வியாழன், 16 அக்டோபர், 2014

ஞானசாரரின் ஞானசூண்யம் - 4.

திருவாளர் ஞானசாரர் அவர்களின் ஞான சூண்யம் பற்றி இதற்கு முன்னய எமது ஆக்கத்தில் இல.1 லிருந்து 8 வரை சுட்டிக் காகாட்டி இருந்தோம் எனவே இந்தத் தொடரில் இல. 9 லிருந்து துவங்குகின்றோம்.

9.    திருவாளர் ஞானசாரர் அவர்கள் கூறுகின்றார் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் சவுதியைப் போன்று உடை அணிகின்றார்களாம். அட ஞான சூண்யமே முஸ்லிம் பெண்கள் சவுதியைப் போன்று உடை அணியவில்லை இஸ்லாமிய முறைப்படி அணிகின்றார்கள் என்பதைத் தெரிந்து கொள்வீராக.இலங்கையில் மாத்திரமின்றி முஸ்லிம்கள் உலகில் எங்கு வாழ்ந்த போதிலும் அவர்கள் இஸ்லாமிய ஆடையைத்தான் அணிவார்கள்.

10.    முஸ்லிம்களுக்குத் தனியான காதி நீதி மன்றம் இருக்கின்றது ஏன் அவர்களுக்கு மட்டும் இந்தத் தனித்துவம் இதனை அரபு நாடாக்கப் பார்கின்றார்களா? என்று ஞானசாரர் புலம்புகின்றார். அட ஞான சூண்யமே முஸ்லிம்கள் இலங்கையில் மட்டுமின்றி உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தங்களது இஸ்லாமிய சட்டத்தின்படிதான் செயல்படுவார்கள் என்பதைத் தெரிந்து கொள்வீராக. அதைத் தடுக்க உமக்கு மட்டுமன்றி உலகில் எந்தவொரு கொம்பனுக்கும் முடியாது.

11.    புஹாரி எனும் நூலில் பதிவாகியுள்ளது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறி இஸ்லாத்தை ஏற்கும் வரை மனிதர்களுடன் போராடுமாறு நான் அல்லாஹ்வால் கட்டளைப் பிறப்பிக்கப் பட்டுள்ளேன் என்றும் அவ்வாறு யார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களின் உயிரும் உடமைகளும் பாதுகாப்பு பெறும் என்றும் முகம்மத்; (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்;. இதற்க்கு உங்கள் பதில் என்ன? இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? இது இங்கு செல்லுபடியாகுமா? இல்லையா? இதனை நீங்கள் இங்கு செயல்படுத்துகின்றீர்களா ? இல்லையா? என்று ஞானசாரர் சூளுரைக்கின்றார்.

அட ஞான சூண்யமே இலங்கையை விட்டு விடு நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை கடந்த 1435 வருடகால இஸ்லாமிய வரலாற்றில் உலகில் எங்காவது இஸ்லாத்தை முஸ்லிம்கள் போர் முனையில் வலுகட்டாயப்படுத்தி தினித்தார்கள் என்பதற்கு ஒரேயொரு சான்றையேனும் உம்மால் சமர்ப்பிக்க முடியுமா? அவ்வாறு ஒரேயொரு நபரையேனும் முஸ்லிம்கள் மதம் மாற்றியுள்ளார்கள் என்பதையாவது உம்மால் காட்ட முடியுமா? நிச்சயமாக உம்மால் முடியாது.

நீர் கூறுவது போன்று இஸ்லாம் ஆயுதத்தால் பரப்பப்பட்டதும் கிடையாது அப்படி பரப்ப வேண்டும் எனும் அவசியமும் அதற்கில்லை. மாறாக இஸ்லாம் மனிதாபிமானத்தால்தான் வளர்ந்தது இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
நீர் கூறுவது போலன்றி இறைவன் எமக்கு கற்றுத் தரும் அழகிய அனுகுமுறையினை சற்று கவனிப்பீராக.

இஸ்லாத்தின் சகிப்புத் தன்மை

அல்லாஹ் கூறுகின்றான் : அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல்ää வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (அல்-குர்ஆன் :6:108)

மேற்படி வசனம் முஸ்லிம்கள் ஏணைய சமூகத்தினர்கள் கற்பனையாக கடவுள் என்றெண்ணி வழிபட்டுக் கொண்டிருப்பவற்றை எக்காரணம் கொண்டும் நிந்திக்கக் கூடாது என்றே எமக்குப் போதிக்கின்றது. அத்துடன் அவர்கள் அவ்வாறு கற்பனைக் கடவுள்களை வழிபடுமளவிற்கு அச்செயலை அவர்களுக்கு அழகுபடுத்தியவனும் இறைவனே என்று கூறுகின்றது.

இஸ்லாத்தின் விட்டுக் கொடுப்பு

அல்லாஹ் கூறுகின்றான் : (நபியே!) நீர் சொல்வீராக: ''காஃபிர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். இன்னும்ää நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். அன்றியும்ää நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். மேலும்ää நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."" (அல்-குர்ஆன் : 1-6)

இஸ்லாத்தில் நிர்ப்பந்தித்தல் ஆகாது

அல்லாஹ் கூறுகின்றான் : (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால்ää எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2: 256)

யாரையும் எச்சந்தர்ப்பத்திலும் நிர்ப்பந்திக்கவோ நிந்தனை செய்யவோ கூடாது என்று கூறி சகிப்புத்தன்மை பற்றியும் விட்டுக் கொடுப்பு பற்றியும் போதிக்கின்ற இறைவன் ஆயுத முனையில் இஸ்லாத்தைப்பரப்ப கட்டளை இடுவானா? இதை புத்தியுள்ள எவனாவது ஏற்றுக் கொள்வானா? ஏன் உங்களுக்கு சிந்திப்பதற்கு புத்திதான் இல்லை இவற்றை உணர்ந்து கொள்ள உள்ளமுமா இல்லை? அப்படி என்றால் நீங்கள் மனிதர்களே இல்லையா?

12.   அல்-குர்ஆன் 2:193 ல் முஸ்லிம்களே அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் தவிர ஏனைய அனைத்து மதங்கள் மற்றும் அவற்றை வழிபடுபட்டு பூமியை நாசம் செய்பவர்கள் இல்லாதொழிந்து ஒரே மார்க்கம் இஸ்லாம் எனும் நிலை தோன்றும் வரை அவர்களுக்கு எதிராக கலகத்தையும்; போரையும் ஏற்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது. தயவு செய்து இது உங்கள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பதை எமக்குத் தெளிவு படுத்துங்கள் அப்போது எம்மால் சகவாழ்க்கையை ஏற்படுத்த முடியும் அப்போது நாம் எமது இழம் சகோதரிகளையும் இன்னும் வேண்டிய அனைத்தையும் விட்டுத் தருவோம் என்று கூறி திருவாளர் ஞான சூண்யம் அவர்கள் தமது அறியாமையை அரங்கேற்றினார்.

அட ஞான சூண்யமே அப்படி நீர் கூறுவது போன்று எமது குர்ஆனில் ஒரு வசனம் கூட இல்லை என்று என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்.
அப்படி நீர் கூறுவது போன்று ஒரு வசனமேனும் அல்-குர்ஆனில் இடம்பெற்றிருந்தால் இன்று நீர் இப்படி பேசுவதற்கு உயிருடன் இருந்திருக்க மாட்டீர் என்பதைப் புறிந்து கொள்ளும்.

இதோ நீர் சுட்டிக்காட்டிய இறைவசனத்தின் நேரடி மொழிபெயர்ப்பு நீர் சுட்டிக்காட்டிய 193ம் வசனத்திற்கு சற்று மேலே சென்று 190 வது வசனத்திலிருந்து படித்துப்பாரும் உமக்கு புத்தியிருந்தால் உண்மை விளங்கும்

அல்லாஹ் கூறுகின்றான் :

2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும்ää அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும்ää அவர்களைக் கொல்லுங்கள். இன்னும்ää அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோää அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும்ää கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும்ää மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில்ää நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

2:192. எனினும்ää அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும்ää கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

2:193.  ஃபித்னா(குழப்பமும்ää கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரைää நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.(அல்-குர்ஆன் : 2: 190-193)

இதுதான் உமது கேள்விக்கான பதில் மேற்படி வசனங்கள் நீர் குறிப்பிட்ட கருத்துக்கு முற்றிலும் மாற்றமான கருத்தையே கொண்டிருக்கின்றது.

நீர் கேட்டுக் கொண்டது போன்று நான் உமக்குப் பதில் தந்து விட்டேன் எங்கே உமது இந்த வினாவுக்கான பதிலை நாம் தந்தால நீர் வாக்களித்தது போன்று நீர் எமக்குத் தருவதாகக் கூறிய உமது வாக்குறுதியை நிறைவேற்றுவீரா?

முனாப் நுபார்தீன்.

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...