திங்கள், 10 நவம்பர், 2014

உணரப்படாத இறைத் தண்டனைகள்.

உணரப்படாத இறைத் தண்டனைகள்.

அல்லாஹ்வின் தண்டனை என்பது பல்வேறு வடிவம் கொண்டதாகும் அவற்றுள் ஒரு மனிதகுக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்படுகின்ற மிகப்பெரிய தண்டனை என்பது அது அல்லாஹ்வின் தண்டனை என்பதனை ஒருவன் உணர்ந்து கொள்ள முடியாத விதத்தில் அவன் தண்டிக்கப்படுவதாகும் உதாரணமாக ஒருவன் நேர்வழியிலிருந்து நெறிபிறழ்ந்து வழி கேட்டில் நிலைத்திருத்தல்;. ஆனாலும் தான் வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றேன் என்பதனை அவன் உணர்ந்து கொள்வதில்லை.

இபுனு கைய்யூம் அல்-ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் பனீ இஸ்ராயீல்களின் அறிவிப்பிலிருந்து ஒரு சம்பவத்தினைக் கூறுகின்றார்கள் : பனீ இஸ்ராயீல்களில் ஒரு மனிதன் என் இறiவா நான் உனக்கு எவ்வளவோ மாறு செய்கின்றேன் ஆனால் நீ என்னைத் தண்டிப்பதாக இல்லையே என்று கூறினான். அதற்கு அல்லாஹ் நான் எவ்வளவோ உன்னைத் தண்டிக்கின்றேன் அது உனக்குத் தெரியாது இருக்கின்றது. ஏன் உனக்கு நான் எனது வழிபாட்டின்; இன்பத்தைத் தடுக்கவில்லையா? என்று அறிவித்தான்.

மேற்படி சம்பவம் ஒரு பாவி தனது உடல் ஆரோக்கியம் பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றை வைத்து தான் எந்த அளவு பாவங்கள் செய்த போதிலும் தான் தண்டிக்கப்படவில்லை என்று எண்ணிக் கொள்கின்றான் இந்த எண்ணமே அவனுக்குரிய தண்டனையாகும் என்பதனை அவன் உணர்ந்து கொள்ள முடியாதிருப்பதுவும் அவ்வாறே இறை வழிபாட்டில் நாட்டமில்லாது இருப்பதுவும் அவனுக்குரிய மிகப்பெரிய தண்டனையாகும் என்பதனைத் தெளிவு படுத்துகின்றது.

ஆம் ஒரு மனிதன் தான் செய்வது தவறு என்று உணரும் போது அதிலிருந்து தவ்பா செய்து மீண்டு கொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் : தவிரää மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும்ää அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்;. அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும்ää அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.(அல்-குர்ஆன் : 3:135)

ஆனால் அதனைப் பாவம் என்று உணர்ந்து கொள்ள முடியாத மனிதனால் அதிலிருந்து விடுபட முடியாது. அவன் தான் செய்வது சர்வசாதாரணமான ஒன்றுதான் என்று எண்ணிக் கொண்டு அந்த செயலில் தொடர்ந்து இருந்து விடுவான்.

அல்லாஹ் கூறுகின்றான் : ''(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?"" என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் மிகப் பெரும் நஷ்டவாளிகள். (அல்-குர்ஆன்: 18:103-104)

இவ்வாறு மனிதனால் உணரப்படாது தொடர்ந்து கொண்டிருக்கும்; அல்லாஹ்வின் பல்வேறுபட்ட தண்டனைகளுள் சில.

1.    ஒருவனுக்கு வணக்க வழிபாடுகள் மீது ஆர்வம் இல்லாது போதல்.

2.    பாவங்களின் மீது அதிக ஆர்வம் ஏற்படல்.

3.    அல்லாஹ்வை வணங்குவதிலிருந்து தடுக்கப்படல்.

4.    அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் சந்தர்பங்கள் இலகுவாகக் கிடைத்தல்;.

5.    அந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குக் கிடைத்தப் பெரும் பாக்கியம் எனக்கருதுதல்.

6.    தான் செய்து கொண்டிருக்கும் பாவங்களைப் பெருமையாகக் கருதிக் கொள்ளல்.

7.    ஹராமான வழியில் பொருளாதாரம் கிடைக்கும் போது அதில் மகிழ்ச்சி காணுதல்.

8.    ஒட்டு மொத்தத்தில் நேர்வழியிலிருந்து விலகி வழி கேட்டில் செல்லுதல்.

ஒரு பாவத்திற்குப் பின் இன்னுமொரு பாவம் செய்யும் சந்தர்ப்பம் கிடைப்பது என்பது அந்தப் பாவத்திற்கான தண்டனையாகும். அவ்வாறே ஒரு நன்மைக்குப் பின் இன்னுமொரு நன்மை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படல் என்பது முன்னய செயல் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான அடையாளமாகவும் அந்த நன்மைக்குரிய பிரதிபலனாகவும் இருக்கும்.

அல்லாஹ் ஒரு அடியானுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அருள் அவனை வழிகேட்டில் செல்வதிலிருந்து தடுத்து நேர்வழியின்பால் இட்டுச் செல்வதாகும் அவ்வாறே ஒரு அடியானுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை அவனை நேர்வழியிலிருந்து தூரமாக்கி வழிகேட்டில் விட்டு விடுதலாகும்.

ஆகவே நாம் நேர்வழியில் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோமா அல்லது வழிகேட்டில் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றேதாமா என்பதைக் கவனித்து மேற்படி இரு வகுப்பார்களில் நாம் எந்த வகுப்பில் இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதனைப் புறிந்து கொள்ளலாம்.

எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் மானக்டோன பாவமான செயல்களிலிருந்தும் அவனுக்கும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் மாறு செய்வதிலிருந்தும் பாதுகாத்து வழிகேட்டிலிருந்து தூரமாக்கி நேர்வழியில் செலுத்துவானாக.

முனாப் நுபார்தீன்.

செவ்வாய், 4 நவம்பர், 2014

கலைந்து போன அரசியல் கனவுகள்! » Sri Lanka Muslim

கலைந்து போன அரசியல் கனவுகள்! » Sri Lanka Muslim

அல் - ஹதீஸ் விளக்கம் - திருப்தி (போது என்ற மனம்) » Sri Lanka Muslim

அல் - ஹதீஸ் விளக்கம் - திருப்தி (போது என்ற மனம்) » Sri Lanka Muslim

கலைந்து போன கணவுகள்.

கலைந்து போன கணவுகள்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் காலத்துக்குக் காலம் பல்வேறு கணவுகள் தோன்றிக் கலைந்து சென்று கொண்டிருப்பதனைப் பார்க்குகின்றோம். நமது கையாலாகாத தனத்தினால் இன்று வரை ஒரு கணவைக் கூட நனவாக்கிக் கொள்ள முடியாது போய் உள்ளது. அந்தவகையில் சமகால அரசியல் வரலாற்றுக் கணவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.

அரசியல் ரீதியாக இரு பெரும் தேசிய கட்ச்சிகளில் மாத்திரம் அங்கம் வகித்து இரு பெரும் பிரிவுகளாகக் காணப்பட்ட முஸ்லிம் சமூகத்தை ஒரே அணியில் ஒன்று சேர்க்க வேண்டும் அதன் ஊடாக நமது உரிமைகளைப் பெற வேண்டும் என்று நமது தேசியத் தலைவர் மர்ஹ{ம் எம். எச். எம். அஸ்ரப் அவர்கள் கணவு கண்டார்கள்.

அவர்களின் கணவை நினைவாக்கும் வகையில் தேசிய மட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் அவர்களுடன் அணிதிரண்டார்கள் அதன் காரணமாக அவர்களின் கணவு அவரது வாழ் நாளிலேயே ஓரளவு நிதர்சணமாக நிறைவேறிக் கொண்டிருந்தது. அந்தப் பொண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மகிழ்ச்சிகரமான ஒரு தேநசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயனத்திலேயே அந்த மாமனிதர் தன்னை அற்பணித்தார் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

அவ்வாறான கால கட்டத்தில் அன்னாரின் வாழ்நாளிலேயே அன்னாரின் கணவுகளைக் கலைக்கும் விதத்தில் பல்வேறு சாத்தானியர்கள் உருவெடுத்து அன்னாரின் அபாரமிகு ஆளுமைக்கும் அறிவாற்றலுக்கும் ஈடு கொடுக்க முடியாது சிலர் அன்னாரின் தலைமையின் கீழேயே சங்கமிக்க நேர்ந்தது மற்றும் சிலரோ கால ஓட்டத்தின் வேகத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் முகவரியற்றுப் போயினர்.

