வியாழன், 19 ஜூன், 2014

கிரிபாவையில் கவன ஈர்ப்க் கூட்டம்

கிரிபாவையில் கவன ஈர்ப்க் கூட்டம்

அண்மைக் காலமாக பொது பள சேனா எனும் இனவாதப் பாசிசக் கும்பலினது தொடர்ச்சியான அராஜகத்திற்க்கும் தாக்குதல்களக்கும் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பல்முணையிலும் முகம் கொடுத்துக் கொண்டு வருகின்றோம். அதன் அதி உச்சகட்டமாக கடந்த 2014- 06-15; திகதி நான்கு உயிர்களையும் பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களையும் பலி கொடுத்துள்ளோம்.
இந்நிலையில் உலகயாவிய அளவில் நமது சகோதரர்கள் பல்வேறுபட்ட கவன ஈர்ப்புப் பேரணிகளையும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்து இதனை உலகமயப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் நாமும் எமது சக்திக்குட்பட்ட அளவில் எமது கிராமத்தை மைய்யப்படுத்தி சிறிய அளவிலான ஒரு கவன ஈர்ப்புக் கூட்டம் ஒன்றினை நேற்றய முன்தினமான 17-06-2014 ம் திகதி ஏற்பாடு செய்திருந்தோம்.
இக்கூட்டத்தை எமது பள்ளிவாயலுக்கு அருகாமையில் நடாத்துவதற்கு நாம் முற்பட்ட போது எமது கிராமத்தைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் அதனைத் தடுத்துத் தற்பொழுது குறித்தப் பிரதேசத்தில் எவ்விதப்பிரச்சினையும் கிடையாது அங்கு பூரண அமைதி நிலவுகின்றது எனவே இவ்வாறானதொரு கூட்டம் தேவையற்ற ஒன்று என்று வாதித்தார்கள்.
இறுதியில் நாம் எமது தீர்மாணத்தில் உறுதியாக இருப்பதனை அறிந்த அவர்கள் எம்மை குறிப்பிட்டக் கூட்டத்தினைப் பாதையில் நடாத்த வேண்டாம் என்றும் அப்படி நடாத்தியே ஆக வேண்டும் என்றிருந்தால் அதனைப் பள்ளிவாயலில் ஒலிபெருக்கியின்றி நடாத்துமாறும் ப.ப.சபைத் தலைவர் ஊடாக வேண்டிக் கொண்டார்கள்.
அந்த வேண்டுகோலுக்கு இணங்க நாம் எமது கவன ஈர்ப்புக் கூட்டத்தினை அல்லாஹ்வின் அருளால்; பள்ளி வாயலில் நடாத்தி முடித்தோம். மேற்படி கூட்டத்திற்கு அதிகமான இழைஞர்களும் சாதாரண பாமரர்களும் பங்கேற்றனர் என்றாலும் படித்தவர்களும் நாம் புத்திஜீவிகள் என எவர்களை எண்ணி இருந்தோமோ அவர்கள் எவரையும் குறித்தக் கூட்டத்தில் பார்க்க முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதே.
இப்படியான பல்லுருவிகளான நமது பிரமுகர்களே நமது தொடர் தோல்விகளுக்கு மிக முக்கிய காரணமாகும் என்றால் அது மிகையாகாது.
என்றாலும் நம்மவர்களின் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இக்கூட்டத்தினை நடாத்தி முடிக்க அருள் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
முனாப் நபார்தீன். 

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...