சனி, 24 மே, 2014

அகபுறச் சுத்தத்தின் அவசியம் உணர்வோம்.



அகபுறச் சுத்தத்தின் அவசியம் உணர்வோம்.

இஸ்லாம் எவ்வாறு புறச் சுத்தத்தை வலியுறுத்துகின்றதோ அவ்வாறே அகச் சுத்தத்தையும் கடுமையாகவே வலியுறுத்துகின்றது.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நபித் துnhழர்கள் சகிதம் இரண்டு மண்ணறைகளைக் கடந்து சென்றார்;கள் அப்போ அந்த இரண்டு மண்ணறைவாசிகளும் வேதனைச் செய்யப்பட்டுக் கொண்டிருப்பது நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் வேதனைச் செய்யப்படுவது பெரும்பாவங்களுக்காக அன்றி சிறுபாவங்களுக்காவே என்று கூறிவிட்டு இருவருள் ஒருவர் சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாத காரணத்திற்க்காகவும் மற்றவர் பிறரைப் பற்றிப் புறம் பேசித்திரிந்ததன் காரணத்திற்க்காகவுமே  வேதனை செய்யப்படுகின்றார்கள் என்று கூறினார்கள்.

மேற்படி சம்பவத்திலிருந்து ஒருவர் சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாது புறச்சுத்தத்தில் கவனயீனமாக இருந்ததற்க்காகவும் மற்றவர் பிறரைப் பற்றிப் புறம் பேசியதன் மூலம் அகச்சுத்தத்தில் கவனயீனமாக இருந்ததன் காரணமாகவும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

எம்மில் அனேகர் இந்த இரண்டு வகையான அசுத்தம் பற்றி மிகவும் இலகுவாகவே கருதிக் கொண்டிருப்பதனைப் பார்க்கின்றோம்.

நண்பர்களே அகம் புறம் ஆகிய இரண்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்ச்சி எடுப்போமாக.

முனாப் நுபார்தீன்

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...