நமது தேசியத் தலைவர் அவர்களின் மறைவை அடுத்து நம் சமூகத்தின் ஒட்டு மொத்தக் கணவாக இருந்த நமது ஒரேத் தலைமை உரிமை பாதுகாப்பு பொருளாதார மேம்பாடு போன்ற அத்தனையும் கலைந்து செல்ல ஆரம்பித்தன. அதற்க்கான மிக முக்கிய காரணம் அவரால் நமக்குப் பெற்றுத்தரப்பட்ட நமது தேசிய கட்ச்சியாகிய சிறீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸின் சில சுயநலமிகளின் தவறான உறவின் மூலம் அது பல குட்டிக் கட்ச்சிகளைப் பிரசவிக்கத் தொடங்கியது. அதனால் ஏற்கனவே அரசியல் ரீதியாக இரு பெரும் பிரிவுகளாக இருந்து வந்த நமது சமூகம் இன்று பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பரினமித்துள்ளதைப் பார்கின்றோம்.

எனவே இன்றைய நிலையில் நாம் இந்த நிலைக்கு உடனடியாக முடிவுரை எழுதி முற்றுப்புள்ளி வைக்கத் தவறின் அது பிரசவித்திருக்கும் தவறாகப் பிறந்த அந்தக் குட்டிகளும் இன்னும் பல பேரக் குட்டிகளைப் பிரசவிப்பதனைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும் என்பது நிதர்சனமாகும்.

அவ்வாறு நமது சமூகம் இன்னும் பல பிரிவுகளாகப் பிரிந்து செல்லும் போது நம் சமூகம் சகல துறையிலும் பலமிளந்து மேலும் மேலும் பலவீனப்பட்டு நலிவுற்ற நாதியற்ற ஒரு சமூகமாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் கிடையாது.

அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். ;.(அல்-குர்ஆன் : 8:46)

இந்த மோசமான பிரிவினைதான்;; நமது கடந்தகால நிகழ்கால எதிர்கால கணவுகள் அத்தனையும் கலைந்து நாம் இன்று நிஜ வாழ்வை அடைந்து கொள்ள முடியாமைக்கான பிரதானமான காரணங்களாக தடைக்கற்க்களாக அமைந்துள்ளன என்றால் அது மறுப்பதற்கில்லை.

எனவே நமது கணவுகள் கலைந்து செல்லாது நினைவாக மலர வேண்டுமாக இருந்தால் நாமனைவரும் நமது அரசியல் வேறுபாடுகள் போலி கௌரவம் போன்ற அத்தனையையும் மறந்து அனைத்து கட்சிகளையும் புறந்தள்ளி தூய்மையானதும் ஆளுமை மிக்கதுமான ஒரேத் தலைமையின் கீழ் உடனடியாக ஓரணி சேர்தல் அவசியமாகும். மட்டுமின்றி இது நமது தாரமீகக் கடமையுமாகும்.

அந்த அணி ஈயத்தால் வார்க்கப்பட்ட அரணைப் போன்று உறுதியாக இருப்பதுவும் மிகவும் அவசியமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்றுää அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகின்றார்களோää அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.(அல்-குர்ஆன் : 61:4)

எனவே சமூகத்தின் மீது உண்மையான பற்றும் இறையச்சமும் உள்ள அனைவரும் அல்லாஹ்வுக்காக ஓரணிதிரள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கான ஆற்றலையும் தளராத மனவுறுதியையும் சந்தர்ப்ப சூழ்நிலையையும் ஏற்படுத்தித் தருவானாக.

முனாப் நுபார்தீன்.

அல் - ஹதீஸ் விளக்கம் - திருப்தி (போது என்ற மனம்)

அல் - ஹதீஸ் விளக்கம் - திருப்தி (போது என்ற மனம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் இஸ்லாத்தை ஏற்று போதியளவு வாழ்வாதாரம் வழங்கப்பட்டு அவனுக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அல்லாஹ் அவனைத் திருப்தியுறச் செய்தானோ அவன் உண்மையாகவே வெற்றி பெற்று விட்டான். (நூல் : முஸ்லிம்)

மேற்படி நபிவழிச் செய்தி மனிதனுக்கு இன்றியமையாத மிக முக்கியமான திருப்தி எனும் ஒரு பண்பு பற்றி வலியுறுத்துகின்றது. திருப்தி என்பது அல்லாஹ்வால் வழங்கப்பட்டதைக் கொண்டு பொருந்திக் கொள்வதாகும். அடியான் அல்லாஹ்வால் அவனுக்குக் கொடுக்கப்பட்டதைக் கொண்டு பொருந்திக் கொள்ளும் போது அவன் அல்லாஹ்வால் அவனுக்கு பங்கீடு செய்யப்பட்டதில் திருப்தியுற்றவனாவான் அப்போது அவனின் உள்ளம் அமைதி பெற்று நிம்மதியடைவான்.

திருப்தி கொள்வதின் மூலம் நாம் அடையும் நற்பயன்கள்:

1.    திருப்தி என்பது அழிந்து போகக்கூடிய இந்த அற்ப்ப உலகிற்குப் பின்னால் மனிதன் செல்வதிலிருந்தும் அவனை அது பாதுகாக்கின்றது.

2.    ஒரு இறை விசுவாசி தனக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வாதாரம் அது குறைவாக இருந்த போதிலும் ஆகுமானதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளச் செய்கின்றது.

3.    ஆகுமானதல்லாதது எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதனை வெறுத்தொதுக்கி வாழ வழி செய்கின்றது.

4.    திருப்தி கொள்ளுதல் என்பது ஆகுமான வழியில் பொருளீட்டாதிருத்தல் அல்லது தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைப் புறக்கணித்தல் என்பதோ அல்ல.

5.    அது பிறருக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் குறைகாணாது அவர்கள்மீது பொறாமை கொள்ளாது வாழச் செய்வதாகும்.

6.    திருப்தி கொள்ளுதல் என்பது அற்ப உலக சுகபோகங்களை அதிகரிக்கச் செய்வதற்காக தன்னைத் தனது சக்;திக்கப்பால் சிரமப்படுத்துவதிலிருந்து தடுத்துக் கொள்ளும்.

7.    திருப்தி என்பது அற்ப உலக சுகபோகங்களுக்காக அல்லாஹ்வின் கடமைகளைப் பாழ்படுத்துவதிலிருந்து பாதுகாப்பளிக்கும்.

8.    திருப்தி என்பது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி இருதரப்பினர்க்கும் பொதுவானதே.
9.    திருப்தி என்பது உள்ளம் சார்ந்ததாகும் அதற்கும் தன்வசமுள்ள செல்வங்களுக்கும் சம்மந்தம் கிடையாது.

10.    திருப்தியடையாத ஒரு செல்வந்தன் அவன் தனது இறைவனை அறிந்து கொள்வதிலிருந்து அவனின் செல்வம் அவனைத் தடுத்துவிடக் கூடும்.

11.    திருப்தியடையாத ஒரு ஏழை அவனின் வாழ்வாதாரத் தேடல் அவனை அல்லாஹ்வின் கடமைகளைப் பாழ்படுத்தச் செய்து விடக் கூடும்.

12.    ஒட்டு மொத்தத்தில் யார் அல்லாஹ்வால் தனக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு பொருந்திக் கொண்டு திருப்தியடைகின்றார்களோ அவர்களது வாழ்க்கை இவ்வுலகில் மணமானதாக மலரும்.

அல்லாஹ் கூறுகின்றான் : ஆணாயினும்ää பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும்ää நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.(அல்-குர்ஆன் : 16:97)

மேற்படி வசனத்திற்கு விரிவுரை வழங்க வந்த அனேகமான விரிவுரையாளர்கள் மணமான வாழ்க்கை என்பது திருப்தி கொள்ளுதல் என்றே விளக்கம் கொடுத்துள்ளார்கள். ஏனெனில் ஒரு மனிதன் தனக்கு வழங்கப்பட்ட வாழ்வாதாரங்களைக் கொண்டு திருப்தி கொள்ளாதவரை மணமான நிம்மதியான வாழ்க்கையினை அடைந்து கொள்ள முடியாது.
ஆதலால்தான் அல்லாஹ் திருப்தியுறாது பேராசை கொண்டு வாழக்கூடிய ஏழை மற்றும் செல்வந்தர் ஆகிய இரு தரப்பிகளைப் பற்றியும் இவ்வாறு கூறுகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான் : செல்வத்தைப் பெருக்கும் பேராசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லைää விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்லää விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும்ää நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்க (அல்-குர்ஆன் : 102: 1-8)

முனாப் நுபார்தீன்

திங்கள், 3 நவம்பர், 2014

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 04) மனிதன் தனது ஆண்மாவை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் - அல்-குர்ஆன் மனிதனுக்குச் சாட்சியாகும். » Sri Lanka Muslim

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 04) மனிதன் தனது ஆண்மாவை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் - அல்-குர்ஆன் மனிதனுக்குச் சாட்சியாகும். » Sri Lanka Muslim

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 04) மனிதன் தனது ஆண்மாவை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் - அல்-குர்ஆன் மனிதனுக்குச் சாட்சியாகும்.

அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 04)
மனிதன் தனது ஆண்மாவை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் - அல்-குர்ஆன் மனிதனுக்குச் சாட்சியாகும்.

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக  இருக்கின்றான். (ஸஹீஹ் அல்-முஸ்லிம்) 

மேற்படி நபி வழிச் செய்தியின் சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். என்பது வரை கடந்த எமது தொடர் 1-3 வரையிலான தொடர்களில் விளக்கி இருந்தோம் எனவே அதன் இறுதிப் பகுதியாகிய குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக  இருக்கின்றான். என்பகைவள் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம். 

குர்ஆன் அடியார்களுக்கான அல்லாஹ்வின் ஆதாரமாகும் 

நபியவர்களின் கூற்று: (குர்ஆன் உனக்கு சார்பான அல்லது உமக்கெதிரான ஆதாரமாகும்) அதாவது யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து சிலவற்றைக் கற்று அதில் கடமையானவற்றை செயற்படுத்தியும் தடுக்கப்பட்டவற்றை விலக்கியும் அதன் வரையறைகளோடு நின்று கொள்கின்றாரோää அவருக்கு குர்ஆன் மறுமை நாளில் ஆதாரமாகவும சிபாரிசு செய்யக் கூடியதாகவும் இருக்கும். 

அபூ உமாமா அல்பாஹிலி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (குர்ஆனை ஓதுங்கள். அது மறுமை நாளில் அதனை ஓதியவருக்கு சிபாரிசு செய்யக் கூடியதாக வரும். ஸஹ்ராவைன் என அழைக்கப்படும் சூறா பகராää ஆலு இம்ரான் ஆகிய இரு சூறாக்களையும் ஓதுங்கள். அவையிரண்டும் மறுமை நாளில் மேகமாக அல்லது இறக்கைகளை விரித்த பறவையாக வரும் அவை தமது தோழர்களை மூடிக்கொள்ளும். சூறா பகராவை ஓதுங்கள் அதனை எடுத்துக் கொண்டால் அது பரக்கத்தாக அமையும். அதனை விட்டுவிட்டால் கைசேதமாகும். அதனை எந்த சூனியக் காரியாலும் வெற்றி கொள்ள முடியாது) (ஸஹீஹ் முஸ்லிம்). 

யார் அதன் படி செயற்பட வில்லையோ அதன் படி வழிநடக்கவில்லையோää இன்னும் அதனை எவர் பரகத்துக்காக மற்றும் இறந்து போனவர்களுகான வைபவங்களுக்காகவும் மாத்திரம்  ஓதியுள்ளார்களோ. அப்போது குர்ஆன் அவருக்கெதிராக ஆதாரமாக அமையும். உலகத்திற்கு முன்னால் மறுமையில் அது அவருக்கு கடிவாளமிடும். இப்னு மஸ்ஊம் கூறும் போது: “யார் அதனை முதுகுக்குப் பின்னால் வைக்கிறாரோ அது அவரை நரகத்தின் பால் இட்டுச் செல்லும். மேலும்: மறுமை நாளில் குர்ஆன் வந்து அதன் தோழனுக்கு சிபாரிசு செய்யும். சுவர்க்கத்தின் பால் இட்டுச் செல்லும். அல்லது அவருக்கெதிராக சாட்சிகூறி அவரை நரகத்திற்கு இட்டுச் செல்லும். (ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்). 

நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலதரப்பட்டவையாகும்.

நபியவர்களின் கூற்று: ஒவ்வொரு மனிதரும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்வதன் பால் விரைகிறார்கள். சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு அதனை விடுவிப்பவராக அல்லது அழிப்பவராக இருக்கின்றார்) ஒவ்வொரு மனிதரும் காலை மாலையை அடைகின்றார்கள். உலக விவகாரங்களுக்காக முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கலல்லர். அவர்களில் சிலர் தமது ஆத்மாவை இம்மை மறுமையின் தண்டனைகளிலிருந்து விடுவித்துக் கொள்கிறார்கள். அதாவது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதனூடாக. இன்னும் சிலர் அந்த ஆத்மாவை அழித்து இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக்குகிறார்கள். அதாவது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வதனூடாக அவனது கட்டளைக்கு மாற்றமாக நடப்பதனூடாக. அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் முயற்சிகள் பலதரப்பட்டவையாகும். (சூரத்துல் லைல்: 4). 

இப்னு ரஜப் கூறுகிறார்: இந்த ஹதீஸ் ஒவ்வொறு மனிதனும் தனது ஆத்மாவை அழித்துக் கொள்ள அல்லது விடுவிக்க முயற்சிக்கின்றான். யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட முயற்சிக்கிறாரோ அவர் தனது ஆத்மாவை அல்லாஹ்வுக்காக விற்று அவனது தண்டனையிலிருந்து அதனை விடுவித்துக் கொண்டார். யார் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் முயற்சிக்கிறாரோ அவர் தனது ஆத்மாவை பொடுபோக்காக விற்று அதனை அல்லாஹ்வின் தண்டனைக்குரிய பாவங்களில் அழித்து விட்டார். ((ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்) 

முடிவுரை.

மேற்படி ஹதீஸின் ஆரம்பம் சுத்தம் பற்றிக் குறிப்பிடுகின்றது சுத்தம் எனும் போது அது அகபுறச் சுத்தம்; ஆகிய இரண்டையும் குறிக்கும். இஸ்லாம் எவ்வாறு புறச் சுத்தத்தை வலியுறுத்துகின்றதோ அவ்வாறே அகச் சுத்தத்தையும் கடுமையாகவே வலியுறுத்துகின்றது.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நபித் துnhழர்கள் சகிதம் இரண்டு மண்ணறைகளைக் கடந்து சென்றார்;கள் அப்போ அந்த இரண்டு மண்ணறைவாசிகளும் வேதனைச் செய்யப்பட்டுக் கொண்டிருப்பது நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் வேதனைச் செய்யப்படுவது பெரும்பாவங்களுக்காக அன்றி சிறுபாவங்களுக்காவே என்று கூறிவிட்டு இருவருள் ஒருவர் சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாத காரணத்திற்க்காகவும் மற்றவர் பிறரைப் பற்றிப் புறம் பேசித்திரிந்ததன் காரணத்திற்க்காகவுமே  வேதனை செய்யப்படுகின்றார்கள் என்று கூறினார்கள்.

மேற்படி சம்பவத்திலிருந்து ஒருவர் சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாது புறச்சுத்தத்தில் கவனயீனமாக இருந்ததற்க்காகவும் மற்றவர் பிறரைப் பற்றிப் புறம் பேசியதன் மூலம் அகச்சுத்தத்தில் கவனயீனமாக இருந்ததன் காரணமாகவும் அவர்கள் இருவரம் தண்டிக்கப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

தண்ணீர் நமது உடல் உறுப்புக்களையும் ஆடைகளையும் ஏனையவைகளையும் சுத்தம் செய்வது போன்று நமது உள்ளங்களைச் சுத்தம் செய்யும் வகையில் இறைத் துதியின்பால் ஆர்வமூட்டப் பட்டடுள்ளது. அடுத்து மனிதனை மானக்கேடான தீய செயல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் தொழுகை அவனது வாழ்வில் ஒளியாக இருக்க வேண்டும்.

அவ்வாறே மேற்கூறப்பட்ட அத்தனையையும் மனிதன் செயல்படுத்துவதற்கு அவனுக்கு பொறுமை எனும் பேரொளி அவசியமாகும். இந்த இடத்தில் பொறுமை சூரியனுக்கு ஒப்பாகும். சூரியனின் ஒளி இன்றி சந்திரன் உட்பட எந்தவொன்றும் ஒளி பெற முடியாது அவ்வாறே பொறுமை எனும் பேரொளியின் துணை  இன்றி அவனால் எதனையும் சாதிக்க முடியாது. அனைத்துக்கும் மிகவும் இன்றியமையாதத் தேவையாக இருப்பது பொறுமைதான் ஆதலால்தான் தொழுகையை ஒளி என்றும் பொறுமையை அதற்கும் மேலான பேரொளி என்றும் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.

அடுத்ததாக மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் தனது ஆண்மாவிற்குப் பாதகமான அல்லது சாதகமான வகையில் தன்னை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் அவ்வாறு விற்பனை செய்யும் விடயத்தில் யார் அல்-குர்ஆனைத் தனது முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுகின்றார்களோ அவர்களுக்கு அல்-குர்ஆன் சாதகமாகச் சாட்சி கூறும் யார் அல்-குர்ஆனைப் புறக்கணித்து வாழ்தார்களோ அவர்களுக்கு அல்-குர்ஆன் பாதகமாக சாட்சி கூறும்.


முனாப் நுபார்தீன்

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...