அளவில்லா அருளாளன் நிகரில்லா அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெரால்..
அல்-ஹதீஸ் விளக்கம்.
காலம் அறிந்து கருமமாற்றுவோம்
காலம் என்பது மனித வாழ்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். இந்த காலமின்றி மனித வாழ்வு கிடையாது மனித வாழ்வென்பதே காலம்தான் ஆதலால்தான் இஸ்லாம் இந்தக்காலத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும்ää எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்துää சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துää மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)அல்-குர்ஆன் : 103: 1-3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நாளை மறுமையில் ஒரு அடியானுடைய பாதம் நான்கு கேள்விகளுக்குப் பதிலழிக்காத வரை நகராது.
1. அவனது வாழ்க்கை அதனை எதில் கழித்தான்.
2. அவனது தேகம் அதனை எதில் பயன்படுத்தினான்.
3. அவனது கல்வியறிவு அதனைக் கொண்டு என்ன செய்தான்.
4. அவனது பொருளாதாரம் அதனை எங்கிருந்து சம்பாதித்தான் எதிலே செலவு செய்தான்.(நூல் : திர்மிதி)
மேற்ப்படி நபிவழிச் செய்தி நாளை மறுமையில் ஒரு மனிதன் அவனுக்கு வழங்கப்பட்ட நான்கு வகை அருட்களுக்குப் பதில் சொல்லாத வரை அந்த இடத்திலிருந்து தனது பாதத்தை அகற்ற முடியாது என்று கூறுகின்றது. அதில் முதலாவது அவனுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்கை எனும் காலமாகும்.
எனவே நாம் முடிந்த வரை எமது காலங்களைப் பாதுகாத்து நல்லறங்களில் கழிப்பதற்கு முயற்சித்தல் வேண்டும் அவ்வாறே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கால சூழ்நிலைகள் பற்றியும் நாம் தெரிந்திருத்தல் அவசியமாகும். அப்போதுதான் நாம் சரியான முறையில் எமது காலத்தை நிர்வகிக்க முடியும்.
அந்த வகையில் இஸ்லாத்திற்கு சற்று முற்பட்ட காலம் முதல் உலக முடிவு நாள் வரை ஏற்படவிருக்கும் காலங்கள் பற்றியும் அந்தக் காலங்களுக்கு நாம் எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் நபி (ஸல்) அவர்கள் எமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். எனவே அவற்றைத் தெரிந்து சரியாகப் புறிந்து காலமறிந்து கருமமாற்றுதல் நமது கடமையாகும்.
நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு :
நபி (ஸல்) அவர்களுக்கும் ஹ{தைபா பின் யமான் (ரழி) அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சம்பாசனையினை ஹ{தைபா பின் யமான் (ரழி) அவர்கள் இவ்வாறு இவ்வாறு விபரிக்கின்றார்கள்:
ஹ{தைபா பின் யமான் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் : மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றியே கேட்க்கக் கூடியவர்களாக இருந்தார்கள் நான் தீமைகள் பற்றியே கேட்க்கக் கூடியவனாக இருந்தேன் அவை என்னைப் பற்றிக் கொள்ளக் கூடும் எனும் அச்சத்தின் காரணமாக.
அல்லாஹ்வின் திருத் தூதர் அவர்களே நாம் அறியாமையிலும் தீமைகளிலும் இருந்தோம் எனவே அல்லாஹ் இந்த நன்மையை எமக்குக் கொண்டு சேர்த்தான் இந்த நன்மையின் பின் தீமைகள் தோன்றுமா? என்று நான் கேட்டேன்.
அதற்க்கு ஆம் என்று கூறினார்கள்.
நான் அந்தத் தீமைக்குப் பின் நன்மை உண்டாகுமா என்று கேட்டேன்
அதற்கு ஆம் அதிலே தெளிவின்மை இருக்கும் என்று கூறினார்கள்
நான் தெளிவின்மை என்றால் என்ன என்று கேட்டேன்.
அதற்க்கு ஒரு கூட்டம் எனது முன்மாதிரி அல்லாததை முன்மாதிரியாகவும் எனது வழிமுறை அல்லாததை வழிமுறையாகவும் கொண்டிருப்பார்கள் அவர்களிலிருந்து நீ தெரிந்து கொண்டு வெறுப்பாய் என்று கூறினார்கள்.
அப்போது நான் அந்த நன்மைக்குப் பின்னர் தீமை ஏற்படுமா? என்று கேட்டேன்.
அதற்கு ஆம் சில அழைப்பாளர்கள் நரகின் வாயிற்களில் இருந்து கொண்டு அழைப்பார்கள் யார் அதற்குப் பதிலழிக்கின்றாரோ அவரை அதிலே பிரவேசிக்கச் செய்வார்கள்.
அப்போது நான் அவர்களைப் பற்றி எனக்கு விபரியுங்கள் என்றேன்.
அதற்கு ஆம் எமது வழித்தோன்றல்களான எமது மொழியைப் பேசக்கூடிய ஒரு கூட்டம் என்று கூறினார்கள்.
அதற்க்கு நான் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அதனை நான் சந்தித்தால் ( நான் என்ன செய்ய வேண்டும் என்று) கருதுகின்றீர்கள் என்று கேட்டேன்.
அதற்க்கு முஸ்லிம்களின் கூட்டத்தையும் அவர்களின் தலைவரையும் பற்றிக் கொள் என்று கூறினார்கள்.
அதற்க்கு நான் அவர்களுக்கு ஒரு கூட்டமைப்பும் தலைவரும் இல்லாதிருந்தால் என்று கூறினேன்.
அதற்க்கு நீ அந்தப் பிரிவுகள் அத்தனையையும் விட்டு விலகி விடு ஒரு மரத்தின் வேரைக் கவ்விக்கொண்டு அதே நிலையில் உனக்கு மரணம் ஏற்ப்படாலும் சரி என்று கூறினார்கள்.(நூல் : முஸ்லிம்)
மேற்படி நபி வழிச் செய்தி பின் வரும் ஐந்து வகையான கால சூழலைப் பற்றி விவரிக்கின்றது.
1. நபி (ஸல்) அவர்களுக்கு முற்பட்ட அறியாமைக்காலம்
2. நபி (ஸல்) அவர்களது காலமும் அதனைத் தொடர்ந்து வரக்கூடிய இரண்டு நூற்றாண்டுகளுமாகிய மிகச் சிறந்த மூன்று நூற்றாண்டு காலம்
3. அதற்கடுத்து வரக்கூடியதான ஒரு தீய காலம்
4. அதற்கடுத்து வரக்கூடியதான நன்மையும் தீமையும் கலந்த தெளிவற்ற ஒரு காலம்.
5. அதற்கடுத்ததாக வரக்கூடிய தீய காலம்
மேற்படி ஐந்து வகையான காலங்களில் முதலாவது காலமாகிய நபி (ஸல்) அவர்களுக்கு முற்பட்ட அறியாமைக்காலமும் நபி (ஸல்) அவர்களின் வருகையுடன் உருவாக்கம் பெற்ற சிறந்த நூற்றாண்டு என்று வர்னிக்கப்படுகின்ற ஹிஜ்ரி முதல் மூன்று நூற்றாண்டுகளும் நமறிந்ததே.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் சிறந்தவர் எனது நூற்றாண்டில் உள்ளவராவார் பிறகு அதனைத் தொடர்ந்து வரக்கூடிய நூற்றாண்டில் உள்ளவராவார் பிறகு அதனைத் தொடர்ந்து வரக்கூடிய நூற்றாண்டில் உள்ளவராவார். (நூல் : புகாரி)
அந்த இரண்டு காலங்களும் தவிரவுள்ள ஏனைய மூன்று காலங்களிலும் முதல் காலமாகிய தீய காலமல்ல இது என்பதுவும் தெரிகின்றது. அதனை நாம் கடந்து வெகு தூரம் சென்றுள்ளோம் என்பது உறுதி ஆகவே எஞ்சியுள்ள இரண்டு வகையானக் காலங்களில் ஒன்றில்தான் நாம் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே இன்றுள்ள பிரச்சினை நாம் அவற்றுள் எந்தக் கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதுதான்.
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நான்காம் காலகட்டமாகிய நன்மையும் தீமையும் கலந்த தெளிவற்ற காலமாகவிருந்தால் அவ்வளவு தூரம் பிரச்சினை அல்ல ஏனெனில் அத்தகைய காலத்தை நபி (ஸல்) அவர்கள் கெட்ட காலம் என்று கூறாது நல்ல காலம் என்றே கூறியுள்ளார்கள். எனவே முடிந்த வரை ஒவ்வொரு தனிமனிதனும் இயக்கங்கள் குழுக்கழும் அல்-குர்ஆன் அல்-ஹதீஸைப் பின்பற்றி வாழ்வதற்கு முயற்ச்சித்தல் வேண்டும் அவ்வாறு முற்படுகின்ற போது தத்தமது ஆய்வுகளுக்கேற்ப்ப ஏதும் தவறுகள் பிழைகள் ஏற்பட்டாலும் அவற்றை நாம் ஏற்றுக் கொண்டு அதிலிருந்து தௌபா செய்து மீண்டு விடுதல் வேண்டும் அப்போது அவற்றை அல்லாஹ் மன்னித்துவிடக் கூடும்.
அல்லாஹ் கூறுகின்றான் : வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும்ää நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும்ää பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.(அல்-குர்ஆன் : 9:102.)
அதே நேரம் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது இறுதி காலகட்டமாகிய தீய காலமாகவிருந்தால் அப்போது நாம் முஸ்லிம்களின் தலைமைக்குக் கட்டுப்பட்டு முஸ்லிம்களின் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுதல் அல்லது அவ்வாறான ஒரு தலைமையும் கூட்டமைப்பும் முஸ்லிம்களிடம் காணப்படாதவிடத்து அனைத்துவிதமான பிரிவுகளையும் புறக்கணித்து தனியா தன்னையும் தனது மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.இதனைத்தான் நபி (ஸல்) அவர்கள் மேற்படி நபி வழிச் செய்தியில் நீ அந்தப் பிரிவுகள் அத்தனையையும் விட்டு விலகி விடு ஒரு மரத்தின் வேரைக் கவ்விக்கொண்டு அதே நிலையில் உனக்கு மரணம் ஏற்ப்படாலும் சரி என்று கூறினார்கள்.
அவ்வாறு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தை ஆராய்ந்து பார்கின்ற போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய இந்த நூற்றாண்டு அதிகமான கலங்கல் தன்மை நிறைந்த தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. எனவே இது இறுதியில் வரக்கூடிய தீய காலமன்று அதற்கு முன்னால் தோன்றக்கூடிய நன்மையும் தீமையும் கலந்த கலங்கல் தன்மை கொண்ட தெளிவற்ற காலமாகத்தான் இன்றைய காலம் இருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது. ஆதலால்தான் இன்றைய காலம் தீயோர்களிலிருந்து நல்லோர்களைப் பிரித்தறிய முடியாத ஒரு காலமாக உள்ளது. அதிலும் பாமர மக்களைப் பொறுத்தவரை உண்மையையும் பொய்யையும் பிரித்தறிந்து கொள்வதில் அவர்கள் படும் பாடு மிகவும் வேதனைக்குரியதே.
இவர்களின் இந்த நிலைக்குக் காரணம் நமது மார்க்க அறிஞர்கள்தான் என்றால் அது மறுப்பதற்க்கில்லை. ஏனெனில் தங்களை மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள் தங்களுக்குள்ளேயே உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது பலக் குழுக்களாகவும் பலப் பிரிவுகளாகவும் பிளவு பட்டு சமூகத்தையும் தங்கள் மனம் போல் கூறு போட்டு ஆளுக்காள் ஒவ்வொரு திசையில் பயனித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு தனிமனிதனும் இயக்கமும் குழுவும் தாம் கொண்ட கொள்கைதான் சரியானது என்று தம்மட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களைத்தான் நபி (ஸல்) அவர்கள் மேற்படி முன்னறிவிப்பில் “”ஒரு கூட்டம் எனது முன்மாதிரி அல்லாததை முன்மாதிரியாகவும் எனது வழிமுறை அல்லாததை வழிமுறையாகவும் கொண்டிருப்பார்கள் அவர்களிலிருந்து நீ அவற்றைத் தெரிந்து வெறுப்பாய்” என்று கூறினார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி விளக்கம் தனித்தனிக் கொள்கை இந்நிலையில் பாமரர்கள் உண்மையை அறிந்து கொள்ள முடியாது குளம்பிப் போய் நாம் யார் சொல்வதை கேட்டு நடப்பது என்று கேட்கின்றார்கள். அது மாத்திரமின்றி எமது இந்த முறண்பாடு மாற்று மதத்தவர்களும் நமது மார்க்கத்தை விமசிக்க வழி கோலியுள்ளது.
இன்றைய இந்த நிலையை அப்படியே விட்டு விடுவோமாக இருந்தால் காலக்கிரமத்தில் அது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த தீய காலகட்டத்திற்கு நம்மை நகர்த்தி சென்று விடும் என்பதில் சந்தேகம் கிடையாது. எனவே நாம் அனைத்துத் தரப்பினர்களும் நமது கருத்து வேறுபாடுகளைக் கடந்து நின்று முஸ்லிம்களின் கூட்டமைப்பதையும் தலைமைத்துவத்தினையும் உருவாக்குதல் வேண்டும்.
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக