வெள்ளி, 24 அக்டோபர், 2014

நமது எதிர்கார அரசியல் நகர்வு எவ்வாறு அமைதல் வேண்டும்.


நமது எதிர்கார அரசியல் நகர்வு எவ்வாறு அமைதல் வேண்டும்.
 
இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பாராளு மன்றத்திற்கான தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன அனேகமாக எதிர்வரும் 2015 ம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மீண்டும் எவ்வாறு மக்களை ஏமாற்றி தங்களது அதிகாரத்தினை தக்க வைத்துக் கொள்வது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதே நேரம்; மஹிந்த சிந்தனையால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களாகிய எமக்கு அறிவுபூர்வமாக சிந்தித்து ஆக்கபூர்வமானதும் தீர்க்கமானதுமான் முடிவுகளை எடுக்க வேண்டிய தீர்மானகரமான கால சூழ்நிலை உருவாகி உள்ளது என்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டே இருக்கின்ஙேறாம் இதில் மாற்றுக்கருத்துடைய எந்தவொரு முஸ்லிமும் இருக்க மாட்டான் என்றே கருதுகின்றோம்.
இப்படியான இந்த அரசியல் கால சூழ்நிலையில் விலைக் குறைப்புக்களும் மக்கள் சேவைகளும் அபிவிருத்திப் பணிகளும் மிகவும் மும்முரமாகவே நடை பெற்றுக் கொண்டிருப்பது போன்றே நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் பொளப்பு நடாத்திக் கொண்டிருக்கும் சில ஒப்பந்தக்காரர்கள் உட்பட அதிகமான அரசியல்வாதிகளும் அரசாங்கம் பாதை அமைத்துக் கொடுத்தது குழங்கள் போக்குகள் நிர்மானித்துக் கொடுத்தது இன்னும் இது போன்ற பலதரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என்று கூறி அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
அபிவிருத்தியும் அதன் அந்தரங்கமும்.
அபிவிருத்திப் பணிகள் என்று அரசாங்கம் நெடுச் சாலைகள் அமைப்பதும் குளங்கள் கட்டுவதும் பாலங்கள் போக்குகள் நிர்மாணிப்பதும் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக அரசியல்வாதிகளும் அவர்களின் குடுப்பத்தினர்களும் அவர்களைச் சார்திருப்பவர்களும் அவர்களுக்குக் காலத்துக்கக் காலம் வக்காலத்து வாங்கும் இந்த ஒப்பந்தக்காரர்களும் பொருளீட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இதுதான் இந்த அபிவிருத்தியின் அந்தரங்கம்.
நான் உங்கள் ஊருக்கு ரோட்டு போட்டேன் குழம் கட்டினேன் போக்கு போட்டேன் என்று பெருமை பேசுபவர்கிடம் அவற்றை நீங்கள் சேவையாக செய்தீர்களா? அல்லது தொழிலாக செய்தீர்களா? என்று கேட்க விரும்புகின்றோம்;.
அத்துடன் நமது முஸ்லிம் கட்சிகளுக்கு மத்தியில் பேரம் பேசல்களும் கூட்டு ஒப்பந்தங்களும் கட்சித் தாவல்களும் நிகழ்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. இத்தகைய ஒப்பந்தக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. இவர்களின் சிந்தனை எல்லாம் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் விலையாகக் கொடுத்தேனும் தனது ஆட்சிக் கதிரையையும் அதிகாரத்தினையும் தக்க வைத்து தான் சுகுபோகமாக வாழ வேண்டும் என்பதுதான்.
எனவே முஸ்லிம்களாகிய நாம்; இந்த சுயநலமிகளின் கதைகளைக் கேட்டு மீண்டும் மீண்டும் நம் சமூகத்தை அடிமைகளாக்க துணை போய்விடக் கூடாது என்று நம் சமூகத்தின் அணைத்துத் தரப்பினர்களையும் மிகவும் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம்.
அறிவும் புத்தியும் மனசாட்சியும் உண்மையான சமய பற்றும் சமூக உணர்வும் கொண்ட வெட்க்கம் உரோஷம் மானமுள்ள எந்தவொரு முஸ்லிமும் இதன் பிறகு ஒரு போதும் மஹிந்தவுக்கோ அல்லது அவரைச் சார்ந்தவர்களுக்கோ வாக்களிக்கவோ வாக்கு கேட்கவோ மாட்டான். ஏனெனில் இலங்கை வரலாற்றில் மஹிந்த அரசு முஸ்லிம்களுக்கு இழைத்த இன்னும் இழைத்துக் கொண்டிருக்கும் துண்பங்களும் துயரங்களும் அனைத்தையும் மிகைத்ததே. சிறிதேனும் மூளையுள்ள எந்தவொரு முஸ்லிமும் இதன் பிறகு எக்காரணம் கொண்டும் மஹிந்தவுடைய எந்தவொரு வாக்குறுதியையும் நம்பி ஏமாற மாட்டான்.
மஹிந்த அரசு நாட்டை பௌத்தத் துறவிகளின் அணுசரனையுடன் தனி பௌத்தமயமாக்கலின் பக்கம் நகர்த்திக் கொண்டிருக்கின்றது என்பது புத்தியுள்ள அனைவரும் அறிந்ததே. பௌத்தத் துறவிகளும் இதனை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மிகக்கச்சிதமாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.இந்நிலையில் தொடர்ந்தும் மஹிந்த அரசை ஆதரிப்பதென்பது இலங்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக செயல்படுதல் என்பதற்கான வெளிப்படையான சான்றாகும்.
அவர்கள் எந்த அளவு பிரயத்தனங்களை மேற்கொண்ட போதிலும் நிச்சயமாக அவர்களால் ஒன்றுபடவே முடியாது என்பதை ஒரு ஈமானியன் மறந்து விடாது இந்த சவாலுக்கு முகம் கொடுக்கத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் : கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள்ää அவர்களுக்குள்ளேயே போரும்ää பகையும் மிகக் கடுமையானவைää (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள்ää சிதறிக் கிடக்கின்றன - இதற்குக் காரணம்; மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.(அல்-குர்ஆன் : 59:14)
எனவே கடந்த தேர்தல்களில் நாம் அடைந்து கொண்ட அனுபவங்கள் அதனூடாக நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆகியவற்றை முன்னுதாரணமாக வைத்து எதிர்வருகின்ற தேர்தல்களில் செயல்படுதல் வேண்டும் அதுவே அறிவுடமையான செயலாக இருக்கும்.
அவ்வாறின்றி இம்முறையும் யாராவது தம்தமது சுயநலன்களை மாத்திரம் கருதி அற்ப்ப இலாபங்களுக்காகவும் சமூகத்திற்குத் துரோகம் செய்ய நினைத்தால் நிச்சயம் அல்லாஹ்வின் தண்டனை அத்தகயவர்களை வெகு விரைவில் வந்தடைந்தே தீரும் என்பதில் சந்தேகம் கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

முனாப் நுபார்தீன்

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...