நம் சகோதரத்துவத்தினைத் தகர்க்கக்கூடிய எந்தவொரு செயலையும் ஒரு முஸ்லிம் எச்சந்தர்ப்பத்திலும் செய்யமாட்டான் அவ்வாறு செய்வது அவனுக்குத் தடுக்கப்பட்ட ஹராமான செயலாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
1. நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம்.
2. ஒருவருக்கொருவர் போட்டியாக விலைகளை உயர்த்திக் கேட்க வேண்டாம்.
3. ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
4. ஒருவரையொருவர் புறக்கணித்து நடக்க வேண்டாம்.
5. உங்களில் சிலர் இன்னும் சிலரது வியாபாரத்திற்கெதிராக வியாபாரம் செய்ய வேண்டாம்.
அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள். ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரனாவான்.
6. எனவே அவன்; அடுத்த முஸ்லிமுக்கு அநீதியிழைக்க மாட்டான்.
7. அவனைக் கை விட்டு விட மாட்டான்.
8. அவனிடம் பொய்யுரைக்க மாட்டான்.
9. அவனை இழிவாகக் கருத மாட்டான்.
''இறையச்சம் இங்கே உள்ளது" என்று மூன்று தடவைகள் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டிய நபியவர்கள் தொடர்ந்தும் கூறினார்கள்.
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை இழிவாகக் கருதுவதே அவன் தீயவன் என்பதற்கு போதுமான செயலாகும்.
10. ஒவ்வொரு முஸ்லிமின் இரத்தமும் உடமையும் மானமும் அடுத்த முஸ்லிமின் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது.(; நூல்:; முஸ்லிம் )
தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொள்ள விரும்பும் எந்தவொருவரும் மேற்கூறப்பட்டுள்ள இந்த இழி குணங்களிலிருந்து முழுமையாக விடுபடாத வரை அவன் உண்மையான முஸ்லிமாக முடியாது.
சிந்தித்துப்பாருங்கள் மேலே நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்பட்ட இந்த பழிக்கத்தக்கதான பத்துப் பண்புகளில் எதுதான் எம்மிடம் இல்லை அனைத்தும் மொத்தமாகவும் சில்லறையாகவும் அனைவரிடத்திலும் மிக சர்வசாதாரணமாகவே காணப்படுகின்றன.
இத்தகைய இழிவான குணங்களிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் நம் உள்ளங்களைப் பரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக