில் மக்களுக்கு முன்னால் கூறி தான் ஒரு நல்லவன் என்பதனை நிரூபிக்க முயற்ச்சிக்கும் ஜனாதிபதியவர்கள் இத்தனை அடாவடித்தனங்களையும் பகிரங்கமாகச் செய்து கொண்டிருக்கும் பளு சேனா பற்றி வசனமேனும் பேசாதிருப்பதன் மர்மம்தான் என்ன? 

எனவே ஒரு உண்மை இறை விசுவாசி ஒரு குளியில் இரண்டு முறைகள் விழ மாட்டான் எனும் நபி மொழியினை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன். 
நாம் எத்தனை முறை எத்தனை குளியில் விழுந்து எழும்பி இருக்கின்றோம்.? இன்னும் எமது ஈமான் வலுப்பெறவில்லையா? அல்லது ஈமானே இல்லையா? நிச்சயமாக ஒரு இறைவிசுவாசியுடைய அடி மனதிலேனும் ஒரு அனுவளவேனும் ஈமான் இருக்கத்தான் செய்யும். அப்படி அனுவளவேனும் ஈமான் இருக்கும் ஒரு விசுவாசி இனிமேலும் இப்படியான குளிகளில் விழுந்து விட மாட்டான் என்றே நம்புகின்றேன்.

ஆகவே இதன் பிறகாவது நாம் மீண்டும் மீண்டும் ஒரே குளியில் விழாதிருக்கும் வகையில் மிகவும் அவதானமாகவும் விழிப்பாகவும் இருந்து எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில்; எமது வாக்குகளை இந்தப் பிர்அவ்னிய ஆடச்சியிலிருந்து நம்மையும் நமது உயிரிலும் மேலாக நாம் மதிக்கின்ற நமது மாhக்கத்தையும் பாதுகாத்து இந்த கொடுங்கோலனை குப்புர வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இதுவே நாம் இவ்வேளையில் மேற்கொள்ளும் மிகப் பெரிய ஜிஹாதாகும். 

இப்படிக்கு


முனாப் நுபார்தீன் 

மின் அஞசல்: aslislamguide@yahoo.com

ஸ்கைப் : munabu2

வலைத் தளம்: srilanka islamic guidance centre

பொது பல சேனாவினால் ரிஷாட்டின் அலுவலகம் முற்றுகை

(வீடியோ இணைப்பு) பொது பல சேனா அமைப்பினரால் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அலுவலகம் முற்றுகையிடப்பட்ட சம்பவம்.

(வீடியோ இணைப்பு) பொது பல சேனா அமைப்பினரால் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அலுவலகம் முற்றுகையிடப்பட்ட சம்பவம்.

புலிகளில்லா தேசத்தில் எலிகளுக்கென்ன வேலை..?

புலிகளில்லா தேசத்தில் எலிகளுக்கென்ன வேலை..?

Jaffna Muslim: பொது பலசேனாவுக்கு எதிராக பதில் கொடுப்பதற்கு, முஸ்ல...

Jaffna Muslim: பொது பலசேனாவுக்கு எதிராக பதில் கொடுப்பதற்கு, முஸ்ல...: (நஜீப் பின் கபூர்) பொது பல சேனாவுக்கோ, ஞான சாரருக்கோ விளம்பரத்தைக் கொடுக்கின்ற செய்திகளை எழுதக்கூடாது பேசக்கூடாது என்ற உணர்வில் இருந...

Jaffna Muslim: பைத்தியகாரன் பத்தும் சொல்வான்...!

Jaffna Muslim: பைத்தியகாரன் பத்தும் சொல்வான்...!: (றிசானா பசீர்) படித்த மக்களுடன் பேசும் போது அறிவாளி போன்று பேச வேண்டும். பாமர மக்களுடன் பேசும் போது பாமர மகனின் பாணியில் பேச வ...

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

நம் தலைமைகள் எப்போது முன் வரப் போகின்றதோ?


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்...

நம் தலைமைகள் எப்போது முன் வரப் போகின்றதோ?

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் 

அவ்வப்போது பேரினவாத சக்திகளால் திட்டமிட்ட அடிப்படையில் ஆங்காங்கே இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதும் அவ்வேளைகளில் நமது சமூகம் கிளர்ந்தெழுந்து ஆளுக்காள் அறிக்கைகளை விடுவதும் போராட்டங்கள் நடாத்துவதும் அதன் பிறகு ஓரிரு வாரங்களிலேயே அத்தனையும் மறந்து போய் இனி எந்தப்பிரச்சினையும் இல்லை அவர்கள் அடங்கி விட்டார்கள் என்றென்னி நிம்மதி பெரு மூச்சு விடுவதும்தான் நமது 66 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வெட்க்ககேடான வரலாறாக இருந்து வருகின்றது.

இவ்வாறான முஸ்லிம் விரோத சக்திகளின் பின்னனி என்ன அது ஏன் அடிக்கடி தோற்றம் பெற்று மறைகின்றது என்பதனை சரியான கோணத்தில் இருந்து ஆராய்ந்து அறிந்து இனங்கண்டு அதற்கு உரிய முறையில் நிரந்தரமான தீர்வினை பெற்றாக வேண்டும் என்று யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

எனவே நம் சமூகத்தில் பொறுப்பு வாய்த அத்தனை பேரும் நாளைய நம் வருங்கால சந்ததியினர்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதனை நாம் மறந்து விடலாகாது.

நமது முன்னோர்களான போற்றத்தகு நம் தலைவர்கள் நமது தலைமைத்துவம் மற்றும் நமது தார்மீக உரிமைகளைப் பெரும் போராட்டம் நடாத்தியே பாதுகாத்து நம் கரங்களுக்குப் பெற்றுத்தந்தார்கள். 

தமிழ் தலைவர்கள் இலங்கையில் தமிழ் பேசும் இரண்டு இனங்கள் உண்டென்பதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தாங்கள் தமிழ் பேசும் மக்கள் அனைவரதும் ஏகபிரதிநிதிகளாக ஆகிவிட முற்பட்ட போதெல்லாம், இல்லை இலங்கையில் தமிழ் பேசும் இரண்டு இனங்கள் இருக்கின்றார்கள் என்பதனை காலனித்துவ ஆட்ச்சியாளர்களிடம் எடுத்துக் கூறி அவர்களை எதிர்த்துப் போராடி நம் தலைமைத்துவத்தினைப் பாதுகாத்துத் வந்திருக்கின்றார்கள் எனும் வைர வரிகள் வரலாற்று நூற்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. 

அவ்வாறே தொப்பி அனிதல் போன்ற சிறு விடயங்களைக் கூட நம் தலைவர்கள் விட்டுக் கொடுக்காது வழக்காடி பெற்றுத் தந்தார்கள் இவ்வாறான பொண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வீர வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான வீரத்தியாகிகளின் வாரிசுகள் நாம். 

அப்படி இருக்க நாம் நமது வருங்கால நாளைய நம் சந்ததியினர்களுக்;கு என்ன வரலாற்றை விட்டுச் செல்லப் போகின்றோம். தலைமைத்துவம் முதற்கொண்டு தன்மானம் வரை அத்தனையையும் அடகு வைத்தார்கள் எனும் கோழைத் தனத்தைப் பறைசட்டி நிற்கும் கறை படிந்த வரலாற்றையா? அல்லது வீரப்பரம்பரையின் வாரிசுகள் என்பதனை நிலை நாட்டிச் சென்ற வீரப் புருசர்கள் எனும் வீர வரலாற்றையா?

எப்போதும் போல் இம்முறையும் நாம் அனைத்தையும் மறந்து விட்டு மீண்டும் ஒரு முறை பேரினவாத சக்திகள் துயில் எழுப்பும் வரை மீழா துயில் கொள்வோமாயின் அதுவே நமது முட்டாள் தனத்தின் அதிகபட்ச்ச உச்சகட்டாகும்.

ஒரு உண்மை இறை விசுவாசி ஒரு குளியில் இரண்டு முறைகள் விழ மாட்டான் என்பது நபி வாக்காகும். நாம் எத்தனை முறை எத்தனை குளியில் விழுந்து எழும்பி இருக்கின்றோம்.? இன்னும் எமது ஈமான் வலுப்பெறவில்லையா? ஆகவே இதன் பிறகாவது நாம் மீண்டும் மீண்டும் ஒரே குளியில் விழாதிருக்கும் வகையில் மிகவும் அவதானமாகவும் விழிப்பாகவும் இருந்து கொள்ளுதல் வேண்டும். 

எனவே நாம் இந்த மிகவும் சாதகமான சந்தர்ப்பத்தை நழுவ விடாது  இன்றிலிருந்தே நமது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஆளுக்காள் இயக்கங்கள் என்றும் கட்ச்சிகள் என்றும் ஆப்பிழுத்துக் கொண்டிருக்காது ஒரே அனியாக நின்று இடைவிடாது முன்னெடுத்துச் செல்வதற்கான ஆக்கபூர்வமானதும் அறிவுபூர்வமானதுமான செயற்திட்டங்களை உடனடியாக முன்னெடுத்தல் வேண்டும். இதற்க்கு நம் தலைமைகள் எப்போது முன் வரப் போகின்றதோ?

அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் ஒரே அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகின்றார்களோ, அவர்களைத்தான் அல்லாஹ் நிச்சயமாக நேசிக்கின்றான் (அல்-குர்ஆன்: 61:4)

அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட வெற்றி எமக்குக் கிடைக்காமைககான காரணம் நாம் பல அனிகளாக பிரிந்து தனித் தனிக் குழுவாகப் போராடுவதுதான். இந்தப் பிரிவினை அல்லாஹ்வின் அன்புக்குப் பதிலாக அவனின் கோபத்தையே எமக்குப் பெற்றுத்தந்திருக்கின்றது எனலாம்.

மீண்டும் அல்லாஹ் கூறுகின்றான் : நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கின்றது. (அல்-குர்ஆன்: 61:3)


இப்படிக்கு

முனாப் நுபார்தீன் 
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்

மின் அஞசல்: aslislamguide@yahoo.com
ஸ்கைப் : munabu2
வலைத் தளம்: www.aslislamguide.blogspot.com


திங்கள், 21 ஏப்ரல், 2014

1915 சிங்கள - முஸ்லிம் கலவரப் பதிவுகளும், வன்முறைக...

Jaffna Muslim: 1915 சிங்கள - முஸ்லிம் கலவரப் பதிவுகளும், வன்முறைக...: (நஜீப் பின் கபூர்) யார் உங்களை அடித்தது..? சிங்களவர்கள்....! யார் உங்களைப் பாதுகாத்தது..?? அதுவும் சிங்களவர்கள்.....! உங்களை...

வானத்தைப் பார்த்து உமிழ்ந்தால் அது நம் முகத்தில்தானே

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்..

வானத்தைப் பார்த்து உமிழ்ந்தால் அது நம் முகத்தில்தானே

தெரு நாய்களுடன் விவாதிப்பது அமைச்சர் றஊஃப் ஹகீம் அவர்களுக்கு நியாயமா? எனும் தலைப்பில் சில இணைய தளங்களில் வெளியாகிய எனது ஆக்கத்திற்கு கருத்து வழங்கியிருந்த சகோதரர் பறகஹதெனிய அக்கரம் அவர்களுக்கும் மற்றும் அவரின் கருத்தில் இருப்பவர்களுக்கும்.

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் 

முதலில் நீங்கள் நம் மார்க்கத்தின் மீதும் நம் சமூகத்தின் மீதும் கொண்டுள்ள அதீத பற்றிற்க்கும் அக்கறைக்கும் எனது நிறைவான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

உங்களுடைய ஆத்திரமும் ஆதங்கமும் எமக்குப் புரிகின்றது இன்றைய சூழ்நிலையில் நீங்கள் மட்டுமின்றி நம் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவரதும் ஆதங்கமும் அதுவாகத்தான் இருக்கின்றது. 

பாராளு மன்றத்தில் நம் சமூகத்தைச் சார்ந்த இத்தனை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தும் இவர்கள் ஒருவரும் ஏன் இன்னும் பாராளுமன்றத்தில் அல்லது ஜனாபதியிடத்திலோ பாதுகாப்புச் செயலாளரிடத்திலோ இது பற்றி பேசாதிருக்கின்றாhகள் என்ற கேள்விதான் இன்று ஒட்டு மொத்த நம் முஸ்லிம் சமூகத்திடமும் எழுந்துள்ளது.

இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் அதாவது பாராளு மன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நம் முஸ்லிம் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர் எந்தக் கட்ச்சியை சார்ந்தவராக இருந்தாலும் சரி குறியகி மனம் படைத்த ஓரிருவரைத் தவிர ஏனையவர்களின் சேவைகளை நாம் ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது அவ்வாறு குறைத்து மதிப்பிடவும் கூடாது. 

அவர்களால் நம் சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கேனும் நன்மைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

அத்துடன் அவர்கள் தகுந்த இடங்களில் நம் சமூகத்திற்காக குரல் கொடுக்குகின்றார்களா? இல்லையா? என்பது பற்றி எமக்கு சரியாகத் தெரியாது. ஏனெனில் அநேகமான ஊடகங்கள் அவர்களின் அவ்வாறான நல்ல செயற்பாடுகளைத் திட்டமிட்டு மறைக்கின்றன. 

அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைப் பற்றியோ எந்த அக்கறையும் இல்லை எனும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் நமக்கே இந்த அளவு ஆத்திரமும் ஆதங்கமும் ஏற்படுமாகவிருந்தால் அவர்களுக்கு ஏற்படாதிருக்க எவ்வகையிலும் நியாயமில்லை. 

அவர்களும் அவர்களால் முடிந்த பங்களிப்புகளைச் செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று நம்புகிறேன். 

அண்மையில் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டியளித்த அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்க்குப் பதில் அளித்த போது அவர் கூறியதாவது “- பாதுகாப்புச் செயலாளரிடம் பொதுபள சேனாவின் அலுவலத் திறப்பு விழாவில் தாங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நாம் அவருக்கு அழுத்தங்களைக் கொடுத்தோம் என்றாலும் அவர் சில காரணங்களைக் காட்டி எமது வேண்டுதலைப் புறக்கணித்தார் என்று குறிப்பிட்டார்.

அவ்வாறே கடந்த வாரம் ஒலிபரப்பான முஸ்லிம் குரலின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்கு விடையளித்த அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களும் இதே விதமான கேள்வியொன்றிற்குப் பதிலழிக்கும் போது அவரும் பாதுகாப்புச் செயலாளரின் இந்த செயலைக் கண்டித்ததாக் குறிப்பிட்டார்.

இவைகளிலிருந்து நம் அரசியல் தலைவர்கள் அனைவரும் நமக்காகக் குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதனை எம்மால் எழிதில் புரிந்து கொள்ள முடிகின்றது.

அவ்வாறே எனக்கு ஏற்பட்ட ஒரு சிறிய அனுபவத்தினை இந்த இடத்தில் நினைவூட்டுதல் நம் தலைவர்களைப் பற்றிய நல்லென்னத்தினை நமது உள்ளங்களில்; ஏற்படுத்தும் எனக்கருதுகின்றேன்.

கடந்த 2008 ம் ஆண்டு நடை பெற்ற வடமத்திய மாகானசபைத் தேர்தலின் போது எனது பக்கத்து ஊராகிய மிகிந்தiலையைச் சேர்ந்த நம் சகோதரர்கள் சிலர் அன்று மாகானசபை முதலமைச்சராகவிருந்த ”பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க” அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள் அப்போது குறித்த முதலமைச்சர் நம் சகோதரர்களைத் ”தம்பிலா தொப்பிய ஹெரின பத்தட்ட தானவா” எனக்கூறி தகாத வாhத்தைகளால் பேசியுள்ளார் இந்தத் தகவல் எனக்குக் கிடைத்தது.

மறு நாள் நான் எனது சொந்தத் தேவைக்காக கொழும்பு சென்ற போது மேல் மாகான ஆளுனர் அலவி மௌலானா அவர்களைச் சந்தித்து இது பற்றி அவரிடம் முறையிட்டேன் அப்போது அவருக்கு ஏற்பட்ட ஆத்திரம் எனக்கு கண்கலங்க வைத்து விட்டது. ஆன்றுதான் அவர் நம்மீது வைத்திருக்கும் அதீத பாசத்தினைப் புரிந்து கொண்டேன்.

உடனடியாகத் தனது பணியாளை அளைத்து பேர்ட்டிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தித் தாருங்கள் என்று பணித்தார் அப்போது அருகாமையில் அமர்ந்திருந்த அஸ்வர் அவர்கள் குறுக்கிட்டு ”நமது ஆட்கள் செய்கின்ற வேலைகளும் அப்படித்தானே” என்று கூறினார் அதற்க்கு ஆளுனர் அவர்கள் நமது மக்கள் தவறு செய்தால் அதற்கு ஏசுவதற்கு அவர்; யார்? அவர் எப்படி நம்மக்களுக்கு ஏச முடியும்? அவருக்கு நம்மக்கள் மீது என்ன உரிமை இருக்கின்றது என்று கூறிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் வடமத்திய மாகான முதலமைச்சரைத் தொலைபேசியில்; கண்டித்தார்.

அவர் தனது கண்டனத்தின் போது உங்கள் சிங்கள மக்கள் அனைவரையும் சிறிலங்கா சுதந்திரக் கட்ச்சிக்குள் சேர்த்து விட்டீர்களா? எமது மக்கள் மட்டு வேறு கட்ச்சிகளில் இருக்கக் கூடாதா? போன்ற கேள்விகளையும் கேட்டு விட்டு இதன் பிறகு எமது மக்களுக்கு எதுவும் சொல்லக் கூடாது அவர்களிடம் தவறு இருந்தால் அதனை கேட்பதற்கு நாம் இருக்கின்றோம் என்றும் கூறினார்.

இது ஒரு சாதாரன விடயம் இதற்கே அவர் இந்த அளவு ஆத்திப்பட்டார் என்றால் இன்றைய நிலையில் அவர் போன்றோர்கள் எந்த அளவு ஆத்திரத்துடனும் வெறுப்புடனும்; அரசுடன் சேர்ந்து பயனிப்பார்கள் என்பதனைச் கட்ச்சி பேதங்களை எல்லாம் ஒரு புறம் தூக்கி வைத்து விட்டு நடுநிலை கண் கொண்டு சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

நம்  தலைவர்களுடைய மட்டுமின்றி சம் சமூகத்தில் உள்ள சாதாரன ஒரு குடிமகனாக இருக்கும் நம் இஸ்லாமிய சகோதரன் ஒருவனுடைய மானத்துடன்கூட விளையாடுவது ஹராமாகும் அதே நேரம் தலைவர்மார்களுடைய விடயத்தில் அது பெருக் குற்றமும் கூட எனவே தயவு செய்து அவர்களைப் பற்றிய நல்லதை பேசுங்கள் அல்லது மௌனமாக இருயுங்கள். தவறு செய்யாத மனிதன் உலகில் யாரும் இல்லை. எனவே அவர்களிடம் தவறுகள் காணப்பட்டால்; அதனை ஊடகங்களின் வாயிலாகப் பகிரங்கப் படுத்தாது தனிப்பட்ட முறையில் அவர்களுடன் தொடுர்பு கொண்டு நாகரீகமான முறையில் சுட்டிக் காட்டுங்கள் அந்த உரிமை நமக்கு உண்டு என மிகவும் தயவாய் வேண்டிக் கொள்கின்றேன். வானத்தைப் பார்த்து உமிழ்ந்தால் அது நம் முகத்தில்தானே விழும்.

இப்படிக்கு 

மிகத் தாழ்மையுடன் 

முனாப் நுபார்தீன் 
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்

மின் அஞசல்: aslislamguide@yahoo.com

ஸ்கைப் : munabu2

வலைத் தளம்: www.aslislamguide.blogspot.com





ஞானசார தேரருக்கு அசாத் சாலியிடம் இருந்து ஒரு கடிதம்.

ஞானசார தேரருக்கு அசாத் சாலியிடம் இருந்து ஒரு கடிதம்.

கௌரவ அமைச்சர் றஊஃப் ஹகீம் அவர்களுக்குஒரு பணிவான ஆலோசனை


அளவில்லா அருளாளனும் நிகரில்லா அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்…

கௌரவ அமைச்சர் றஊஃப் ஹகீம் அவர்களுக்குஒரு பணிவான ஆலோசனை

கௌரவ அமைச்சர் றஊஃப் ஹகீம் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ{

தாங்கள் பொது பளு சேனா அஞ்ஞான சேரவுடன் விவாதம் செய்வதற்குத் தயார் என்று ஒரு சிங்கள பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்ததாக ஜஃப்னா நியூஸ் இணைய தளத்தின் ஊடாக அறிந்து கொள்ள கிடைத்தது.

ஆதலால் இது தொடர்பாக எனது ஆலோசனையையும் தாங்களின் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

தாங்கள் படிப்பில் ஒரு சட்டத்தரனி நம் சமூகத்திற்கு மத்தியில் போற்றத் தக்க ஒரு பெரும் தலைவர் அரசியல் மட்டத்தில் அமைச்சரவையின் ஒரு உயர் அமைச்சர் இவை அத்தனையையும் மறந்து விட்டு கண்ட கண்ட தெரு நாய்களுடன் எல்லாம் தாங்கள் விவாதம் செய்வது எந்த வகையில் நியாயம்? விவாதம் செய்வதற்கு ஒருதராதரம் வேண்டாமா?

இன்று நீங்கள் இந்த தரம் கெட்ட தெரு நாயுடன் விவாதிக்கச் சென்றால் உங்கள் அந்தஸ்த்து என்னாவது?

உங்கள் அறிவுக்கும் அந்தஸ்த்துக்கும் ஆளுமைக்கும் தகுதிக்கும் தரத்துக்கும் பொருத்தமான ஒருவர் அழைத்தால் கண்டிப்பாக நீங்கள் அந்த சவாலை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

அவ்வாறின்றி  இப்படிப்பட்ட தரம் கெட்ட தெரு நாய்களுடன் எல்லாம் தாங்கள் விவாதம் செய்வது அறவே தேவையற்ற விடயமாகும் இதனால் உங்களுக்கோ நீங்கள் சார்ந்திருக்கும்; சமூகத்திற்கோ அல்லது உங்கள் கட்ச்சியிற்கோ எவ்வித பலனும் கிட்டப் போவதில்லை. 

அவன் நம் சமூகத்தின் ஆக அடிமட்டத்தில் உள்ள அறவே படிப்பறிவற்ற ஒரு பாமர மகனுடன்கூட விவாதிப்பதற்குக் தகுதியற்றவன்.

குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் தாங்கள் பதில் சொல்லி கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீணாக்காது உங்கள் பணியைத் nhடருங்கள்
அவன் உங்களுடன் விவாதித்தேயாக வேண்டும் என்றால் அவனை முதலில் உங்கள் தரத்திற்கு வந்து உங்கள் அந்தஸ்த்துடன் விவாதத்திற்கு வருமாறு நீங்கள் சவால் விடுங்கள் .இதுதான் உங்கள் அந்தஸ்த்துக்குப் பொருத்தமானதாக இருக்கும் என எண்னுகின்றேன். ஆவன் உரோஷம் உள்ளவனாக இருந்தால் உங்களுக்கு இருக்கின்ற தகுதியுடனும் அந்தஸ்த்துடனும் வரட்டும்.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்.

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

விமர்சகர்கள் அனைவருக்கம் ஒரே பதில்

بسم الله الرحمن الرحيم
الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه اجمعين  

விமர்சகர்கள் அனைவருக்கம் ஒரே பதில்

”உலமா சபையின் அறிக்கைக்கு கருத்துக்கள் தெரிவித்த மற்றும் தெரிவிக்க இருக்கும் அனைவருக்கும்” எனுளும் தலைப்பில் நாம் சமூகத்திடம் முன்வைத்த வேண்டுகோலுக்கு அதிகமானோர் மதிப்பளித்திருந்தனர் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். 18-04-2014 ம் திகதி பதிவிடப்பட்ட எமது வேண்டுகோலுக்கு 19-04-2014 ம் திகதியாகிய இன்று அதாவது ஒரு நாள் அவகாசத்திற்குள் சுமார் 1139 சகோதரர்கள் மூக நூலிலும் 1143 சகோதரர்கள் ஏனைய சமூகத் தளங்களிலும் இதனைப் பகிர்ந்திருந்தனர் அந்த அனைத்து சகோதரர்களுக்கும் எமது நிறைவான நன்றியினை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதே நேரம் சமூக சிந்தனையோ தூர நோக்கோ மாhக்கத்தில் போதிய அறிவோ அடையப் பெறாத மிகச் சிறுபாண்மையான சிலர் மட்டும் அதாவது சுமார் ஏழு நபர்கள் மட்டும் இதனையும் விமர்சித்திருந்தார்கள் அவர்களுக்கும் சில சகோதரர்கள் தகுந்த பதில் அழித்திருந்தார்கள் அவ்வாறு நம் சமூகத்துக்காக முன் வந்து பதிலழித்த சகோதரர்களுக்கும் எமது பூரணமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்
அத்துடன் விமர்சகர்கள் அனைவருக்கும் அவர்களின் விமர்சனங்கள் ஒரே வகையானதாக இருப்பதனால் அவர்கள் அனைவருக்கும் ஒரே பதிலாக இதனை எழுதுகின்றோம்.

உலமா சபை அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸைத்தான் யாப்பாக கொண்டு இயங்குகின்றது என்பதை நீங்கள் அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸ் பற்றிய போதிய அறிவு பெற்றிந்திருந்தால் அவர்களின் அனுகு முறைகள் மூலமே அதனை அறிந்திருப்பீர்கள். இதனை நாம் அல-குர்ஆனில் இடம் பெற்றுள்ள நபி மூஸா ( அலை) அவர்களின் ஒரு சம்பவத்தின் மூலம் தெளிவுபடத்தலாம் என நம்புகின்றோம்.

நபி மூஸா ( அலை) அவர்கள் இல்லாத போது நபி ஹாறூன் (அலை) அவர்கள் பனீ இஸ்ராயீல் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கினார்கள் அவ்வேளையில் சாமிரி என்ற ஒருவன் மண்ணிலிருந்து ஒரு மாட்டைச் செய்து மக்களை அதற்கு வழிபடச் செய்து வழிகெடுத்திருந்தான். ஆப்போது செய்தியறிந்து அங்கு விரைந்து வந்த நபி மூஸா (அலை) அவர்கள் மக்களை வழிகெடுத்த சாமிரிய்யைத் தண்டிப்பதை விட்டு விட்டு மக்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கிய நபி ஹாறூன் ( அலை) அவர்களின் தலை முடியையும் தாடியையும் பிடித்து குலுக்கியவராக ஆத்திரத்துடன் நடந்து கொண்ட விதம் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் 

''ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.(அல்-குர்ஆன் : 20: 92)

அதற்கு நபி ஹாறூன் ( அலை) அவர்கள்: 

''என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!" என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்"" என்று கூறினார். .(அல்-குர்ஆன் : 20: 94) என்று பதில் கூறினார்கள் என்றும் 

அதே நேரம் சாமிரிய்யிடம் சென்று மிகவும் மிருதுவான முறையில் :  ''ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?"" என்று மூஸா அவனிடம் கேட்டார். (அல்-குர்ஆன் : 20: 95) என்றும் அல்-குர்ஆன் குறிப்பிடுவதுடன் மூஸா அலை) அவர்கள் அவனைத் தண்டிக்கும் வகையில் ''நீ இங்கிருந்து போய் விடு நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும்ää என்னைத்) ''தீண்டாதீர்கள்"" என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளதுää (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த ''நாயனைப்"" பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்"" (அல்-குர்ஆன் : 20: 97) என்று மட்டுமேதான் கூறினார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இவ்வாறான சம்பவங்களில் எமக்குப் பலதரப்பட்ட படிப்பினைகள் இருப்பதாகக் வல்ல அல்லாஹ் அல்-குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறுகின்றான் எனவே இந்த இடத்தில் நாம் பெறும் படிப்பினை என்ன ? அதில் எமக்குள்ள வழிகாட்டல்தான் என்ன என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். 

நிரபராதியான ஹாறூன் ( அலை) அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட நபி மூஸா (அலை) அவர்கள் குற்றவாழியாகிய மக்களை வழிகெடுத்த சாமிரிய்யிடம் மிகவும் மிருதுவாக நடந்து கொண்டதற்கான மர்மம் மற்றும் காரணமதான்; என்ன? 

இன்று உலமா சபையின் சானக்கியத்தை கோளைத்தனம் என்று விமர்சிக்கும் இவர்கள் போன்றோர்கள் அன்று இருந்திருந்தால் அல்லாஹ் பாதுகாப்பானாக நபி மூஸா (அலை) அவர்களும் ஒரு கோளை என்றே குற்றம் சுமத்தி இருரூப்பார்கள். 

நபி மூஸா (அலை) அவர்களின் மேற்படி சம்பவத்தைப் ஒன்றுக்குப் பல முறைகள் படியுங்கள் சிந்தியுங்கள் இதில் எமக்குப் பல படிப்பனைகள் இருக்கின்றன.

அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸை நீங்கள் சரியான முறையில் படித்திருந்தால் இவ்வாறான விமர்சனங்கள் செய்ய மாட்டீர்கள் எனவே நுனிப் புல் மேய்ந்து விட்டு நாமும் மார்க்க மேதைகளாகி விட்டோம் என்று பெருமை கொள்ளாது அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸை சரியான முறையில் படித்து விட்டு பேசுங்கள் என்று வேண்டிக் கொள்கின்றோம்.

ஏல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் மாhக்கத்தில் பூரண அறிவையும் விளக்கத்தையும் தந்தருள்வானாக.

والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه اجمعين و الحمد لله ربالعالمين 

இப்படிக்கு:
முனாப் நுபார்தீன்

அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...