ஜனாதிபதி ஆணைக்குழுவில்
முஸ்லிம் பிரதிநிதிகளும்
இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும்
அண்மைக் காலமாக நம் நாட்டில் அலுத்கம ஜின்தொட்ட அம்பாறை மற்றும் கண்டி உட்பட பல பாகங்களிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அவ்வப்பேர்து அரங்கேற்றப்படுகின்ற வண்முறைகளின் சூத்திரதாரிகளைக் கண்டறிவதற்காக சுவாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி இணைய ஊடகங்கள் வாயிலாக நாம் அரசைக் கேட்;டிருந்தோம்.
இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய உட்பட இன்னும் பல பகுதிகளில் இடம்பெற்ற வண்செயல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மாணித்திருப்பதானது சிறந்ததொரு முன்மாதிரியாகும்.
;அத்துடன் மேற்படி ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகளும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் அவ்வாறே அலுத்கம ஜின்தொட்ட அம்பாறை போன்ற பிரதேசங்களில் நடைபெற்ற வண்செயல்கள் தொடர்பிலும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் பின்புலத்தில் இருந்து செயல்பட்டவர்களை கண்டறியும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அதிமேதகு ஜனாதபதி அவர்களை வலியுறுத்துமாறு நமது பாறாளுமன்ற உறுப்பினர்களை வேண்டிக்கொள்கின்றேன்.
மௌலவி முனாப் நுபார்தீன்
பணிப்பாளர்
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
தொ.பே. 0715654580
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக