عن أبي مالك الأشعري قال : قال رسول الله صلى الله عليه وسلم : ((الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان ، وسبحان الله والحمد لله تملآن - أو تملأ - ما بين السماوات والأرض ، والصلاة نور ، والصدقة برهان والصبر ضياء ، والقرآن حجة لك أو عليك ، كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها )) (رواه صحيح المسلم)
ஹதீஸ் விளக்கவுரை
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல் அஷ்அரி அறிவிக்கின்றார்கள்: “
சுத்தம் ஈமானின் பாதியாகும்.
அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும்.
சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும்.
தொழுகை என்பது ஒளியாகும்.
(ஸதகா) தர்மம் செய்வது ஆதாரமாகும்.
பொறுமை பிரகாசமாகும்.
குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும்.
ஒவ்வொரு மனிதனும் தினமும் காலையில் தனது ஆத்மாவை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடிய பயனியாக இருக்கின்றான்.
(ஸஹீஹ் அல்-முஸ்லிம்)
ஹதீஸின் நிலை
இந்த நபிமொழி பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது:
அது தூய்மையின் பால் ஆர்வமூட்டி கட்டளையிடுகிறது.
உள்ளங்கள் அமைதியடையக்கூடிய இறை தியானத்தின் பால் ஆர்வமூட்டுகிறது.
பிறருக்கு நன்மை பயக்கும் வகையில் தர்மத்தின் பால் தூண்டுகிறது.
தௌஹீத் அதாவது ஏகத்துவத்திற்கு அடுத்ததாக மிக உன்னதமான வழிபாடுகளில் ஒன்றாகிய தொழுகையின் பால் ஆர்வமூட்டுகிறது.
பொறுமையின் உயர்வு பற்றி போதிக்கின்றது.
அல்லாஹ்வின் வேதத்தின் பால் கவனம் செலுத்துமாறும் அதன் படி செயற்படுமாறும் தூண்டுதலளிக்கிறது.
அதே போல் இறைவழிகாட்டலின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் ஆத்மாவை பாதுகாத்துக் கொள்ள பிரயத்தனம் எடுக்குமாறு தூண்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக