செவ்வாய், 17 ஜூன், 2014

இனவாதத்திற்க்கெதிரான கவன ஈர்ப்புப் போராட்டம்.

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு

இலங்கையில் அனுராதபுர அட்டப் பொக்குன ஸியாரத் தகர்புடன் ஆரம்பமான இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான அத்து மீறல்கள் இன்று அலுத்கமயில் இனக்கலவரமாகப் பரினாமம் பெற்று மூன்று முஸ்லிம் உயிர்களையும் பல மில்லியன் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களையும் பலி கொண்டுள்ளதுடன் நூற்றுக்கனக்கான நம் சகோதரர்களை பாசிச கும்பல்களின் அடிதடிகளுக்கும் ஆளாக்கியுள்ளதானது இந்த நாட்டின் முஸ்லிம் விரோத போக்குடையக் காவிக் காடையர்களின் அராஜகத்தின் அதி உச்ச கட்ட வளர்ச்சியினைப் பறைசாட்டுவதாகவுள்ளது.

இந்நிலையில் இந்த நாட்டின் ஜனாதிபதியவர்கள் வழமை போன்று சட்டத்தை யாரும் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று அவரின் வழமையான பளய பல்லவியையே இம்முறையும் பாடிக் கொண்டிருக்கின்றார்.

அவ்வாறே ஏனைய அரசத் தலைவர்களும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பௌத்த பிக்குகள் அரசத் தலைவர்கள் அதிகாரிகள் புத்திஜீவிகள் போன்றோரை உள்ளடக்கிய அமைப்பொன்றை ஏற்ப்படுத்தி குறித்தப் பிரதேசத்தில் இதன் பிறகு இவ்வாறான இனக்கலவரங்கள் ஏற்படாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவும் அவர்களின் பளய பல்லவிதான்.

உண்மையில் ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டில் இனவாதம், இனக்கலவரம் போன்றவைகளை விரும்பவில்லை என்பது உண்மையாகவிருந்தால் அவர் செய்ய வேண்டிய முதற்பணி இவ்வாறான இனவாதங்களை அதிகாரபூர்வமாக அரங்கேற்றிக் கொண்டிருக்க்கக் கூடிய பொது பள சேனா என்ற அமைப்பைத் தடை செய்து அதன் செயலாளர் அதி பயங்கரவாதி ஞானசாராவைக் கைது செய்ய வேண்டும். அவ்வாறின்றேல் ஜனாதிபதி ஒரு நயவஞ்சகர் என்றே கூற வேண்டியுள்ளது.

எனவே மேற்படி சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பு கூட்டம் ஒன்று இன்ஷா அல்லாஹ் இன்று 17 -06 -2014 ம் திகதி பி.ப. 5.00 மணிக்கு கிரிபாவை ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு அருகாமையில் நடாத்துவதற்க்குத் தீர்மாணித்துள்ளோம். எனவே அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் 

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...