குழப்பம் மகிழ்ச்சியை வேட்டையாடுகிறது.
குழப்பம் எந்தப் பயனையும் தருவதில்லை. ஆனால் அது உனது ஆன்மாவில் சோகத்தை உருவாக்குகிறது. உனது உடம்பில் நோயைப் பதிக்கிறது. உனது ஆன்மாவுக்கு தொடர்ந்து கவலையைக் கொண்டு வருகிறது. எவன் ஒருவன் இந்தப் பிரபஞ்சத்தில் நடப்பவை யாவும் அல்லாஹ்வின் நியதிக்குட்பட்டது, அது நிகழுமுன் அதனை அல்லாஹ் எழுதி விட்டான் என அறிந்து கொள்கிறானோ அவன் அவநம்பிக்கை, கைசேதத்தைக் கொண்டுவரும் பிரதிகூலமான குழப்பத்தைக் காண்பதில்லை.
அதே நேரம் மனிதன் விளைவுகளை அடைந்து கொள்ள இட்டுச் செல்லும் காரணிகளை மேற்கொள்ள கட்டளை இடப்பட்டுள்ளான். அவன் நேரடித் தொடர்பாளன். இம்மை மறுமை செயல்களுக்கும், இம்மை மறுமையில் கிடைக்கும் பயன்களுக்கும் பொறுப்பாளனாவான். நடவடிக்கையை விட்டு விட்டு இறை நியதியை காரணங்காட்டுவது சரியானதல்ல. எனினும் திருப்தி கொண்டு நியதிகளை வகுத்தவனிடம் கூலியை எதிர்பார்க்கலாம். இந்த நம்பிக்கை மனிதனை சமநிலை உடையவனாகவும் மன அமைதி பெற்றவனாகவும் மகிழ்சியுடையவனாகவும் வினைத்திறன் உடையவனாகவும் ஆக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக